முதல் சுற்று போட்டி டிராவில் முடிந்தது- இன்று வெல்வாரா ப்ரக்ஞானந்தா!..!|தனுஜா ஜெயராமன்

 முதல் சுற்று போட்டி டிராவில் முடிந்தது- இன்று வெல்வாரா ப்ரக்ஞானந்தா!..!|தனுஜா ஜெயராமன்

உலக கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் உள்ள பாகு என்ற நகரில் நடைபெற்று வருகிறது. அதன் இறுதிப் போட்டியின் முதல் சுற்றில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா மேக்னஸ் கார்ல்சனுடன் மோதி வருகிறார். பிரக்ஞானந்தா வெற்றி பெற வேண்டும் என சமூக வலைதளங்கள் மூலம் தங்கள் வேண்டுதலை தெரிவித்து வருகின்றனர் சதுரங்க ரசிகர்கள் பலர். இதன் அரை இறுதியில் இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பேபியானோ கருணாவுடன் மோதினார். அரையிறுதி சுற்றில் இரண்டு போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகள் ‘டிரா’ ஆனது. இதைத் தொடர்ந்து டை-பிரேக்கர் சுற்று நடத்தப்பட்டு, இதில் வெற்று பெறுவோர் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நிலை உருவானது. அதன்படி டை-பிரேக்கர் சுற்றில் பிரக்ஞானந்தா, உலகின் மூன்றாம் இடத்தில் வீரரான ஃபேபியானோ கருணாவை எதிர்கொண்டு விளையாடினார்.

பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பிரக்ஞானந்தா தன்னை எதிர்த்து விளையாடிய கருணாவை 3.5-2.5 புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் உலக கோப்பை செஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இளம் வீரர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றார். இறுதிப் போட்டியின் முதல் சுற்றில் பிரக்ஞானந்தா மேக்னஸ் கார்ல்சனுடன் மோதினார். இறுதிப் போட்டியின் முதல் சுற்றில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார் பிரக்ஞானந்தா. சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், போட்டியின் அடுத்த சுற்று நாளை நடைபெற உள்ளது. பிரக்ஞானந்தாவின் வெற்றிக்காக ஆவலுடன் காத்திருக்கும் இந்தியர்கள் அவருக்கு தங்களது வாழ்த்தினை பதிவிட்டு வருகின்றனர்.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...