கண்ணாடி வழியே கான்ஃப்ரன்ஸ் ஹாலுக்குள் அமர்ந்திருக்கும் சிவாவைப் பார்த்து அவனுடைய அண்ணன் கோவிந்தன் அரண்டு போய் பிதற்றினான். “சார்…சத்தியமாய் அவன் செத்துப் போயிட்டான் சார்…அவனைக் குழியில் போட்டுப் புதைச்சு…காரியங்களெல்லாம் செஞ்சவன் நான் சார்” “சரி…போகலாம்..”என்று சொல்லி அந்த கோவிந்தனை அங்கிருந்து நகர்த்திச் செல்ல அவர்கள் முயல, “சார்…ஒரு தடவை…ஒரே தடவை…நான் அவனைப் பார்த்துப் பேசிட்டு வர்றேன் சார்” கெஞ்சினான். “கோவிந்தன்!…மொதல்ல ஒண்ணு நல்லாப் புரிஞ்சுக்கங்க!…அங்க உட்கார்ந்திட்டிருக்கறது…உங்க தம்பி சிவா அல்ல!…உங்க பங்காளி சுடலை” என்றான் திருமுருகன். “என்னை […]Read More
சதாசிவம் வீட்டுக்குள் செல்லாமல் வெளியே இருந்த வேப்ப மரத்துக்கு அடியில் நின்றுக்கொண்டு கண்ணில் நீர் கசிய கஸ்தூரியை நினைத்து அழுது கொண்டிருந்தார். வீட்டு வாசலில் எரிந்துகொண்டிருந்த மஞ்சள் விளக்கின் வெளிச்சத்தில் சதாசிவத்தின் உருவம் நிழல் போல் தென்பட்டது. ‘கடவுளே! கணவன்-மனைவி வாழ்க்கை என்பது இறுதிக்காலம் வரையில் நம்பிக்கையுடன் இருக்க வேண்டிய ஒன்று. நான் மட்டும் உனக்கு என்ன தவறு செய்தேன்? நம்பிக்கை இல்லாத வாழ்க்கையைக் கொடுத்து இப்படித் தவிடு பொடியாக்கி சிரித்துக் கொண்டிருக்கிறாய். தொழிலிலும் சுகம் பெறவில்லை, […]Read More
7 மகாபலிபுரம் எல்லையைத் தொட்டதும் காரின் வேகத்தைக் குறைத்த சித்ரா, மதுவைத் திரும்பிப் பார்த்துக் கேட்டாள், “இப்போ எங்கே போகப் போறாம்…?” தனியார் கெஸ்ட் ஹவுஸ் ஒன்றின் பெயரைச் சொன்னான் மது. “அங்கேயா புக் பண்ணியிருக்கீங்க…?” சித்ராவின் கண் விரிப்பையும், ஆச்சரியத்தையும் பார்த்த மது சற்று தயங்கினாள், “ஏன் கேட்கறீங்க..? கெஸ்ட்ஹவுஸ் வேணாமா..?” “நோ…நோ… இதுவரை நான் அந்த கெஸ்ட் ஹவுஸுக்குப் போனதே இல்லை. ரொம்ப அழகாக இருக்கும். ரொம்பப் பெரிய பணக்காரங்க, அதாவது கோடீஸ்வரங்க தங்கற […]Read More
26. வீட்டுச் சிறையில் மயூரி தொழிலதிபர் சரவணப்பெருமாள் குடும்பம் காலை டிபன் உண்டு கொண்டிருந்தனர். வழக்கம் போல் கனிஷ்கா, பாலில் கார்ன் பிளக்ஸ்-சை மிதக்க விட்டு, ஸ்பூனால் ஒவ்வொன்றாக எடுத்து வாயினுள் தள்ளிக் கொண்டிருந்தாள். தேஜஸ் பேப்பரை படித்துக்கொண்டே, நூடுல்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்தவன், வெறுப்புடன் இடதுகையால் பேப்பரை விசிறி எறிந்தான். “போச்சு..! இனிமே ராஜஸ்தான் ராயல்ஸ் என்னை திரும்பி பார்க்கும்னு தோணலை. புது பையன்க நல்லாவே ஆடிட்டு வராங்க..!” –தேஜஸ் கூற, கனிஷ்கா தந்தையைக் கேள்வியுடன் பார்த்தாள். […]Read More
ஆனந்தராஜ் சொன்னதைக் கேட்டு, வாயடைத்துப் போய் வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்த திருமுருகனையும், விஜயசந்தரையும் உசுப்பினான் ஆனந்தராஜ். “டேய்….இப்படி உட்கார்ந்திருந்தா என்ன பிரயோஜனம்?…ஏதாச்சும் பேசுங்கடா” முதலில் சுதாரித்துக் கொண்ட விஜயசந்தர், “வேற வழியில்லை…இந்த தடவையும்…முருகன் கிட்டச் சொல்லி அந்த ஆவியோட உதவியைக் கேட்க வேண்டியதுதான்” என்றான். மெல்ல சுயநினைவிற்கு வந்த திருமுருகனும் அதை ஆமோதித்தான். “அப்ப உடனே அந்தப் பெண்ணோட ஆவி கிட்டப் பேசு….இப்பவே பேசு” அவசரப்பட்டான் ஆனந்தராஜ். “இப்பவேவா?” தயங்கினான் திருமுருகன். “ஏண்டா…நாங்க இங்க இருந்தா அந்த […]Read More
