சீனாவில் – குடியரசு தினவிழா ரத்து..!

சீனாவில் உள்ள இந்திய தூதரகம் அவசர அறிவிப்பு..! கரோனோ வைரஸ் எதிரொலி..!
சீன தலைநகர் பீஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்தில் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படும் இந்திய குடியரசு தினவிழா கொண்டாடுவதை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. உலக நாடுகள் அனைவர் மத்தியிலும் ஒரு விதமான பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது சீனாவில் தென்படும் கரோனோ வைரஸால் மனிதர்களுக்கு ஏற்படும் பெரும் பாதிப்பு மற்றும் இறப்பு விகிதம்.

இதன் காரணமாக அனைத்து நாடுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்தியாவிலும் சீனாவில் இருந்து மும்பை வந்த ஆறு பேருக்கு வைரஸ் இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். அதில் நான்கு பேருக்கு இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற இருவரும் கஸ்தூர்பா மருத்துவமனையில் தனிமையில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரப்படுகிறது. 
Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!