சென்டிரல்-சூலூர்பேட்டை இடையே 19 மின்சார ரெயில்கள் ரத்து; தெற்கு ரெயில்வே அறிவிப்பு..!

சென்னை சென்டிரலில் இருந்து இரவு 11.40 மணிக்கு ஆவடி செல்லும் ரெயிலும் ரத்து செய்யப்படுகின்றன.

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை சென்டிரல்-கூடூர் வழித்தடத்தில் உள்ள பொன்னேரி-கவரப்பேட்டை ரெயில் நிலையங்கள் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று (சனிக்கிழமை) மற்றும் வருகிற 11-ந் தேதி 19 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

அதன்படி, சென்டிரலில் இருந்து இன்று மற்றும் 11-ந் தேதி காலை 10.30, 11.35 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்களும், கும்மிடிப்பூண்டியில் இருந்து மதியம் 1, 2.30 மாலை 3.15 மணிக்கு சென்டிரல் வரும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகின்றன.

சென்டிரலில் இருந்து காலை 10.15 மதியம் 12.10, 1.05 மணிக்கு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரெயில்களும், சூலூர்பேட்டையில் இருந்து மதியம் 1.15, மாலை 3.15, இரவு 9 மணிக்கு சென்டிரல் வரும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகின்றன.

கடற்கரையில் இருந்து காலை 9.40, மதியம் 12.40 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்களும், கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 10.55 மணிக்கு கடற்கரைக்கு வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகின்றன.

சூலூர்பேட்டையில் இருந்து மாலை 3.50 மணிக்கு நெல்லூர் செல்லும் பயணிகள் ரெயிலும், நெல்லூரில் இருந்து மாலை 6.45 மணிக்கு சூலூர்பேட்டை செல்லும் பயணிகள் ரெயிலும், சென்டிரலில் இருந்து இரவு 11.40 மணிக்கு ஆவடி செல்லும் ரெயிலும் ரத்து செய்யப்படுகின்றன.

எனவே இந்த 2 நாட்களிலும் சென்டிரல்-பொன்னேரிக்கு காலை 10.30 மணி, பொன்னேரி-சென்டிரலுக்கு மதியம் 1.18, மாலை 3.33 மணி, கடற்கரை-பொன்னேரிக்கு மதியம் 12.40 மணி, சென்டிரல்-மீஞ்சூருக்கு காலை 11.35 மணி, மீஞ்சூர்-சென்டிரலுக்கு மதியம் 2.59 மணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!