மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க அமைச்சரவை ஒப்புதல்! | தனுஜா ஜெயராமன்

 மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க அமைச்சரவை ஒப்புதல்! | தனுஜா ஜெயராமன்

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் பல லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், ஓய்வுதியதாரர்களும் பயன்பெறுவார்கள் என்று சொல்லப்படுகிறது.

விலைவாசி உயர்வை ஈடுகட்டும் வகையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணத்தின் கூடுதல் தவணையை 01.07.2023 முதல் வழங்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த உயர்வு 7 வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்ட ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையாகும்.

அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி நிவாரணம் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.12,857 கோடி செலவாகும். இதன் மூலம் 48.67 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 67.95 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்தி பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் 42% அகவிலைப்படி 46% ஆக உயரும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த அகவிலைப்படி ஜூலை 1ம் தேதி முன் தேதியிட்டு இந்த உயர்வு அமல்படுத்தப்படும் என ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் தகவல் அளித்துள்ளார்.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...