அடடே

 அடடே

அடடே 

உலகிலேயே இந்தியாவில் தான் மூடநம்பிக்கைகள் அதிகம் உள்ளது என்று நீங்கள் நினைத்தால், அந்த எண்ணத்தை உடனே மாற்றிக் கொள்ளுங்கள். ஏனெனில் இந்தியாவில் மட்டுமின்றி, உலகின் அனைத்து பகுதிகளிலும் மூடநம்பிக்கைகளானது பாரம்பரிய பழக்கவழக்கம் என்ற பெயரில் காரணமே தெரியாமல் பின்பற்றப்பட்டு வருகிறது. அதில் ஓர் ஆச்சரியம் என்னவென்றால், இன்றைய தலைமுறையினரும் அதை நம்பி பின்பற்றி வருகின்றனர் என்பது தான்.



இத்தகைய மூடநம்பிக்கைகள் நாம் மேற்கொள்ளும் சிறு செயல்களில் கூட நிறைந்துள்ளன. உதாரணமாக, இரவு நேரத்தில் சூயிங் கம் சாப்பிடக்கூடாது, நள்ளிரவில் திராட்சை சாப்பிட்டால் அதிர்ஷ்டம் கொட்டும், பறவையின் எச்சம் தலையில் விழுவது அதிர்ஷ்டத்தை அளிக்கும், சனிக் கிழமைகளில் முடி வெட்டக்கூடாது, மாலை வேளைகளில் நகங்களை வெட்டக்கூடாது போன்றவை குறிப்பிடத்தக்கவை. இப்போது உலகில் மக்கள் இன்றும் நம்பி பின்பற்றி வரும் சில மூடநம்பிக்கைகள் குறித்து காண்போம்.

இரவு நேரத்தில் சூயிங் கம் சாப்பிடக்கூடாது

துருக்கியில் ஒரு வித்தியாசமான மூடநம்பிக்கை உள்ளது. அது தான் இரவு நேரத்தில் யாரும் சூயிங் கம்மை சாப்பிடக்கூடாது என்பது. ஒருவேளை இப்படி சூயிங் கம்மை இரவில் சாப்பிட்டால், அது இறந்த சடலத்தை சாப்பிடுவதற்கு சமமாக துருக்கி மக்கள் கருதுகின்றனர்.

இந்தியர்கள் கண்மூடித்தனமாக நம்பி பின்பற்றி வரும் சில மூடநம்பிக்கைகள்!

சனிக்கிழமைகளில் முடி வெட்டக்கூடாது

இந்து மதத்தினரிடம் இருக்கும் ஒரு பொதுவான நம்பிக்கை தான் சனிக்கிழமைகளில் முடி வெட்டக்கூடாது என்பது. இதற்கு காரணமாக அவர்கள் கூறுவது, சனிக்கிழமைகளில் முடியை வெட்டினால், அத்தினத்தின் சிறப்பாகக் கருதப்படும் சனி பகவானின் கோபத்திற்கு உள்ளாகக்கூடும் என்பதாம்.

ஆட்டிறைச்சி சாப்பிட்டால் பெண்களுக்கு தாடி வளரும்

ருவாண்டாவில் உள்ள மக்களின் விசித்திரமான ஓர் நம்பிக்கை, ஆட்டிறைச்சி சாப்பிட்டால் பெண்களுக்கு தாடி வளரும் என்பது. இதன் காரணமாக, ருவாண்டாவில் வாழும் பெண்கள் ஆட்டிறைச்சி சாப்பிட தடை செய்யப்பட்டுள்ளது. என்ன ஒரு வித்தியாசமான மூடநம்பிக்கை என்று பாருங்கள்.

குதிரை லாடம் அதிர்ஷ்டம் தரும்

உலகில் உள்ள மற்றொரு வித்தியாசமான நம்பிக்கை, வீட்டின் படுக்கையறையில் குதிரை லாடத்தின் முனைகள் மேலே நோக்கியவாறு தொங்கவிட வேண்டும் என்பது. இதனால் வீட்டில் அதிர்ஷ்டம் பொழிவதோடு, கெட்ட சக்திகள் வீட்டில் இருந்து விலகுமாம். இதற்கு காரணம் குதிரை லாடத்தில் ஏழு துளைகள் உள்ளன. ஏழு என்பது அதிர்ஷ்ட எண் மட்டுமின்றி, இந்த லாடம் இரும்பினால் ஆனது. ஆகவே இத்தகைய குதிரை லாடத்தை வீட்டினுள் தொங்கவிட்டால், கெட்ட சக்திகள் வீட்டில் இருந்து வெளியேறிவிடும் மற்றும் இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தை பெற முடியும்.

மூடநம்பிக்கைகளுக்குப் பின்னான அறிவியல் மற்றும் மக்கள் ஏன் இதை இன்னும் நம்புகிறார்கள்?

