வார ராசிபலன்கள் (29.06.2020 – 05.07.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

 வார ராசிபலன்கள் (29.06.2020 – 05.07.2020) – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :
சூழ்நிலைக்கு ஏற்றார் போல் அனைவரையும் அனுசரித்து செல்லவும். பெற்றோர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மனதிற்கு நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். கணவன், மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். தவறிய சில பொருட்கள் கிடைக்கும். வேலையாட்களிடம் உங்களின் மதிப்புகள் உயரும்.

வழிபாடு :
நவகிரகத்தில் இருக்கும் குரு பகவானை வியாழக்கிழமைதோறும் வழிபாடு செய்து வர முன்னேற்றம் உண்டாகும்.

ரிஷபம் :

கடினமான வேலையையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். மறைமுக எதிர்ப்புகள் குறையும். நட்பு வட்டாரம் விரிவடையும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் செய்யும் சிறு மாற்றங்களின் மூலம் இலாபம் மேம்படும். மனதில் இருக்கும் ஆசைகள் நிறைவேறும். உறவினர்கள், நண்பர்களின் மத்தியில் செல்வாக்கு உயரும்.

வழிபாடு :
மணிகண்டனை வழிபட்டு வர தனவரவுகளில் இருந்துவந்த தடைகள் அகலும்.

மிதுனம் :

சொத்துக்கள் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி கிடைக்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். திறமைக்கேற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.

வழிபாடு :
புதன்கிழமைதோறும் சயன கோலத்துடன் இருக்கும் பெருமாளை வழிபட மனத்தெளிவு கிடைக்கும்.

கடகம் :
உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பொதுக்காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். பூமி வாங்கும் முயற்சிகள் கைகூடும். பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். மனதில் இனம் புரியாத கவலைகள் தோன்றும். பிரிந்து சென்றவர்கள் நெருங்கி வருவார்கள். மறைமுகப் போட்டிகள் விலகும். பாகப்பிரிவினைகள் சாதகமாக முடியும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.

வழிபாடு :
செவ்வாய்க்கிழமைதோறும் முருகப்பெருமானை வழிபட செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் நீங்கும்.

சிம்மம் :
புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். அரசு தொடர்பான பணிகளால் அனுகூலம் உண்டாகும். வழக்கு விஷயங்களில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உண்டாகும். இழுபறியாக இருந்த பணிகள் நிறைவடையும். தனவரவு திருப்தியை தரும். உத்தியோகத்தில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். செயல்பாடுகளில் நிதானத்துடன் செயல்படவும்.

வழிபாடு :
புதன்கிழமைதோறும் துர்க்கை அம்மனை வழிபாடு செய்து வர மனக்கசப்புகள் மறைந்து ஒற்றுமை அதிகரிக்கும்.

கன்னி :

மனதில் எதையும் சமாளிக்கும் திறமையும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். மனைவிவழி உறவுகளின் மூலம் ஆதரவான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் உள்ள நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள். எதிர்காலம் சார்ந்த தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் இலாபம் பெறுவீர்கள். குடும்பத்தில் உங்களின் மதிப்பும், மரியாதையும் உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும்.

வழிபாடு :
நாக தேவர்களை வழிபட்டு வர பலவிதமான குழப்பங்களில் இருந்து தெளிவு கிடைக்கும்.

துலாம் :
மாமன் வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் குறையும். சில செயல்களை பக்குவமாகப்பேசி செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்ற எண்ணங்கள் மேம்படும். வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும். பழைய நினைவுகளால் செயல்பாடுகளில் காலதாமதம் நேரிடலாம். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும்.

வழிபாடு :
செவ்வாய்க்கிழமைதோறும் முருகரை வழிபட்டு வர பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகள் குறையும்.

விருச்சகம் :

எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதற்கான சூழல் உண்டாகலாம். இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். கூட்டுத்தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். சிலருக்கு வீடு மாற்றம் அல்லது உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். பெரிய தொகைகளை கடனாக கொடுக்கும் போது சிந்தித்து செயல்படவும்.

வழிபாடு :
சனிக்கிழைமைதோறும் ஆஞ்சநேயரை வழிபட முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் அகலும்.

தனுசு :
குடும்பத்தில் உங்களின் வார்த்தைக்கு மதிப்புகள் அதிகரிக்கும். பலவிதமான குழப்பங்களில் இருந்து மன அமைதி ஏற்படும். பணி புரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வீடு பராமரிப்பு தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். வாகனப் பயணங்களில் நிதானத்துடன் செல்ல வேண்டும். புதிய நபர்களிடம் கவனம் வேண்டும். உத்தியோக ரீதியான முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

வழிபாடு :
வியாழக்கிழமைதோறும் ஆன்மிக குருமார்களை வழிபட ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும்.

மகரம் :

எதிர்காலம் குறித்த சிந்தனைகள் அதிகரிக்கும். கொடுக்கல்- வாங்கலில் இலாபம் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனசங்கடங்கள் அகலும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் நன்மை உண்டாகும். திட்டமிட்ட காரியங்களில் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். பிள்ளைகளின் செயல்பாடுகளில் நல்ல மாற்றம் உண்டாகும்.

வழிபாடு :
ஞாயிறுதோறும் நரசிம்மரை வழிபட தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

கும்பம் :
எதிர்பாராத தனவரவு உண்டாகும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் இலாபகரமான சூழல் அமையும். மனதில் தேவையற்ற எண்ணங்களால் குழப்பமான சூழல் உண்டாகும். தாய்வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். வாகனப் பயணங்களால் எதிர்பார்த்த பலன்கள் உண்டாகும். மனைவி வழி உறவால் சுபச்செய்திகள் கிடைக்கும். நண்பர்களிடம் பேசும் போது கனிவுடன் பேசவும். பணியில் உள்ளவர்கள் சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும்.

வழிபாடு :
குலதெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை அளிக்கும்.

மீனம் :
உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் இலாபம் கிடைக்கும். தனம் சார்ந்த செயல்பாடுகள் அதிகரிக்கும். நவீன மின்சாதனங்களை வாங்கி மகிழ்வீர்கள். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். பயணம் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களை எண்ணம் போல் மாற்றியமைப்பீர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். மாமன்வழி உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். தந்தையுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

வழிபாடு :
புதன்கிழமைதோறும் தன்வந்திரியை வழிபட்டு வர ஆரோக்கியம் மற்றும் மனதில் உண்டாகும் சஞ்சலங்கள் அகலும்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...