நடிகர் மாரிமுத்து திடீர் மரணம்… திரையுலகினர் அதிர்ச்சி!

 நடிகர் மாரிமுத்து திடீர் மரணம்… திரையுலகினர் அதிர்ச்சி!

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘யுத்தம் செய்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தான் மாரிமுத்து. தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து  வரும் பிரபல நடிகரான மாரிமுத்து இன்று காலை திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ள செய்தி திரையிலகில் ஆழ்ந்த அதிர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது இவர் நடித்து வரும் ‘எதிர் நீச்சல்’ தொடரின் டப்பிங் பேசிக்கொண்டிருந்த நிரையில் திடீரென மயக்கம் போட்டு விழுந்துள்ளார். இதையடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மாரிமுத்து ‘எதிர் நீச்சல்’ என்ற தொடர் மூலம் மிகவும் பிரபலமானார். இதில் இவர் பேசும் ‘அட எம்மா ஏய்’ வசனம் பட்டி தொட்டி எங்கும் பரவியுள்ளது. இவர் இயக்குனர் வசந்த் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

பின்னர் இவர் கடந்த 2008-ஆம் ஆண்டு ‘கண்ணும் கண்ணும்’ 2014-ஆம் ஆண்டு ‘புலிவால்’ உள்ளிட்ட 2 படங்களை இயக்கினார். இந்த இரண்டு படங்களும் சரியாக போகாதநிலையில் நடிகராக களமிறங்கினார்.

இவர் பரியேறும் பெருமாள், ஜெய்பீம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ’ஜெயிலர்’ படத்தில் நடித்திருந்தார். பல திரைப்படங்களில் நடித்தும், உதவி இயக்குநராக பணியாற்றியும் வந்தவர் மாரிமுத்து. இவர் தேனி மாவட்டத்தின் பசுமலை கிராமத்தைச் சேர்ந்தவர்.

நடிகர் மாரிமுத்துவின் உடல் இன்று மாலை வரை சென்னையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இன்று இரவு அவரது சொந்த ஊரான மதுரை, தேனி மாவட்டம் வருச நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு இவரது இறுதி சடங்குகள் நடைபெறும். இவரது மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு பிரபலங்கள் பலர் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...