கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் – முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

 கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் – முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (21.08.2023) தலைமைச் செயலகத்தில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில்  ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை (JICA) நிதியுதவியுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பேரூரில், 4 ஆயிரத்து 276 கோடியே  44 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், நாளொன்றுக்கு 400 மில்லியன்  லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணிக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் என சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் தகவல் வெளியிட்டுள்ளது.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...