செப்டம்பர் மாத ராசிபலன்கள் !! – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

 செப்டம்பர் மாத ராசிபலன்கள் !! – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

தனது வேகத்தால் காரியங்களை சாதிக்கும் மேஷ ராசி அன்பர்களே…!! உங்கள் ராசி அதிபதி செவ்வாய் ராசியில் மிகவும் பலம் பெற்று ஆட்சிப்பெற்ற நிலையில் அமர்ந்துள்ளார். தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியில் முடியும். புகழ் அனைத்தும் மேலோங்கி நிற்கும். சக ஊழியர்களிடம் வெளிப்படையாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. பூர்வீகம் தொடர்பான சில பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும். மனைவியின் மூலம் ஆதாயம் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் விரைவில் நடைபெறும். ஆன்மிகம் சார்ந்த பயணங்களை மேற்கொள்வீர்கள். புதிய தொழில் சார்ந்த முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். அரசாங்கம் சார்ந்த காரியங்கள் கைகூடும். செய்தொழிலில் இலாபம் கிடைக்கும்.

வழிபாடு :
புதன்கிழமைதோறும் பெருமாளை வழிபட ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சனைகள் குறையும்.

ரிஷபம் :

தனது வாக்கினால் வாழ்வில் வசந்தத்தை பெறும் ரிஷப ராசி
அன்பர்களே…!! உங்கள் ராசி அதிபதி சுக்கிரபகவான் ராசிக்கு
மூன்றாம் இடமான முயற்சி ஸ்தானத்தில் நிற்கிறார். முயற்சிகள் அனைத்தும் சிறிது காலதாமதத்திற்கு பின்பே வெற்றி கிடைக்கும். தாயின் ஆரோக்கியம் மேம்படும். புதிய வீடு, மனை அல்லது வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சகோதரர்கள் மற்றும் சகோதரிகளின் மூலம் இலாபம் உண்டாகும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். பிள்ளைகளின் உடல்நலனில் அக்கறை செலுத்துவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். அரசு துறையினர் உங்களின் நற்செயல்களின் மூலம் புகழ் பெறுவீர்கள். மாணவர்கள் பாடங்களை திட்டமிட்டு படிப்பதன் மூலம் கல்வியில் வெற்றி கிடைக்கும்.

வழிபாடு :
செவ்வாய்க்கிழமைதோறும் முருகரை வழிபட சுபகாரியங்கள் கைகூடும்.

மிதுனம் :

தங்களுடைய நிதானத்தால் பல காரியங்களை வெற்றியில் முடிக்கும் மிதுன ராசி அன்பர்களே…!! உங்கள் ராசி அதிபதியான புதன் சுக ஸ்தானத்தில் வளமுடன் நிற்க போகிறார். அனைத்து செயல்களும் வெற்றியில் முடியும். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். நண்பர்களுடன் இணைந்து கூட்டுத்தொழில் மேற்கொள்பவர்களுக்கு தொழில், வியாபாரம் திருப்திகரமாக இருக்கும். திருமண பாக்கியம் விரைவில் கைகூடும். குடும்பத்தில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

வழிபாடு :
விநாயகரை மஞ்சள் நிற பூக்கள் கொண்டு வழிபாடு செய்து வர கூட்டுத்தொழில் தொடர்பான பிரச்சனைகள் குறையும்.

கடகம் :

உறவுகளால் அனுகூலம் பெறும் கடக ராசி அன்பர்களே…!! ராசிக்கு இரண்டாம் இடமான குடும்ப ஸ்தானத்தில் சூரியனும், மூன்றாம் இடத்தில் புதனும் அலங்கரிக்கிறார்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். மேற்கொள்ளும் காரியங்கள் அனைத்தும் சாதகமான பலன்களை தரும். பணவரவு அதிகரிக்கும். கடினமான வேலைகளையும் எளிதாக செய்து முடிக்கும் திறமைகள் உண்டாகும். மனதில் இருந்துவந்த தயக்கம் மற்றும் பயம் நீங்கும். உறவுகளில் மூலம் திருமணம் விரைவில் கைகூடும். புத்திர பாக்கியம் விரைவில் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு நிலுவையில் இருந்துவந்த செயல்களை முடிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் புதுவிதமான நம்பிக்கை ஏற்படும்.

