தை மாத ராசிபலன்கள்…! ஜோதிடர் அ.மோகன்ராஜ்

 தை மாத ராசிபலன்கள்…! ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

செயல்பாடுகளில் வேகமும், துரிதமும் உண்டாகும். வாக்குவன்மையினால் பொருளாதார மேன்மை அடைவீர்கள். மனதிற்கு பிடித்த தொழில்நுட்ப கருவிகளை வாங்கி மகிழ்வீர்கள். நிலுவையில் இருந்துவந்த தனம் சார்ந்த பணிகளை செய்து முடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். கால்நடைகளின் மூலம் உபரி வருமானம் மேம்படும். தொழில் தொடர்பான புதிய முயற்சிக்கேற்ற பலன்கள் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே புரிதலும், அன்பும் மேம்படும். மாணவர்களுக்கு தொழில் கல்வி சார்ந்த எண்ணங்களும், அதை சார்ந்த பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகளும் உண்டாகும். செய்யும் முயற்சிக்கேற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும்.

வழிபாடு :
புதன்கிழமைதோறும் நரசிம்மரை வழிபாடு செய்துவர உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும்.

ரிஷபம் :

தேவையற்ற எண்ணங்களை தவிர்ப்பதன் மூலம் மனதில் குழப்பங்கள் இன்றி தெளிவுடன் செயல்பட முடியும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். தனவரவுகளில் இருந்துவந்த ஏற்றத்தாழ்வுகள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். கல்வி தொடர்பான பணிகளில் மாணவர்களுக்கு பெரியோர்களின் ஆலோசனைகளும், வழிகாட்டுதல்களும் திருப்தியை ஏற்படுத்தும். புதிய முயற்சிகளுக்கு முன்னேற்றமான வாய்ப்புகளும், அதை சார்ந்த ஆலோசனைகளும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். மக்கள் தொடர்பு பணிகளில் இருப்பவர்களுக்கு வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாகும்.

வழிபாடு :
ஞாயிற்றுக்கிழமைதோறும் சூரிய வழிபாடுகளை செய்து வர எதிர்பார்த்த உதவிகளின் மூலம் முன்னேற்றம் உண்டாகும்.

மிதுனம் :

மனதில் வித்தியாசமான சிந்தனைகளும், அது தொடர்பான முயற்சிகளும் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்காலம் தொடர்பான எண்ணங்களும், முயற்சிகளும் மேம்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த இழுபறியான வேலைகளை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளின் மூலம் சில நுட்பமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். மனதில் தோன்றும் புதுவிதமான ஆசைகளால் அலைச்சல்களும், அனுபவங்களும் கிடைக்கும். மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் கல்வி தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். உடன்பிறந்தவர்களின் மூலம் சிறு சிறு மனக்கசப்புகள் அவ்வப்போது ஏற்பட்டு மறையும். பாகப்பிரிவினை தொடர்பான முயற்சிகளில் எதிர்பாராத மாற்றங்கள் உண்டாகும்.

வழிபாடு :
சனிக்கிழமைதோறும் பெருமாளை வழிபட மனதில் இருந்துவந்த எண்ணங்கள் ஈடேறும்.

கடகம் :

குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையினால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். வழக்கு தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நன்மையளிக்கும். தொழில் தொடர்பான செயல்பாடுகளில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த காலதாமதமும், நிலுவை தொகையும் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் சிறு சிறு அலைச்சல்கள் ஏற்பட்டாலும் தகுந்த ஆலோசனைகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும்.

வழிபாடு :
வெள்ளிக்கிழமைதோறும் மகாலட்சுமி வழிபாடு செய்துவர ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும்.

சிம்மம் :

மனதில் இனம்புரியாத பயம் மற்றும் கவலைகள் ஏற்பட்டு நீங்கும். பேச்சுக்களில் கவனம் வேண்டும். தொழில் சம்பந்தமான செயல்பாடுகளில் வெற்றி உண்டாகும். உறவினர்களால் எதிர்பார்த்த சில காரியங்கள் நடைபெறும். சுயதொழில் செய்பவர்களுக்கு பெரிய மனிதர்களுடன் தொடர்பும், அறிமுகமும் கிடைக்கும். நவீன பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் வாக்குறுதிகள் கொடுப்பதில் கவனம் வேண்டும். பொதுநலத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். நீண்ட நாட்களாக நினைத்த காரியங்கள் ஈடேறும்.

வழிபாடு :
ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியபகவானை வழிபட நன்மைகள் நடைபெறும்.

கன்னி :

சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். புதிய தொழில் முனைவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சுரங்க பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு பணியில் கவனமாக செயல்படவும். சர்வதேச வணிகத்தில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். பணி தொடர்பான பயணங்களின்போது கோப்புகளில் கவனம் வேண்டும். நெருக்கமானவர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். சபைகளில் தனக்கு ஆதரவாக இருப்பவர்களின் உதவிகள் கிடைக்கும்.

