அசோக் செல்வன் & கீர்த்தி பாண்டியன் திருமண வைபவம்! | தனுஜாஜெயராமன்

 அசோக் செல்வன் & கீர்த்தி பாண்டியன் திருமண வைபவம்! | தனுஜாஜெயராமன்

இன்று நெல்லையில் நடிகர் அசோக் செல்வன், நடிகை கீர்த்தி பாண்டியனை கரம்பிடித்துள்ளார். அவர்களது திருமண புகைப்படங்கள்  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பா.இரஞ்சித் தயாரிப்பில் உருவாகி வரும் ப்ளூ ஸ்டார் என்கிற படத்தில் ஜோடியாக நடித்தபோது தான் அசோக் செல்வனுக்கு, நடிகை கீர்த்தி பாண்டியனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து இவர்களது திருமணத்துக்கு குடும்பத்தினரும் கிரீன் சிக்னல் காட்டியதை அடுத்து தற்போது திருமண பந்தத்தில் இருவரும் இணைந்துள்ளனர்.

நடிகர் அசோக் செல்வன் அவரது காதலியும் நடிகர்  அருண் பாண்டியனின் மகளுமான நடிகை கீர்த்தி பாண்டியனை கரம்பிடித்துள்ளார். நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியன், தமிழ் சினிமாவில் தும்பா என்கிற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து அன்பிற்கினியாள் என்கிற படத்தில் அவர் நடித்திருந்தார்.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இளம் நடிகர் அசோக் செல்வன். இவர் நடித்த தெகிடி, ஓ மை கடவுளே, போர் தொழில் ஆகிய திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வரும் அசோக் செல்வனுக்கு இன்று திருமணம் நடைபெற்றுள்ளது.

அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் ஜோடியின் திருமணம் திருநெல்வேலி அருகே உள்ள இட்டேரி என்கிற கிராமத்தில் அமைந்துள்ள நடிகர் அருண் பாண்டியனின் பண்ணை வீட்டில் நடைபெற்றுள்ளது. இயற்கை சூழல் நிரம்பிய அந்த இடத்தில் மேடை அமைத்து அதில் திருமணம் நடைபெற்று இருக்கிறது.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...