அறிஞர் அண்ணா பூங்கா சீர் செய்யப்படும் ஐட்ரீம் R.மூர்த்தி MLA  அவர்கள்

இராயபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் குழந்தைகள், பெரியவர்கள், நடுத்தர வயதுள்ளவர்கள் மற்றும் பெண்கள் என அனைவரும், நடைப்பயிற்சி செய்யவும், விளையாடவும், மனநிம்மதிக்காகவும், பொழுது போக்குக்காகவும் பயன்படுத்த, அன்றைய முதல்வர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்ட, அறிஞர் அண்ணா “பூங்கா” கடந்த கால அரசால் முறையான பராமரிப்பு செய்யப்படாமல் உள்ளது.

அதனை இன்று காலை மாநகராட்சி அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டேன். அத்துடன் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோரின் கருத்துக் கேட்க ஒரு கலந்துரையாடல் கூட்டம் நடத்தி பூங்காவை சீர் செய்யவும் மற்றும் வேறு என்னென்ன பயனுள்ள வசதிகள் மக்களுக்கு அமைத்து தரலாம் என்பதைப் பற்றி கேட்டறிந்தேன்.

கூடிய விரைவில்

“அறிஞர் அண்ணா பூங்கா” புது பொழிவும், எண்ணற்ற பல வசதிகள் உள்ள வகையில் சென்னையின் குறிப்பிடத் தக்க பூங்காவாக அமையும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்!

சொல்வதை செய்வோம் செய்வதைதான் சொல்வோம்
சொல்லாத நன்மைகளையும் செய்வோம் “

என்று தெரிவித்தார் இராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் R.மூர்த்தி MLA  அவர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!