வழிபாடு :
நரசிம்மரை வழிபட நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

துலாம் :

குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கான ஆர்வம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அமைதிப்போக்கை கையாளவும். பிள்ளைகளின் கருத்துக்களை அறிந்து அதற்கு தகுந்தாற்போல் செயல்படுவது நன்மையளிக்கும். மூத்த சகோதரர்களின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் கவனமாக படிப்பது நல்லது. சொத்துக்கள் வாங்குவது, விற்பது ஆகியவற்றில் கவனம் வேண்டும். பணியாளர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும்.

வழிபாடு :
திங்கட்கிழமைதோறும் வராகி அம்மனை வழிபாடு செய்து வர தொழில் தொடர்பான முயற்சிகள் ஈடேறும்.

விருச்சிகம் :

துணிச்சலான முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உணவு விஷயங்களில் கட்டுப்பாடுகள் வேண்டும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். பழைய கடன்கள் வசூலாகி மகிழ்ச்சியை அளிக்கும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். கலைப்பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் வருமானம் அதிகரிக்கும். மாணவர்கள் கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது.

வழிபாடு :
வியாழக்கிழமைதோறும் குருவை வழிபாடு செய்து வர சுபகாரியங்கள் நடைபெறும்.

தனுசு :

குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மற்றும் நண்பர்களின் மூலம் பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறையும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். தந்தைவழி உறவினர்களிடம் பொறுமையை கையாளுவது உங்களின் மீதான நன்மதிப்பை அதிகப்படுத்தும். மாணவர்கள் கல்வி தொடர்பான நுணுக்கமான சில விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகங்கள் மூலம் உயர்வு ஏற்படும். தனித்திறமையை வளர்த்து கொள்வதற்கான எண்ணங்களும், அதற்கான சூழ்நிலைகளும் சாதகமாக அமையும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும்.

வழிபாடு :
வியாழக்கிழமைதோறும் ராகவேந்திரரை வழிபாடு செய்துவர கல்வி தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் அகலும்.

மகரம் :

மனதில் புதிய சிந்தனைகளும், முயற்சிகள் தொடர்பான எண்ணங்களும் மேம்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் முயற்சிக்கேற்ப புதிய வாய்ப்புகளும் அனுகூலமான சூழ்நிலைகளும் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகள் படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வது நன்மையளிக்கும். அரசு தொடர்பான பணிகள் மற்றும் மக்கள் தொடர்பு பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட தொடர்பும், செல்வாக்கும் அதிகரிக்கும். மாணவர்களுக்கு பாடங்களில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பெற்று நல்ல மதிப்பெண்களை பெறுவதற்கான சூழ்நிலைகள் அமையும். பழைய நினைவுகளின் மூலம் தேவையற்ற மனவருத்தங்கள் நேரிடும்.

வழிபாடு :
சனிக்கிழமைதோறும் லட்சுமி நரசிம்மரை வழிபாடு செய்துவர எண்ணத் தெளிவும், புத்துணர்ச்சியும் பெறுவீர்கள்.

கும்பம் :

செயல்பாடுகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் படிப்படியாக குறையும். குடும்ப உறுப்பினர்களிடம் பேசும்பொழுது வார்த்தைகளில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். விலை உயர்ந்த பொருட்களை மற்றவர்களிடம் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. புதிய வீடு மற்றும் வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வியாபாரம் தொடர்பான புதிய முதலீடுகளில் சற்று சிந்தித்து செயல்பட வேண்டும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் அலைச்சல்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். மாணவர்கள் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனத்துடன் இருக்க வேண்டும்.

வழிபாடு :
சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயரை வழிபாடு செய்துவர சுபகாரியங்கள் தொடர்பான செயல்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் அகலும்.

மீனம் :

வாக்கு சாதுர்யத்தின் மூலம் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். வாகனம் மற்றும் வீடு மாற்றம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படுவது நன்மையளிக்கும். மாணவர்கள் கல்வி தொடர்பான பணிகளில் சற்று பொறுமையுடனும், கவனத்துடனும் இருக்க வேண்டும். உடனிருப்பவர்களின் தன்மைகளை அறிந்து பழகவும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சில முடிவுகள் எடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டு மறையும். வர்த்தகம் தொடர்பான வியாபார பணிகளில் இருப்பவர்கள் சற்று பொறுமையுடன் செயல்பட வேண்டும். வியாபார அபிவிருத்தி தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். அரசியல் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முயற்சிக்கேற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும்.

வழிபாடு :
செவ்வாய்க்கிழமைதோறும் முருகப்பெருமானை வழிபாடு செய்துவர செயல்பாடுகளில் இருந்துவந்த தாமதங்கள் நீங்கும்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...