இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் சேவை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ ஏற்கனவே 2ஜி சேவை வாடிக்கையாளர்களை 4ஜி மற்றும் 5ஜி-க்கு கொண்டு வருவதற்காக மிகவும் மவிவு விலையில் ஸ்மார்ட்போன், பியூச்சர் போன்களை அறிமுகம் செய்துள்ளது. இதன் அடுத்தக்கட்டமாக பிராட்பேண்ட் சேவையிலும் 5ஜி சேவை கொண்டு வர ஜியோ ஏர்ஃபைபர் சேவையை செப் 19 ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. ஜியோ 2016ல் அறிமுகம் செய்யப்பட்ட போதே 4ஜி சேவை மட்டுமான ஸ்பெக்டரம் கொண்டு களத்தில் இறங்கியது. ஜியோவின் […]Read More
கூண்டில் சிக்கியது திருப்பதி மலை பாதையில் பக்தர்களை அச்சுறுத்திய சிறுத்தை…
திருப்பதி மலைப்பாதையில் பக்தர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த சிறுத்தை இன்று அதிகாலை கூண்டில் சிக்கியது. இதுவரை 4 சிறுத்தைகள் சிக்கியுள்ளன. இன்று பிடிபட்ட சிறுத்தையை உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்ல வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். ஆந்திர மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருப்பதி திருமலை கோவில் உள்ளது. திருப்பதி ஏழுமலையான தரிசிக்க தினமும் இங்கு பல ஆயிரம் பக்தர்கள் வந்து செல்கின்றனர். நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் திருப்பதி கோவிலுக்கு வருகை தருவார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்கள் […]Read More
ஒரே நாளில் 4 மணிநேரத்தில் 2 மாணவர்கள் தற்கொலை! நீட் தேர்வு அச்சம்
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் ஒரே நாளில் 4 மணிநேர இடைவெளியில் அடுத்தடுத்து 2 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் கோட்டாவில் நீட் தேர்வுக்கு அஞ்சி இந்த ஆண்டு இதுவரை 22 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு என்பது திணிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு மாநில பாடத் திட்டத்தை பின்பற்றுகிறது. மத்திய அரசு தரப்பு சிபிஎஸ்இ கல்வியை […]Read More
விவசாயிகளைக் காக்க மாபெரும் போராட்டம் – எடப்பாடி பழனிச்சாமி எச்சரிக்கை !
தி.மு.க. அரசு மெத்தனப் போக்கோடு செயல்பட்டால், பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளைக் காக்க மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளரும். எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ஒவ்வொரு ஆண்டும் குறுவை பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 முதல் செப்டம்பர் 15-ந்தேதி வரை சுமார் 5.25 லட்சம் ஏக்கர் பாசன நிலங்களுக்கு 125 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும். இதற்கு மேட்டூர் அணையிலிருந்து 99.74 டி.எம்.சி. தண்ணீர் […]Read More
தென் ஆப்ரிக்கா சென்ற பிரதமர் மோடி, சீன அதிபர் ஷீ ஜின்பிங்கை தனியாக சந்தித்து பேசியது பரபரப்பினை கிளறி இருக்கிறது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் அடங்கிய ‘பிரிக்ஸ்’ அமைப்பின் மாநாடு, தென் ஆப்ரிக்காவில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடி, சீன அதிபர் ஷீ ஜின்பிங்கை தனியாக சந்தித்து பேசியதாக செய்திகள் வந்துள்ளது. இந்த பேச்சு வார்த்தை குறித்து பிரதமர் மோடி பேசுகையில், கிழக்கு லடாக்கில் […]Read More
நடப்பு ஒலிம்பிக் சாம்பியனும் இந்திய ஈட்டி எறிதல் விளையாட்டு வீரர் நீரஜ் சோப்ரா இறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறார். ஹங்கேரியில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஈட்டியெறிதல் இறுதிப்போட்டிக்கு இந்தியாவைச் சேர்ந்த நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா முன்னேறி உள்ளார். ஆடவர் ஈட்டியெறிதல் தகுதிச் சுற்று புடாபெஸ்ட் நகரில் நடைபெற்றது.இதில், தனது முதல் முயற்சியிலேயே 88 புள்ளி 77 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியெறிந்து முதல் வீரராக இறுதிப்போட்டிக்கு நீரஜ் சோப்ரா முன்னேறினார். இதன்மூலம், அடுத்த […]Read More
ஆகஸ்ட் 23ம் தேதி இனி தேசிய விண்வெளி நாளாக கொண்டாடப்படும்… பிரதமர் மோடி!
