இன்றைய ராசி பலன்கள் ( 08 நவம்பர் 2023 புதன்கிழமை )

சோபகிருது வருடம் ஐப்பசி மாதம் 22 ஆம் தேதி புதன்கிழமை 8.11.2023,சந்திர பகவான் இன்று சிம்ம ராசியில் பயணம் செய்கிறார். இன்று காலை 09.19 வரை தசமி. பின்னர் ஏகாதசி. இன்று இரவு 08.43 வரை பூரம். பின்னர் உத்திரம். திருவோணம் அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.

மேஷம் : சுறுசுறுப்பாகவும் பரபரப்பாகவும் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும். மாலையில் குடும்பத்துடன் வீட்டில் தெய்வ வழிபாடு செய்வீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். வாழ்க்கைத்துணைக்காக செலவு செய்ய நேரிடும். சிவபெருமானை வழிபடு வது நன்று.

ரிஷபம் : புதிய முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவை. சொல்லிலும் செயலிலும் பொறுமையைக் கடைப் பிடிக்கவேண்டிய நாள். பிள்ளைகளால் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். மற்றவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. வீட்டில் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். உறவினர்களால் குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். ஷண்முகக் கடவுளை வழிபடுவதன் மூலம் சங்கடங்கள் குறையும்.

மிதுனம் : மனதில் தேவையற்ற வீண் குழப்பங்கள் ஏற்பட்ட வண்ணம் இருக்கும். குடும்பத்தில் சிறு பிரச்னை ஏற்படக்கூடும் என்றாலும், அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைக் கண்டிப்பாகத் தவிர்த்துவிடவும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வெளியில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும். விநாயகரை வழிபட தடைகள் விலகும்.

கடகம் : முற்பகலில் காரியங்களில் சிறு இழுபறி காணப்படும். புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது. காரியங்க ளில் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தந்தையின் தேவையை பூர்த்தி செய் வீர்கள். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். நண்பர்களிடம் கேட்ட உதவி கிடைக்கும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தம் நீங்கும். வேங்கடேசபெருமாளை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

சிம்மம் : தொடங்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றியே ஏற்படும் நாள். வாழ்க்கைத்துணையால் எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பிற்பகலுக்கு மேல் மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமை அவசியம். அம்பிகை வழிபாடு நலம் தரும்.

கன்னி : புதிய முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவை. எதிர்பார்த்த காரியத்தில் சிறு தாமதம் ஏற்பட்டாலும் சாதகமாக முடிந்துவிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாயின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். தாய்வழியில் எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைக் கும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். மகாலட்சுமி வழிபாடு நன்மை தரும்.

துலாம் : அதிகரிக்கும் செலவுகளுக்குத் தேவையான பணம் இருந்தாலும் தேவையற்ற செலவுகளும் ஏற்படும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். முருகப்பெருமானை வழிபட்டு இன்றைய நாளைத் தொடங்குவது சிறப்பு.

விருச்சிகம்  : மனதில் அதிகரிக்கும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். தாயின் உடல் நலனில் கவனம் செலுத்தவும். புதிய முயற்சிகளில் நன்கு சிந்தித்து ஈடு படவும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. நண்பர்க ளுக்காக செலவு செய்ய வேண்டி வரும். ஆஞ்சநேயரை வழிபட காரியங்கள் அனுகூலமாகும்.

தனுசு  :   . மன மகிழ்ச்சி தரும் நாள். கணவன் – மனைவிக்கிடையே இருந்த சிக்கல்கள் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்வீர்கள். உற்சாகமாகச் செயல்படுவீர்கள். விநாயகரை வழிபட காரியங்கள் சாதகமாக முடியும்.

மகரம் : குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பதில் அவசரம் வேண்டாம். தாய்வழி உறவினர் களால் செலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு சற்று கவலை தரும். வாழ்க்கைத் துணை கேட்டதை வாங்கித் தருவதன் மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர்கள். இன்று நீங்கள் சிவபெருமானை வழிபட பல வகைகளில் நன்மைகள் ஏற்படும்.

கும்பம் : இன்று தொடங்கும் செயல்களை முடிப்பதில் சற்று அலைச்சலும் சோர்வும் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வது ஆறுதல் தரும். அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பிற்பகலுக்குமேல் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். நரசிம்மரை வழிபட கூடுதல் நன்மைகள் ஏற்படும்.

மீனம் : காரிய அனுகூலம் உண்டாகும் நாளாக இருக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியக்கூடும். தந்தையின் மூலம் ஆதாயம் கிடைக்கும். சகோதரர் கேட்கும் உதவி யை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவும் பொருள்சேர்க்கையும் ஏற்படும். மகிழ்ச்சியான நாளாக இருக்கும். பைரவர் வழிபாடு நலம் சேர்க்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!