மகா கவிதை நூல்

இதுவரை எந்த ஊடகத்திலும் வெளிவராத கவிஞர் வைரமுத்துவின் புத்தம் புதிய படைப்புக்கு ‘மகா கவிதை’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. நூலின் தலைப்பும், முகப்பும் வெளியிடப்பட்டிருக்கின்றன. கவிஞர் வைரமுத்துவின் 39-ம் படைப்பு இது. நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவரும் கவிஞர் வைரமுத்துவின் கவிதை நூல் இதுவாகும். நிலம் – நீர் – தீ – வளி – வெளி எனும் ஐம்பூதங்களையும் ஆராய்ந்து படைத்த கவிதையாக ‘மகா கவிதை’ அறியப்படுகிறது.

மகா கவிதை நூல்மகா கவிதை நூல்

தமிழில் இந்த வகை இலக்கியத்தில் இதற்கு முன் இல்லாத புதுமுயற்சி என்று சொல்லலாம். சூர்யா பதிப்பகம் பதிப்பிக்கும் இந்த நூல் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இது குறித்து போட்டி ஒன்றை கவிஞர் வைரமுத்து அறிவித்துள்ளார்.

‘மகா கவிதை’ என்னும் தலைப்பில் உள்ள ஐந்து எழுத்துகளில் 5 வார்த்தைகள் ஒளிந்துள்ளதாகவும் அதை கண்டுபிடிப்பதற்கு 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். புத்தக வெளியீட்டு விழாவில் அந்த பரிசுத் தொகை வழங்கப்படும் என்றும், mahaakavi.vairamuthu.gmail.com என்ற முகவரிக்கு பதிலை அனுப்புமாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி: காமதேனு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!