பத்திரப் பதிவு செய்வோர் வரும் அக்.1 முதல் புதிய நடைமுறையை பின்பற்ற வேண்டும்

பத்திரப் பதிவு செய்வோர் வரும் அக்.1 முதல் புதிய நடைமுறையை பினபற்ற வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பதிவுக்கு வரும் ஆவணங்களில் பதியப்படும் சொத்துகள் குறித்த புகைப்படமும் ஆவணமாக இணைக்கப்பட வேண்டும் என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் தெரிவித்திருப்பதாவது:

பதிவுத்துறையில் போலியான ஆவணங்கள் பதியப்படுவதை தடுக்கவும், விடுதல் இன்றி அரசுக்கு வருமானம் வருவதை உறுதி செய்யவும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கட்டடங்கள் இருப்பதை மறைத்து காலி நிலம் என்று ஆவணங்கள் பதியப்படுவதால் அரசுக்கு வரும் வருவாய் பெருமளவில் பாதிக்கப்படுகிறது.

எனவே காலி மனையிடங்களை ஜியோ கோ.ஆர்டினேட்ஸோடு (புவியியல் ஆயங்கள்) புகைப்படம் எடுத்து அதனை ஆவணமாக இணைக்க வேண்டும் என கடந்த வாரத்தில் அறிவுரை வழங்கப்பட்டது. 

பதியப்படும் ஆவணத்தில் குறிப்பிடப்படும் சொத்தின் பக்கத்தில் இருக்கும் காலி இடத்தை புகைப்படம் எடுத்து அதனை ஆவணமாக சேர்த்து மோசடி பதிவு செய்வதாக புகார்கள் வரப்பெற்றுள்ளன.
எனவே இது குறித்து தீவிரமாக ஆராய்ந்து அரசு புதியதொரு முடிவினை எடுத்துள்ளது.

அதன்படி சார்பதிவாளர் அலுவலகங்களில் பதியப்படும் அனைத்து சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களிலும் அந்த சொத்துக்கள் குறித்து புகைப்படம் ஜியோ கோக்.ஆர்டினேட்ஸோடு எடுக்கப்பட்டு அதனை ஆவணமாக இணைக்க வேண்டும் என்று பதிவுத்துறை தலைவருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. 

இதுகுறித்து கூடுதல்
வழிகாட்டுதல்கள் பதிவுத்துறை தலைவரால் தனியே வழங்கப்படும்.

இந்த நடைமுறையானது வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் பின்பற்றப்படும் என்று அவர் தெரிவித்துள்ளா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!