இன்றைய ராசி பலன்கள் ( ஆகஸ்ட் 28 புதன்கிழமை 2024 )

 இன்றைய ராசி பலன்கள் ( ஆகஸ்ட் 28 புதன்கிழமை 2024 )

தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் ஆகஸ்ட் 28-ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.

குரோதி வருடம் ஆவணி மாதம் 12 ஆம் தேதி புதன்கிழமை 28.08.2024 சந்திர பகவான் இன்று மிதுன ராசியில் பயணம் செய்கிறார். இன்று காலை 06.10 வரை நவமி. பின்னர் தசமி .இன்று இரவு 08.33 வரை மிருகசீரிஷம். பிறகு திருவாதிரை.விசாகம் அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷ ராசி அன்பர்களே!

பல வகைகளிலும் அனுகூலமான நாள். சகோதர வகையில் எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும். நண்பர்களால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உறவினர்கள் வகையில் குடும்பத்தில் மகிழ்ச்சியுடன் செலவுகளும் ஏற்படும். மற்றவர்களுடன் வீண் விவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். சிவ வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும்.

ரிஷப ராசி அன்பர்களே!

தந்தைவழியில் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். வியாபாரம் எப்போதும்போல் நடைபெறும். முருகப்பெருமானை வழிபட மகிழ்ச்சி கூடுதலாகும்.

மிதுன ராசி அன்பர்களே!

உடல்நலனில் கவனம் தேவை. நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். தாய் மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். மூன்றாவது நபரின் தலையீடு காரணமாக கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பணியாளர்களுக்காக செலவு செய்ய நேரிடும். மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலம் சிரமங்கள் குறையும்.

கடக ராசி அன்பர்களே!

நண்பர்கள் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். புதிய முயற்சிகளில் ஈடுபட உகந்த நாள். வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படும். இளைய சகோதர வகையில் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகளால் வீட்டில் உற்சாகமான சூழ்நிலை ஏற்படும். மனதில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைப்பது மகிழ்ச்சி தரும். விநாயகர் வழிபாடு காரியங்களில் வெற்றி ஏற்படும்.

சிம்ம ராசி அன்பர்களே!

தொடங்கும் காரியங்கள் சாதகமாக முடியும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகள் எதுவும் இன்றைக்கு எடுக்கவேண்டாம். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக் கும். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பேசும்போது பொறுமை அவசி யம். வியாபாரத்தில் சக வியாபாரிகளின் உதவி கிடைப்பது மகிழ்ச்சி தரும். தட்சிணாமூர்த்தி வழிபாடு தடைகளைத் தகர்க்கும்.

கன்னி ராசி அன்பர்களே!

வீட்டில் கலகலப்பான சூழ்நிலை காணப்படும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிடுவீர்கள். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்குப் பக்கபலமாக இருப்பார். சிலருக்குப் பிள்ளைகள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. தாய்வழி உறவுகள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரம் வழக்கம்போல் நடைபெறும். இன்று நீங்கள் விநாயகரை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.

துலா ராசி அன்பர்களே!

உற்சாகமாகச் செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்ற செலவு செய்ய நேரிடும். வாழ்க்கைத்துணை உங்கள் பணிகளில் பங்கெடுத்துக் கொள் வது ஆறுதலாக இருக்கும். சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரம் வழக்கம்போல் நடைபெறும். ஆஞ்சநேயர் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கச் செய்யும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

எந்த முடிவையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. குடும்பத்தில் மற்றவர்களுடன் அனுசரித்துச் செல்லவும். கணவன் – மனைவிக்கிடையே சிறு சிறு பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வியாபாரத்தில் பொறுமை மிகவும் அவசியம். அம்பிகை வழிபாடு அல்லல்களைப் போக்கி மன நிம்மதி தரும்.

தனுசு ராசி அன்பர்களே!

சகோதரர்கள் வகையில் அலைச்சலுடன் ஆதாயமும் இருக்கும். அவசர முடி வுகளைத் தவிர்க்கவும். பிள்ளைகளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். சிலருக்கு திடீர் பண வரவுக் கும் வாய்ப்பு உண்டு. பிற்பகலுக்குமேல் கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக் கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விடவும் கூடுதலாக இருக்கும். இன்று மகாலட்சுமி வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும்.

மகர ராசி அன்பர்களே!

காரியங்களில் அனுகூலம் உண்டாகும் நாள். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். செலவுகளைச் சமாளிக்கத் தேவையான பணம் இருப்பதால் உற்சாகமாகவே இருப்பீர்கள். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு நீங்கும். வியாபாரத்தில் விற்பனையை அதிகரிப்பதில் பணியாளர்கள் உற்சாகத்துடன் செயல்படுவார்கள். வேங்கடேச பெருமாளை வழிபடுவதன் மூலம் விருப்பம் நிறைவேறும்.

கும்பராசி அன்பர்களே!

மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்படும். அன்றாடப் பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி இருக்கும் கணவன் – மனைவிக்கிடையே வீண் விவாதங்கள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப் பது நல்லது. வியாபாரம் சற்று சுமாராகத்தான் இருக்கும். கால பைரவரை வழிபடுவதன் மூலம் மனதில் தெளிவு பிறக்கும்.

மீனராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளுக்கு மிகவும் அனுகூலமான நாள். குடும்பத்தினர் உங் கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வர். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் எதிர்பாராத ஆதாயம் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத செலவுகளுக்கு வாய்ப்பு உண்டு. இளைய சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். ஆறுமுகப்பெரு மானை வழிபட அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...