வழிபாடு :
சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயரை வழிபட காரியத்தடைகள் நீங்கும்.

சிம்மம் :

தங்களது தன்னம்பிக்கையே சுடராய் வாழும் சிம்ம ராசி
அன்பர்களே…!! உங்கள் ராசிநாதன் சூரியன் ராசியிலேயே ஆட்சி
பெற்று மிகவும் பலமாக அமர்ந்துள்ளார். மனதில் புதுவிதமான
தன்னம்பிக்கையும், உற்சாகமும், எதையும் செய்து முடிக்கும் ஆற்றலும் பிறக்கும். எதையும் மிக விரைவில் புரிந்து கொள்ளும் ஆற்றல் உண்டாகும். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு மக்களுக்காக சேவை செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்காலம் தொடர்பான செயல்களை புதிய உத்வேகத்துடன் செயல்படுத்துவீர்கள். மாணவர்கள் கல்வி பற்றிய பயத்தை விடுத்து ஆர்வமாக படிப்பதன் மூலம் வெற்றி கிடைக்கும். திருமணம் விரைவில் நடைபெறும். புத்திர அபிவிருத்தி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அவ்வப்போது சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். தொழிலுக்காக வெளியூர் தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள்.

வழிபாடு :
புதன்கிழமைதோறும் நரசிம்மரை வழிபட பணி தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த இன்னல்கள் குறையும்.

கன்னி :

உங்களின் அறிவுக்கூர்மையால் மற்றவர்களை அசத்தும் கன்னி ராசி அன்பர்களே…!! உங்கள் ராசிநாதன் புதன் ராசியிலே சஞ்சரிக்கின்றார். புதிய வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எடுக்கும் காரியத்தை செய்து முடிப்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். தடைகள் நீங்கி காரியங்களில் வெற்றி கிடைக்கும். மாணவர்கள் பாடங்களை சுறுசுறுப்பாக படித்து முடிப்பீர்கள். சுயதொழில் மேற்கொள்பவர்களுக்கு தொழிலில் பொருளாதாரம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்துவந்த ஒரு செயல்களின் மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும்.

வழிபாடு :

வெள்ளிக்கிழமைதோறும் ராமரை வழிபாடு செய்து வர எண்ணத்தெளிவு உண்டாகும்.

துலாம் :

தொழிலில் உள்ள நுணுக்கங்களை நன்கு அறிந்து செயல்படும் துலா ராசி அன்பர்களே…!! உங்கள் ராசிநாதன் சுக்கிரன் தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்தில் சஞ்சரிக்கிறார். எளிதில் மற்றவர்களை கவரும் வகையில் திறமையை வெளிப்படுத்துவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வீடு புதுப்பிப்பது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் உள்ளவர்களுக்கும், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் நிர்ப்பந்தமாக இடமாற்றம் அல்லது பணி மாற்றம் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் உண்டாகும்.

வழிபாடு :

சனிக்கிழமைதோறும் காலபைரவரை வழிபாடு செய்து வர ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும்.

விருச்சகம் :

உங்களின் தெளிவான முடிவுகளால் வாழ்க்கையில் வெற்றியை காணும் விருச்சிக ராசி அன்பர்களே…!! ராசிநாதன் செவ்வாய் ஆறாமிடத்தில் இருக்கிறார். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வாழ்க்கையில் முன்னேற்றமடைய திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொழிலுக்காக உயர் அதிகாரிகள் அல்லது அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். மாணவர்கள் பெரியோரின் ஆலோசனைபடி நடப்பது அவசியம். மனைவி மற்றும் நண்பர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். உறவினர்களிடம் பேசும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். நிர்வாகத்திறமையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். முயற்சி ஸ்தானத்தில் சனிபகவான் மிகவும் சிறப்பாக உள்ளதால் சற்று சோம்பேறித்தனம் ஏற்படும். அதை தவிர்த்து விட்டு எடுக்கும் முயற்சியில் மிக வேகமாக செயல்படவும்.

வழிபாடு :
குருமார்களை வியாக்கிழமைதோறும் வழிபாடு செய்து வர எண்ணத்தெளிவு உண்டாகும்.

