அரசு போக்குவரத்து கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது..!

அரசு போக்குவரத்து கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அரசு போக்குவரத்துக்கழகத்தில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு நாளை முதல் ஏப்.21ம் தேதி வரை ( www.arasubus.tn.gov.in) விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட 8 மண்டலங்களுக்கு உட்பட்ட 25 பகுதிகளில் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி கும்பகோணம் 756, சேலம் 486, சென்னை 364, நெல்லையில் 362 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பிப்பதற்கு தகுதியாக குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!