தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் இட மாற்றம்! தனுஜா ஜெயராமன்

 தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் இட மாற்றம்! தனுஜா ஜெயராமன்

தமிழ் நாட்டில் நான்கு ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு அண்மை காலமாகவே ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அவ்வப்போது உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள உத்தரவில்…,சிறு,குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை செயலாளராக அர்ச்சனா பட்னாய்க் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

தொழில்துறை ஆணையர் மற்றும் இயக்குநராக நிர்மல்ராஜ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையராக பூஜா குல்கர்னி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

குடிமைப்பொருள் வழங்கல் துறை முதன்மை செயலாளர் மற்றும் ஆணையராக ஹர்ஷகே மீனா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...