-அமானுஷ்ய தொடர்- நாக வழிபாடு, சூரிய வழிபாடு போலவே உலகம் முழுவதும் பரவியிருந்தது. நம் பாரத நாட்டில் வட மாநிலங்களில் உள்ள காஸ்மீர் பள்ளத்தாக்குகளில் ‘காங்கரா’ மற்றும் ‘சாம்பா’ பகுதியிலுள்ள கோயில்களில் சாந்தன நாகம், இந்துரு நாகம், கார்ஷ் நாகம், கார்க்கோடக நாகம், சாபிர் நாகம், பிரிதம் நாகம், டாகட் நாகம், பசக் நாகம் மற்றும் சேஷ நாகம் முதலிய நாகங்கள் மனித உருவில் வணங்கப்படுகின்றன. நாகங்களில் பெரிய பாம்புகளை விட, சிறிய பாம்புகளே ஆபத்தானவை.பெரிய வகை […]Read More
“அண்ணியோட தலை மறைஞ்சா போதும், இப்படி ஒரு ஃபுல் பாட்டில் வாங்கி வச்சுக்கிட்டு கூத்தடிக்க வேண்டியதே வேலையா போச்சு. இது உங்களுக்குப் போரடிக்கலையா?” எனக் கேட்டான், நல்லதம்பி. “அட போடா ! அவ எப்ப பார்த்தாலும் பேசி பேசி உயிரை எடுக்ககுறா. அதுக்கு இதுவே தேவல. ஆண்களுக்கு இந்தச் சொர்க்கத்தை விட்டா வேற என்னடா இந்த உலகத்தில இருக்கா என்ன?” என்று பதில் கூறினான், தனஞ்செழியன். “சரி அதை விடுங்க, தலைவர் கிட்ட இருந்து ஏதாவது பதில் […]Read More
25. இரண்டில் ஒன்று, என்னிடம் சொல்லு..! போதினியும், சுபாகரும், குகன்மணியிடம் பணிபுரியும், குனோங் மற்றும் குமுதினியின் வாரிசுகள் என்பதை அறிந்துகொண்டதும், எல்லாமே குகன்மணி அரங்கேற்றும் நாடகம் என்பதை உணர்ந்தாள் மயூரி. சுபாகரும், மயூரியும், பண்ணை வீட்டு மாடி அறையில் இவளது குடும்பத்தினர் பேசியதை ரகசியமாக பதிவு செய்ய பட்டன் மைக் எதையாவது பொருத்தியிருக்க வேண்டும். இல்லையென்றால், குகன்மணியால் இவர்கள் பேசியதை எப்படி சரியாக யூகிக்க முடியும்..? குகன்மணி மிகவும் ஆபத்தானவன். அவனது முருக பக்திகூட, ஒரு புகைத்திரையாகத்தான் […]Read More
பளீரென்று மஜந்தா நிற சல்வார் கமீஸுடன் காரிலிருந்து இறங்கிய சித்ராவைத்தான் முதலில் பார்த்தான் மதுசூதனன். ‘யார் இந்தப் பெண்… இவ்வளவு அழகாக இருக்கிறாளே…’ என்று நினைத்துக் கொண்டான். கூடவே பின்னால் இறங்கிய ஷைலஜா கண்ணில் பட்டதும் தான் அவள் சித்ரா என்பது புரிந்தது. ஒரு வினாடி மனம் வாடிற்று. அதுவரை சித்ராகூட வரப்போவதைப் பற்றின பிரக்ஞையற்றிருந்தான், ‘ஷைலஜாவுடன் மகாபலிபுரம்’ என்பதைத் தவிர வேறு நினைவின்றி இருந்தால், அந்த நாள் முழுதும் ஷைலஜாவுடன் எப்படி இருக்க வேண்டும், அவளை […]Read More
தான் தங்குமிடத்திற்கு வந்த சிவா, நேரே வாஷ் பேஸினருகே சென்று அவசரமாய் வாயைக் கொப்பளித்தான். தூங்குவது போல் பாசாங்கு செய்து கொண்டு படுத்திருந்த குள்ள குணா அரைக் கண்ணால் அவனது நடவடிக்கைகளை கண்காணித்துக் கொண்டேயிருந்தான். “எதுக்கு இந்த நேரத்துல வந்து வாய் கொப்பளிக்கிறான்?” சட்டையைக் கழற்றாமல் அப்படியே படுக்கையில் விழுந்து குப்புறப் படுத்த சிவா, சரியாக மூன்றாவது நிமிடம் பெரும் குறட்டை சத்தத்தோடு உறங்க ஆரம்பித்தான். அவன் விஷயத்தில் பல முரண்பாடுகளைக் கண்டுபிடித்த குள்ள குணா பெரும் […]Read More
- சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை அறிவிப்பு..!
- மே தினத்தை ஒட்டி தொழிலாளர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து..!
- தமிழ்நாடு மீனவர்களை தாக்கி இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்..!
- வரலாற்றில் இன்று ( 30.04.2024 )
- இன்றைய ராசி பலன்கள் ( 30 ஏப்ரல் செவ்வாய்க்கிழமை 2024 )
- சர்வதேச நடன தினமின்று
- ஓவியர் கோபுலு
- ஓவியர் ரவி வர்மா
- பாவேந்தர் பாரதிதாசன்
- ஊட்டியில் இதுவரை இல்லாத அளவிற்கு வெப்பநிலை பதிவு..!