தனுசு :

முதுபெரும் நம்பிக்கைகளின் மீது மரியாதை கொண்ட தனுசு ராசி அன்பர்களே…!! குருவும், கேதுவும் ராசியில் இருக்கும்போது முயற்சி அனைத்தும் வெற்றியில் முடியும். வழக்குகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். பெண்களுக்கு திருமணத்தில் இருந்துவந்த தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் நீங்கி நன்மை உண்டாகும். அரசாங்க துறையில் இருப்பவர்களுக்கு உங்கள் கோரிக்கைகள் முக்கியமானதாக கருதப்பட்டு விரைவில் நிறைவேற்றப்படும். மாணவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் படிப்பில் மட்டும் கவனத்தை செலுத்த வேண்டும். முயற்சியை சற்று உறுதிப்படுத்துவதன் மூலம் பல காரியங்களை செய்து முடிக்கலாம். மறைமுக எதிர்ப்புகள் விலகும்.

வழிபாடு :

வெள்ளிக்கிழமைதோறும் மகாலட்சுமியை வழிபாடு செய்து வர தம்பதியர்களுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

மகரம் :
சட்ட நுணுக்கங்களை தெரிந்து வைத்திருக்கும் மகர ராசி அன்பர்களே…!! உங்கள் ராசி அதிபதி ஆட்சி பெற்று வக்ர நிலையில் இருப்பதால் முயற்சியை துரிதப்படுத்துவதன் மூலம் மட்டுமே பல வெற்றிகளை காண்பீர்கள். இளைய சகோதரர்களுக்காக விரயங்கள் ஏற்படும். மனதில் நினைத்த எண்ணங்கள் ஈடேறும். வீடு அல்லது மனை வாங்கும் யோகம் கிடைக்கும். புத்திர அபிவிருத்தி உண்டாகும். தந்தை மற்றும் தந்தை வழி உறவினர்களிடம் பேச்சுவார்த்தையின் போது கோபமான பேச்சுக்களை தவிர்க்கவும். உயர் அதிகாரிகளிடம் வம்பு வழக்குகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

வழிபாடு :

ஞாயிறுதோறும் சிவபெருமானை வழிபட கடன் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்.

கும்பம் :

உண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கும் கும்ப ராசி அன்பர்களே…!! அனுபவ அறிவும், செயல்திறனையும் பயன்படுத்துவதன் மூலம் காரியங்களில் பாராட்டுகள் கிடைக்கும். சுபச்செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே அவ்வப்போது சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். மற்றவர்களுக்கு உதவி செய்யும்போது கவனம் தேவை. சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு எதிர்ப்புகள் அதிகரிக்கும். மற்றவர்களிடம் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்திறனால் பாராட்டுகள் கிடைக்கும். மாணவர்கள் பாடங்களை படிக்கும் பொழுது மிகுந்த கவனத்துடன் படிப்பது நல்லது. வாகனங்களில் செல்லும்போது அதிக கவனம் செலுத்த வேண்டும்.

வழிபாடு :
கோமாதாவை வழிபாடு செய்து வர தொழில் சம்பந்தமான பிரச்சனைகள் குறையும்.

மீனம் :
வாழ்வில் எதையும் சமாளித்து முன்னேறும் சாமர்த்தியம் கொண்ட மீன ராசி அன்பர்களே…!! உங்கள் ராசி அதிபதி தொழில் ஸ்தானத்தில் மிகச்சிறப்பாக ஆட்சிப்பெற்று நிற்கிறார். உடன் கேது சேர்ந்திருப்பதால் ஆன்மிக பயணங்களை மேற்கொள்வீர்கள். மாமன் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உறவுகளில் ஒத்துழைப்பு மேலோங்கும். தனவரவு சிறப்பாக அமையும். தந்தையின் ஆதரவு மேலோங்கி காணப்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். பெண்களுக்கு மனதைரியம் அதிகரிக்கும். திட்டமிட்ட செயல்பாடுகளில் காரிய வெற்றி கிடைக்கும். அரசியல் துறையில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டும்.

வழிபாடு :
துர்க்கை அம்மனை புதன்கிழமைதோறும் வழிபட மனை தொடர்பான பிரச்சனைகள் அகலும்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...