வைகாசி மாத ராசிபலன்கள் !! – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

 வைகாசி மாத ராசிபலன்கள் !! – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியிடங்களில் மேன்மையான சூழல் உண்டாகும். இளைய உடன்பிறப்புகளால் சாதகமான சூழல் அமையும். தாயின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். எதிரிகளால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். நிர்வாகம் சம்பந்தமான முடிவுகளை எடுக்கும் போது கலந்து ஆலோசித்து எடுக்கவும். எதிர்பாலின மக்களிடம் சற்று எச்சரிக்கையுடன் செயல்படவும். உணவு சம்பந்தமான செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.

வழிபாடு :
வெள்ளிக்கிழமைதோறும் மகாலட்சுமியை வழிபட சுபிட்சம் உண்டாகும்.

ரிஷபம் :

மனதைரியத்துடன் எடுத்த காரியங்களில் செயல்படுவீர்கள். இசை கலைஞர்களின் புதுவிதமான முயற்சிகளுக்கு கீர்த்தி உண்டாகும். வாதத்திறமையால் எதிர்பார்த்த பலன்கள் உண்டாகும். மந்தத்தன்மையால் அவப்பெயர்களுக்கு ஆளாக நேரிடலாம். தனவரவில் இருந்த இடர்பாடுகள் நீங்கி சேமிப்பு அதிகரிக்கும். செய்தொழிலில் உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். தாய்மாமன் உறவுகளால் சுபவிரயம் உண்டாகும்.

வழிபாடு :
வெள்ளிக்கிழமைதோறும் லட்சுமி ஹயக்ரீவரை வழிபட கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும்.

மிதுனம் :


மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வீடு, மனைகள் வாங்குவதில் இருந்த சிக்கல்கள் நிவர்த்தியாகும். வாகனப் போக்குவரத்தினால் எண்ணிய இலாபம் கிடைக்கும். மனதில் புதுவிதமான புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். உத்தியோகம் சம்பந்தமான செயல்பாடுகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு முன்னேற்றமான சூழல் உண்டாகும். பழைய கடன்களை திருப்பி கொடுப்பதற்கான முயற்சிகளை செய்வீர்கள்.

வழிபாடு :
ஞாயிறு தோறும் சூரிய பகவானை வழிபடுவதன் மூலம் மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

கடகம் :

எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுத்து வெற்றி காண்பீர்கள். புதியவர்களின் அறிமுகம் உண்டாகும். மனைவியின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பிள்ளைகளுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். பணிகளில் கவனத்துடன் இருக்கவும். சம வயதினர்களினால் அவ்வப்போது சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். எதிர்பார்த்த தொழில் சம்பந்தமான கடன் உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் ஆதரவுகள் கிடைக்கும். புதிய முயற்சிகள் எண்ணிய பலன்களை தரும்.

வழிபாடு :
புதன்கிழமைதோறும் பெருமாளை வழிபடுவதன் மூலம் முயற்சிகளில் இருந்துவந்த சோர்வுகள் அகலும்.

சிம்மம் :

மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். புத்திரர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். தாயின் ஆதரவால் மகிழ்ச்சி உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு மேன்மையான சூழல் அமையும். செய்தொழிலில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். வாகன அபிவிருத்தி ஏற்படும். கடன்காரர்களிடம் அமைதிப்போக்கினை கையாண்டால் தேவையில்லாத வம்புகளை தவிர்க்கலாம். அண்டை அயலாரிடம் தேவையில்லாத வாக்குவாதத்தை தவிர்க்கவும். ஆன்மிக பிரார்த்தனைகளால் மனம் தெளிவு பெறும்.

வழிபாடு :
திங்கட்கிழமைதோறும் துர்க்கை அம்மனை வழிபட சுபகாரியங்கள் கைகூடும்.

கன்னி :


கூட்டுத்தொழிலில் ஈடுபடுபவர்கள் கூட்டாளிகளிடம் எதிர்பார்த்த ஆதரவுகள் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் மனமகிழ்ச்சி உண்டாகும். வீட்டின் தேவைகளை அறிந்து புதிய பொருட்களை வாங்குவீர்கள். அரசு அதிகாரிகளால் சாதகமான பலன்கள் உண்டாகும். தந்தையால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில்வகை ஆலோசனைகள் மற்றும் உதவிகள் கிடைக்கும். பெரிய மகான்களின் ஆசிகள் கிடைக்கும். பிள்ளைகள் தொழிலில் உதவிகரமாக இருப்பர்கள். புதிய வாடிக்கையாளர்களிடம் சற்று நிதானத்துடன் நடந்து கொள்ளவும்.

