‘மாணிக்கவாசகர்’ யூடியுப் சேனல் தொடக்க விழா

 ‘மாணிக்கவாசகர்’ யூடியுப் சேனல் தொடக்க விழா

நமசிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க

என்று இறைவனை எண்ணி எண்ணி, இறைஞ்சி இறைஞ்சி பாடிப் பரவமடைந்தவர் மாணிக்கவாசகப் பெருமான். அன்னாரது பாடல்களைப் படித்து தமிழின் அருமையை உணர்ந்தவர் ஜி.யு.போப்  கிறிஸ்துவத்தைப் பரப்ப வந்த ஆங்கிலேயப் பாதிரியாரான ஜி.யு.போப் என்பார் மாணிக்கவாசகரது திருவாசகத்தை வெளிநாடுகளில் சென்று பேசி அனுமதி பெற்று திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

அந்நிய மதத்தவரையே சிவ பக்திக்கும் தமிழ் உணர்வுக்கும் ஈர்த்தவர் மாணிக்கவாசகர்.

“வான்கலந்த மாணிக்கவாசக! நின் வாசகத்தை
நான்கலந்து பாடுங்கால், நற்கருப்பஞ்சற்றினிலே
தேன்கலந்து, பால்கலந்து, செழுங்கனித் தீஞ்சுவை கலந்து,என்
ஊன்கலந்து, உயிர்கலந்து, உவட்டாமல் இனிப்பதுவே!”

“வாட்டமிலா மாணிக்க வாசக நின் வாசகத்தை
கேட்டபொழு தங்கிருந்த கீழ்ப்பறவை சாதிகளும்
வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெய்ஞ்ஞான
நாட்டமுறும் என்னிலிங்கு நானடைதல் வியப்பன்றே!.”

என்று வள்ளலார் சுவாமிகள் மனமுருகிப் பாடியிருக்கின்றார். மேலும் அவர்,

‘‘வாழையடி வாழை என வந்த திருக் கூட்ட

மரபினில் யான் ஒருவன் அன்றோ வகை அறியேன் இந்த

ஏழைபடும் பாடு உனக்குத் திருவுளச் சம்மதமோ

இதுதகுமோ இதுமுறையோ இது தருமந்தானோ

மாழைப் மணிப் பொது நடஞ் செய் வள்ளால் யான் உனக்கு

மகன் அலனோ நீ எனக்கு வாய்த்த தந்தை அலையோ 

கோழை உலக உயிர்த் துயரம் இனிப் பொறுக்க மாட்டேன்

கொடுத்தருள் நின் அருள் ஒளியைக் கொடுத்தருள் இப்பொழுதே!

என்று மாணிக்கவாசகர் தொனியிலேயே சிவனை இறைஞ்சி இறைஞ்சிப் பாடுகின்றார்.

அந்த ஞானியின் குரு பூஜை விழா சென்னை தருமபுரம் ஆதீன சமய பிரசார சபையில் நேற்று (23-6-2023) மாலை சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் முதலில் வழக்கறிஞர் திரு. முத்துப்பாண்டி அவர்கள் திருவாசகப் பாடல்களைத் தன் இனிமையான குரலால் தேன் தமிழில் பாடி பக்தர்களைப் பரவசப்படுத்தினார்.

அடுத்து பொருளுடன் திருவாசகம் எனும் யூடியுப் சேனல் திருவாசகப் பாடல்கள் அளைத்தையும் பொருளுடன் விளக்கம் கூறி பதிவிட இருக்கிறது. அதன் முதல் வெளியீடாக மாணிக்கவாசகர் குரு பூஜை அன்று மாணிக்கவாசகர் யூடியுப் சேனல் தொடக்கமாக அது பற்றிய ஒரு டீசர் வெளியிடப்பட்டது.

மாணிக்கவாசகர் திருப்பணி அறக்கட்டளையின் தலைவர் திரு. பழநிவேல் அவர்கள் இதனை வெளிட்டார். அதன் அறங்காவலர்கள் வழக்கறிஞர் திரு. முத்துப்பாண்டி அவர்களும் திரு. பொன்மூர்த்தி அவர்களும் உடனிருந்தனர்.

இந்த நிகழ்ச்சியை சிறப்பான வடிவமைத்திருந்தார் திரு தருமைதாசன் அவர்கள்

மாணிக்கவாசகர் திருப்பணி அறக்கட்டளையின் தலைவர் திரு. பழநிவேலு அவர்கள் மாணிக்கவாசகரின் புகழ் உலகெலாம் பரவ வேண்டும் என்கிற நோக்கத்தில் தன் வாழ்வை அதற்காகவே அர்ப்பணித்து வருகிறார். மாணிக்கவாசகருக்குத் தனியாக் ககோயில் அமைத்து அவருக்கு தினம் தினம் பூஜைகள் செய்வித்து அவர் பாடல்களை எளிய மக்களும் பாடிப் பரவ வேண்டும் எனும் நோக்கம் கொண்டவர்.

Manickavaagar சேனலில் மாணிக்கவாசகர் பாடிய திருவாசகம் மற்றும் திருக்கோவையார் பாடல்கள் முழுவதையும் பொருளுடன் விளக்கத்தை வீடியோவாக வெளியிட உள்ளார்கள்.

அதனால் மாணிக்கவாசகர் குரு பூஜை அன்று இந்தக் காணொளி ஒளிபரப்பப்பட்டது.

இதன் லிங்க் கீழே. https://www.youtube.com/watch?v=SDrzY07yiGk

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...