பிளாஸ்மா தானம் செய்ய முன்வந்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

 பிளாஸ்மா தானம் செய்ய முன்வந்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா தெரபி நல்ல பலனை அளிப்பதாக கூறப்படுகிறது. அதனால் கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர்கள் பலரும் தாமாக முன்வந்து பிளாஸ்மா தானம் செய்கின்றனர்.

இந்நிலையில் பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா அறிகுறிகள் காணப்பட்டதால், அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார். இதில் தொற்று உறுதியானதாக கூறி, அவரை 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தி வைத்துள்ளனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்ததாக கூறி, பிளாஸ்மா தானம் செய்வதற்கான தகுதி சான்றிதழையும் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து பிளாஸ்மா தானம் செய்வதற்காக அவர் மருத்துவமனை சென்றுள்ளார். அப்போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று ஏற்படவே இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை அறிந்த அவர் பெரும் அதிர்ச்சியடைந்தார்.

இந்நிலையில் அவர் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

மருத்துவமனை தரவுகளில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தவறு ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் கூறுகின்றனர். இருப்பினும் இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...