இன்றைய ராசி பலன்கள் ( மார்ச் 30 ஞாயிற்றுக்கிழமை 2025 )

‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் மார்ச் 30-ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.

குரோதி வருடம் பங்குனி மாதம் 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 30.03.2025 சந்திர பகவான் இன்று மீன ராசியில் பயணம் செய்கிறார். இன்று பிற்பகல் 02.50 வரை பிரதமை. பின்னர் துவிதியை.இன்று மாலை 06.37 வரை ரேவதி. பின்னர் அஸ்வினி.பூரம் உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷ ராசி அன்பர்களே!

மகிழ்ச்சியான நாளாக அமையும். எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும்.தேவையான பணம் கையில் இருப்பதால், உற்சாகமாகச் சமாளித்துவிடுவீர்கள். கணவன் -மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளியூர்களில் இருக்கும் கோயில்களுக்குச் சென்று வழிபடும் வாய்ப்பு ஏற்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் புதிய முயற்சி சாதகமாக முடியும்.

ரிஷப ராசி அன்பர்களே!

அதிர்ஷ்டகரமான நாளாக இருக்கும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. ஆனால், புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிடவும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார். சிலருக்கு விருந்து விசேஷங்களில்  கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருப்பது மகிழ்ச்சி தரும்.

மிதுன ராசி அன்பர்களே!

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். அரசாங்கக் காரியங்கள் சற்று இழுபறிக்குப் பிறகே முடியும். சகோதரர்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள். அவர்களுக்காக செலவு செய்ய நேரிடும். சிலருக்கு திடீர் பயணம் மேற்கொள்ள நேரிடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.

கடக ராசி அன்பர்களே!

எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலருக்கு உறவினர்களால் புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். நீண்டநாள் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். பொறுமை காப்பது நல்லது. வியாபாரத்தில் பணியாளர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும்.

சிம்ம ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. தாயின் ஆலோசனைப்படி செயல்படுவது நன்மை தரும். இன்று கிடைக்கும் என்று எதிர்பார்த்த பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடும். பிற்பகலுக்கு மேல் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். அலுவலகத்தில் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. உங்கள் பணிகளை பிறரிடம் ஒப்படைக்கவேண்டாம். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் பிரச்னைகள் ஏற்படக் கூடும்.

கன்னி ராசி அன்பர்களே!

உற்சாகமான நாளாக இருக்கும். புதிய முயற்சி சாதகமாக முடியும். கணவன் -மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்து வேற்றுமை விலகி அந்நியோன்யம் அதிகரிக்கும். தாயின் உடல் நலனில் கவனம் தேவை. மாலையில் வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகமும் மகிழ்ச்சியும் ஏற்படும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும்.

துலா ராசி அன்பர்களே!

மனதில் தைரியம் அதிகரிக்கும். காரியங்களில் வெற்றி உண்டாகும். புதிய முயற்சி எடுப்பதற்கு உகந்த நாள். எதிரிகள் வகையில் ஏற்பட்ட பிரச்னைகள் மறையும். குடும்பம் தொடர்பாக எடுக்கும் முக்கிய முடிவு சாதகமாக முடியும். அரசாங்க அதிகாரிகள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். அலுவலகத்தில் உங்களை விமர்சித்த சக ஊழியர்கள் மன்னிப்பு கேட்பார்கள். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே இருக்கும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

இன்று எதிலும் பொறுமை அவசியம். சகோதரர்கள் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். சிலருக்கு வெளியூர்களில் இருக்கும் கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகை கிடைப்பது தள்ளிப் போகும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.

தனுசு ராசி அன்பர்களே!

இன்று வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.வெளியூரிலிருந்து நீண்ட நாளாக எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக் கக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதால் மனதில் சோர்வு ஏற்படக்கூடும். வியாபா ரத்தில் பங்குதாரர், பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

மகரராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். இளைய சகோதரர் களால் அனுகூலம் உண்டாகும். புதிதாகத் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும். வாழ்க்கைத் துணைவழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். குடும்பத்துடன் விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் பணிச்சுமை குறைவதால் உற்சாகமாக இருப்பீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும்.

கும்பராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும். தேவையான பணம் கையில் இருந்தாலும் தேவையற்ற செலவுகள் ஏற்படுவதால் மனதில் சஞ்சலம் ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகையால் வீட்டில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிடவேண்டாம். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும்.

மீனராசி அன்பர்களே!

மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். முக்கிய முடிவுகளைத் துணிந்து எடுப்பீர்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையால் சில செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!