நலிந்த கலைஞர்களுக்கு நல உதவி திட்டம் – முதல்வர் ஸ்டாலின்! | தனுஜா ஜெயராமன்

நலிந்த கலைஞர்களுக்கு மாதந்தோறும் நிதி வழங்கும் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 கலைஞர்களுக்கு தலா 3 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

சமூகத்தின் கட்டமைப்பை உற்று நோக்கி வேண்டுவோர் யார், வேண்டுவது எது என ஆராய்ந்து உற்ற நேரத்தில், உறுதுணையாய் நிற்கும் தமிழ்நாடு அரசுக்கும், அதை வழிநடத்திச் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் , கலையொன்றே வாழ்வாதாரமாய் வாழ்ந்துருகும் நலிந்த கலைஞர்களுக்கு சன்மானங்களையும், உதவிகளையும் திட்டமிட்டு செயல்படுத்தியமைக்காக தென்னிந்திய நடிகர் சங்கம் தன் மனமார்ந்த நன்றிகளை காணிக்கையாக்குகிறது. தொழில்வளம் மற்றும் பொருள்வளத்தோடு நின்றுவிடாமல், கலைவளத்தையும் மனதில் கொள்ளும் அரசுக்கும் முதல்வருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார் நடிகர் சங்க தலைவர் நாசர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!