தொடரும் பட்டாசு ஆலை விபத்துக்கள்! | தனுஜா ஜெயராமன்

இன்றைய தினம் அரியலூர் அருகே நாட்டு பட்டாசு தயாரிக்கும் ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 8 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பட்டாசு இந்த ஆலையில் வழக்கம் போல் தொழிலாளர்கள் வெடிகள்  தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் வெடி தயாரிப்பில் ஈடுபட்டிருந்த பல தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.

தொடர்ந்து பட்டாசுகள் வெடித்துக்கொண்டுள்ளதால் உள்ளே செல்ல இயலாத நிலையில் தீயை அணைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஆலையில் பலர் சிக்கியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில மாதங்களாக சிவகாசி சுற்றுவட்டாரப்பகுதிகளில் பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்ட நிலையில் பட்டாசு குடோன்களிலும் வெடி விபத்து ஏற்பட்டு வருகிறது.

சனிக்கிழமையன்று ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசுக் கடைக்கு கன்டெய்னர் லாரியிலிருந்து வெடிகளை இறக்கியபோது ஏற்பட்ட தீ விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர். கடை உரிமையாளர் உள்ளிட்டோர் காயம் அடைந்தனர். மேலும், 11 வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு

மாதமே உள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் பட்டாசு உற்பத்தி செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. பட்டாசு விற்பனையும் சூடுபிடித்துள்ளது. பட்டாசு ஆலைகளில் வெடி விபத்தும் அதிகரித்து வருகிறது.

நாட்டு பட்டாசு தயாரிக்கும் ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தால் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்த அரியலூர் நகர காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!