வழிபாடு :
வியாழக்கிழமைதோறும் குருமார்களை வழிபட சுபகாரியங்கள் தொடர்பான தடைகள் அகலும்.

துலாம் :


திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி பெறுவதற்கான சூழல் அமையும். நண்பர்களின் ஆலோசனைகள் மற்றும் ஆதரவுகள் தொழிலின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உடன்பிறந்தவர்களால் நன்மை உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவால் முன்னேற்றமான வாய்ப்புகள் மலரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எந்த காரியத்திலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள்.

வழிபாடு :
நவகிரக சுக்கிரனை வழிபடுவதன் மூலம் தெளிவு பிறக்கும்.

விருச்சகம் :

புத்துணர்ச்சியுடன் செயல்பட்டு எடுத்த முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். சம வயதினரால் அவ்வப்போது பிரச்சனைகள் தோன்றி மறையும். மனைவியின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். பழைய கடன் விவகாரங்களில் தேவையான ஆதரவுகள் கிடைக்கும். குடும்பத்தில் சுபச்செய்திகளால் சுபவிரயம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வாக்குறுதிகளை தவிர்ப்பது நன்மையை தரும். நண்பர்களிடம் சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும்.

வழிபாடு :
விநாயகரை வழிபடுவதன் மூலம் காரியத்தடைகள் குறையும்.

தனுசு :

மனதில் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகள் கைகூடும். முக்கிய பிரமுகர்களின் ஆதரவுகள் கிடைக்கும். தாய்மாமன்வழி உதவியால் முன்னேற்றமான சூழல் உண்டாகும். எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றுவதற்கான முயற்சிகள் மேம்படும். கூட்டுத்தொழிலில் உள்ளவர்கள் கூட்டாளிகளிடம் அனுகூலமாக நடந்து கொள்ளவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் உயர்வு உண்டாகும். தேவையற்ற செலவுகளை குறைத்து சேமிக்கும் எண்ணம் மேலோங்கும்.

வழிபாடு :
சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயரை வழிபடுவதன் மூலம் பொருளாதாரம் மேம்படும்.

மகரம் :

உடன்பிறப்புகளால் அனுகூலம் உண்டாகும். வேலையில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வெளிவட்டார தொடர்பு மற்றும் ஆதரவுகள் கிடைக்கும். உறவினர்கள் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும். பிள்ளைகளின் படிப்பில் மந்தநிலை உண்டாகும். நிலுவையில் இருந்த பழைய பாக்கிகள் வசூலாகும். தொழிலில் தங்கள் கீழ் உள்ள பணியாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் வரவிருக்கும் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

வழிபாடு :
ஞாயிறுதோறும் சிவபெருமானை வழிபடுவதன் மூலம் எண்ணத் தெளிவு உண்டாகும்.

கும்பம் :


உடன்பிறந்தவர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்கள் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே மனக்கசப்புகள் ஏற்படலாம். பொருளாதார நிலை சுமாராக இருக்கும். உற்றார், உறவினர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். புதிய சவாலான வாய்ப்புகளை சந்திக்க நேரிடும். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உழைப்பிற்கேற்ற பலன்கள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும்.

வழிபாடு :
செவ்வாய்க்கிழமைதோறும் முருகரை வழிபட தொழில் சார்ந்த உதவிகள் கிடைக்கும்.

மீனம் :

நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும். குடும்ப உறுப்பினர்கள் ஆடம்பர பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். இல்லத்தில் மகிழ்ச்சி தரும் சுபச்செயல்கள் நடைபெறும். புதிய வாகனம் வாங்குவது பற்றிய எண்ணங்கள் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. வேலையில் உடன் பணிபுரிபவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி நட்பு மலரும். தொழில் சம்பந்தமான முடிவுகளில் சிந்தித்து செயல்பட்டால் முன்னேற்றம் உண்டாகும். நீண்ட கால நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும்.

வழிபாடு :
திங்கட்கிழமைதோறும் அம்பிகையை வழிபடுவதன் மூலம் உத்தியோக உயர்வு உண்டாகும்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...