கோலாகலமாக தொடங்கியது மதுரை மீனாட்சியம்மன் கோயில் தெப்பத் திருவிழா..!

உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தை மாத தெப்பத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலகலமாக தொடங்கியது. கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டபோது அங்கு எழுந்தருளிய மீனாட்சி, சுந்தரேசுவரர் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக அதிகாலையில் மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பட்டு, வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் சென்று, அங்கு மிக விமரிசையாக அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினார். சுவாமி காலையில் இரண்டு முறை தெப்பக்குளத்தை சுற்றி வந்த நிலையில் மாலையில் தெப்பக்குளத்தின் மைய மண்டபத்தில் எழுந்தருளுவார்.

இன்று தொடங்கி 11 நாட்கள் தெப்பத்திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா தைப்பூச நிகழ்வு பிப்.11-ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் காலையில் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் அதிகாலை கோயிலில் இருந்து புறப்படாகி தெப்பக்குளத்தைச் சென்றடைவர். அங்கு அலங்கரித்த தெப்பத்தில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளி தெப்பத்திருவிழா நடைபெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!