மகளிர் உரிமைத் தொகை திட்டம் … ஒரு ரூபாய் வருதா உங்களுக்கு? | தனுஜா ஜெயராமன்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வருகிற 15-ந்தேதி தொடங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்காக 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத் தலைவிகள் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது மகளிர் உரிமை தொகை எப்போது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் போன்ற தகவலும் வெளியாகி உள்ளது. அதன்படி அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15 அன்று இந்தத் திட்டம் தொடங்கப்படும்.

திட்டம் தொடங்கப்பட்ட 5 நாள்களில், செப்டம்பர் 20-ல் தொகையானது பயனர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டுவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களின் வங்கி கணக்குகளை சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னை உள்பட பல மாவட்டங்களில் விண்ணப்பதாரர்களின் வங்கிக் கணக்குகளுக்கு கடந்த இரு தினங்களாக ஒரு ரூபாய் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

ஒரு ரூபாய் அனுப்பியவுடன் விண்ணப்பதாரர்களின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி வழியாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

தவறான வங்கிக் கணக்குகளுக்கு உரிமைத் தொகை சென்று விடக்கூடாது என்ற எண்ணத்தில் சோதனை அடிப்படையில் ஒரு ரூபாய் அனுப்பப்படுவதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் கைப்பேசி வழியாக விண்ணப்பதாரர்களை தொடர்பு கொண்டு வங்கிக் கணக்கு விவரங்கள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!