நள்ளிரவில் திராட்சை சாப்பிடுவது நல்லது

பொதுவாக புத்தாண்டு என்றால் நள்ளிரவில் ஒருவரை ஒருவர் வாழ்த்துவது வழக்கம். ஆனால் ஸ்பெயினில் ஒரு வித்தியாசமான வழக்கம் உள்ளது. அது என்னவெனில் புத்தாண்டு என்றால், யாரும் வாழ்த்தை பரிமாறிக் கொள்ளமாட்டார்களாம். மாறாக 12 திராட்சைப் பழங்களை நள்ளிரவில் சாப்பிடுவார்களாம். அது ஏன் 12 திராட்சை என்று நீங்கள் கேட்கலாம். வேறொன்றும் இல்லை, 12 திராட்சையானது வருடத்தின் 12 மாதங்களையும் குறிக்குமாம். இந்த 12 திராட்சைகளை சாப்பிட்டால், வருடத்தின் அனைத்து மாதங்களிலும் அதிர்ஷ்டம் கொட்டுமாம்.

ஆண்கள் லெட்யூஸ் சாப்பிடக்கூடாது

லெட்யூஸ் என்பது ஆரோக்கியமான கீரை வகையைச் சேர்ந்தது. உலகின் சில பகுதிகளில் இந்த கீரையைப் பற்றிய ஓர் கட்டுக்கதை உள்ளது. அது என்னவெனில், குழந்தைப் பருவத்தில் லெட்யூஸ் கீரையை சுவைத்த ஆண்கள், திருமணமான பின் அந்த கீரையை சாப்பிடக்கூடாதாம். ஏன் என்று கேட்டால், அது ஆண்களின் ஆண்மைத் தன்மையைக் குறைத்து, மலட்டுத்தன்மையை உண்டாக்கிவிடுமாம். என்ன ஒரு முட்டாள்தனமான நம்பிக்கை என்று பாருங்கள்.

பிரபலமான சில இந்திய மூடநம்பிக்கைகளும்… அதற்கான காரணங்களும்…

பறவையின் எச்சம் பணக்காரர் ஆக்கும்

ரஷ்யாவில் உள்ள ஒரு மூடநம்பிக்கை, பறவையின் எச்சம் தலையில் விழுவது அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது. அதுவும் தலைக்கு மேலே பறவை பறக்கும் போது, அதன் எச்சம் ஒருவரது தலையில் விழுந்தால், அவருக்கு அதிர்ஷ்டம் கொட்டுவதோடு, அவர் விரைவில் பணக்காரராகி விடுவார் என்ற நம்பிக்கை ரஸ்ய மக்களிடையே உள்ளது.

திருமணத்தின் போது முகத்திரை அணிவது

உலகின் சில பகுதிகளில் திருமணத்தின் போது மணப்பெண்ணின் முகத்தை மறைக்கும் வண்ணம் முகத்திரை அணிந்து, திருமணம் செய்வதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். இப்படி திருமணத்தின் போது முகத்திரை அணிவதால், தீய சக்திகள் மணப்பெண்ணை அண்டாமல் இருக்கும் என்று ரோமன் வரலாறு கூறுகிறது.

வித்தியாசமான பறவை

Wryneck அல்லது Jynx Torquilla என்பது மரங்கொத்தி பறவைக் குடும்பத்தைச் சேர்த்தது. இந்த பறவையின் சிறப்பு என்னவென்றால், இந்த பறவையால் தனது தலையை தாராளமாக திருப்ப முடியும். இந்த பறவை ஐரோப்பா மற்றும் ஆசியா பகுதிகளில் காணப்படும். இந்த பறவை இருக்கும் பகுதியைச் சுற்றி வாழும் மக்களிடையே, இப்பறவைக் குறித்த ஓர் மூடநம்பிக்கை உள்ளது. அது இந்த பறவை ஒருவரது முன் வந்து, தலையைத் திருப்பினால், அது மரணத்திற்கான அறிகுறியாக கருதப்படுகிறது.

வீட்டினுள் விசில் அடிப்பது கெட்டது

தீய சக்தி ஒருவரை எந்த வழியில் வேண்டுமானாலும் வந்து சேரும். லிதுவேனியன்களின் பிரபலமான நம்பிக்கைகளுள் ஒன்று, வீட்டினுள் இருக்கும் போது விசில் அடிக்கக்கூடாது. ஒருவேளை அப்படி விசில் அடித்தால், அது தீய சக்தியை தன்னை நோக்கி அழைப்பதற்கு சமமாக நம்பிக்கை கொண்டுள்ளனர். அதோடு அதை ஒரு மோசமான செயலாகவும் கருதுகின்றனர்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...