பிரதமர் மோடி விஞ்ஞானிகளை பாராட்டுவதற்காக இன்று காலை இஸ்ரோ சென்றிருந்தார். இஸ்ரோ மையம் சென்ற அவரை, இஸ்ரோ தலைவர் சோம்நாத் மற்றும் விஞ்ஞானிகள் வரவேற்றனர். சந்திரயான் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல், சந்திரயான் 3 மாதிரியை நினைவுப் பரிசாக வழங்கினார். பின்னர், இஸ்ரோ தலைவர் படம்பிடிக்கப்பட்ட நிலவின் போட்டோக்களை வழங்கினார். பின்னர் சந்திரயான் 3 விண்கலம் நிலவில் கால் பதித்தது குறித்து, இஸ்ரோ தலைவர் சோம்நாத் விளக்கமாக பிரதமர் மோடிக்கு எடுத்துக் கூறினார். பிரதமர் மோடி விஞ்ஞானிகளுக்கு […]Read More
மதுரையில் சுற்றுலா செல்ல நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரயிலின் சிறப்பு முன்பதிவு பெட்டியில் திடீரென ஏற்பட்ட தீயில் 9 பேர் பலியாகி உள்ளனர். இந்த ரயிலில் 90 வடமாநில பயணிகள் பயணித்துள்ளனர். மதுரை ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரெயில் பெட்டியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் வந்துள்ளது. முதலில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், தற்போது எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தீ விபத்து ஏற்பட்ட ரெயில் பெட்டி, சுற்றுலா ரெயிலின் ஒரு […]Read More
முதல்வரின் காலை உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவுகள் பட்டியல் என்னென்ன தெரியுமா?
தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதன் மூலமாக தமிழகத்தில் 1.14 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு காலையில் சூடான மற்றும் சத்தான உணவு வழங்கப்படுகிறது. அதாவது பள்ளி மாணவர்களுக்கு உப்புமா, கோதுமை ரவா, வெண்பொங்கல், கிச்சடி ஆகியவை காலை சிற்றுண்டியாக வழங்கப்படுகிறது. தமிழகத்தில் அரசு தொடக்க பள்ளிகளில் […]Read More
தனியிசை (ஆல்பம்), ராப் பாடல்களை வெளியிட்டு பிரபலம் அடைந்தவர் ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி. பின்னர், இசையமைப்பாளர், நடிகர், இயக்குநர் எனப் பன்முகத் தன்மையோடு தமிழ் படங்களில் நடித்தும் இயக்கியும் வருகிறார். அவர் படித்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். டாக்டர் பட்டம்கோவையிலுள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் மேலாண்மைப் பிரிவில் ‘இசைத் தொழில் முனைவோர்’ (Musical Entrepreneurship) என்பதை மையமாக வைத்து ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டு வந்தார். பல புதிய தனியிசைக் கலைஞர்களைத் திரைப்படத் […]Read More
- வரலாற்றில் இன்று ( 04.05.2024)
- இன்றைய ராசி பலன்கள் ( மே 04 சனிக்கிழமை 2024 )
- சுஜாதா பற்றி ….ஒரு வாசகரின் மனம் திறப்பு /சவிதா
- ரூ. 2000 நோட்டுகள் 97.76% வங்கிக்கு திரும்பியுள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல்..!
- ஆங்கிலத்தில் வெளியான கபிலன் வைரமுத்து எழுதிய நாவல் “ஆகோள்”
- ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார் ராகுல் காந்தி..!
- நிலவின் துருவப் பள்ளங்களில் நீர் பனிக்கட்டிகள் : இஸ்ரோ
- நாளை அக்னி நட்சத்திரம் – தொடங்குகிறது கத்தரி வெயில்..!
- வரலாற்றில் இன்று ( 03.05.2024)
- இன்றைய ராசி பலன்கள் ( மே 03 வெள்ளிக்கிழமை 2024 )