மார்கழி மாத ராசிபலன்கள் !! – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

 மார்கழி மாத ராசிபலன்கள் !! – ஜோதிடர் அ.மோகன்ராஜ்
மேஷம் :
எடுக்கும் முயற்சிகளில் எண்ணிய வெற்றி கிடைக்கும். தொழில் சார்ந்த தனவரவுகள் தாராளமாக அமையும். குடும்ப நபர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்களின் ஆதரவால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் சாதகமாக அமையும். வெளியூர் தொடர்பான பணி மற்றும் பயண வாய்ப்புகள் ஈடேறும். வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் மற்றும் ஒப்பந்தங்கள் கிடைக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று மகிழ்வீர்கள். கடன் சார்ந்த செயல்பாடுகளில் நிதானம் வேண்டும்.
வழிபாடு :
செவ்வாய்க்கிழமைதோறும் முருகரை வழிபாடு செய்வதால் சுபிட்சம் உண்டாகும்.
—————————————————————-
ரிஷபம் :
சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகளில் எதிர்பார்த்த உதவிகள் காலதாமதமாக கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். புத்திரர்களின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். உறவினர்களிடம் தேவையற்ற கருத்துக்களை பகிர்வதை தவிர்க்கவும். நண்பர்களுடன் விருந்து, கேளிக்கைகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். சமூக பணியில் இருப்பவர்கள் கோபத்தினை விடுத்து நிதானத்துடன் செயல்படவும். திட்டமிட்ட காரியங்களில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். மாணவர்கள் பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை படிப்பது சிறப்பை அளிக்கும்.
வழிபாடு :
முனீஸ்வரரை வெள்ளிக்கிழமைதோறும் வழிபட குழப்பங்கள் நீங்கும்.
—————————————————————-
மிதுனம் :
அரசு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தந்தை செய்துவந்த தொழிலில் ஈடுபாடு உண்டாகும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் அபிவிருத்தியை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். சகோதரர்களிடம் அனுசரித்து செல்லவும். பலவகையான சிந்தனைகளால் மனதில் அவ்வப்போது குழப்பங்கள் தோன்றி மறையும். கூட்டாளிகளின் மூலம் சாதகமான சூழல் உண்டாகும். தூக்கத்தில் எழும் வீண் கனவுகளால் அவ்வப்போது சோர்வு உண்டாகும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான இன்னல்கள் குறையும். சக ஊழியர்களிடம் அலுவலகம் தொடர்பான ரகசியங்களை பகிர்வதை தவிர்க்கவும். பிள்ளைகளின் எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும்.
வழிபாடு :
நவகிரக குருவை வழிபட பிரச்சனைகள் குறையும்.
—————————————————————-
கடகம் :
எதிர்பாலின மக்களின் மூலம் யோகம் உண்டாகும். தம்பதியரிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்பாராத நெருக்கடியான சூழலால் கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படலாம். மறைமுக எதிர்ப்புகளின் மூலம் காலதாமதம் உண்டாகும். கொடுக்கல், வாங்கல் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். எதிர்பாராத அலைச்சல்களால் உடல்சோர்வு ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய சூழல் உண்டாகும். எதிர்பார்த்த தனவரவு தாமதப்படும். வாக்குறுதிகளை தவிர்க்கவும்.
வழிபாடு :
சப்த கன்னியர்களை வழிபாடு செய்து வர எண்ணங்கள் ஈடேறும்.
—————————————————————-
சிம்மம் :
விலை உயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும். சம வயதினருடன் அனுசரித்து செல்லவும். பூர்வீக சொத்துக்களின் மூலம் இலாபம் அதிகரிக்கும். மனதில் ஆன்மிக சிந்தனைகள் அதிகரிக்கும். ஒப்பந்தத் தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றமான சூழல் உண்டாகும். புதிய வாகனம் வாங்கும் முயற்சிகள் வெற்றியடையும். வெளிவட்டாரங்களில் உங்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். உழைப்பிற்கேற்ற பலன்கள் காலதாமதமாக கிடைக்கும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் உண்டாகும். மின்சாதன பொருட்களின் மூலம் இலாபம் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு ஆதரவாக செயல்படும்போது சிந்தித்து செயல்படவும்.
வழிபாடு :
ஞாயிறுதோறும் சிவபெருமானை வழிபாடு செய்து வர மனதில் இருக்கும் சங்கடங்கள் குறையும்.
—————————————————————-
கன்னி :
கலை சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். சிறு தூர பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வாகன யோகம் உண்டாகும். பழைய வீடுகளில் சிறு சிறு மாற்றங்கள் செய்வதற்கான சூழல் ஏற்படும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் மேன்மை உண்டாகும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட குறைபாடுகள் நீங்கி சுபிட்சம் ஏற்படும். விவசாயம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான புதிய முயற்சிகளில் எண்ணிய வெற்றி கிடைக்கும். அக்கம்பக்கம் வீட்டார்களால் நன்மை உண்டாகும். கடினமான வேலைகளையும் எளிதாக செய்து முடித்து அனைவராலும் பாராட்டப்படுவீர்கள்.
வழிபாடு :
புதன்கிழமைதோறும் நரசிம்மரை வழிபாடு செய்து வர மனதில் எண்ணியவை நிறைவேறும்.
—————————————————————-
துலாம் :
நீண்ட நாள் நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். வீட்டை அழகுபடுத்துவதற்கான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகம் சம்பந்தமான சுபச்செய்திகள் கிடைக்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். நெருக்கமானவர்களின் மூலம் நன்மை உண்டாகும். பயணங்கள் தொடர்பான முயற்சிகளில் சுபச்செய்திகள் கிடைக்கும். சகோதரர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். கடன் பிரச்சனைகளை படிப்படியாக குறைப்பதற்கான முயற்சிகள் மேம்படும். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.
வழிபாடு :
சனிக்கிழமைதோறும் விநாயகரை வழிபட மேன்மை உண்டாகும்.
—————————————————————-
விருச்சகம் :
நண்பர்களால் உத்தியோகம் சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் பயணங்களின் மூலம் மனதில் மாற்றமான சூழல் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சொத்துக்கள் சேர்ப்பதற்கான முயற்சிகளில் ஆதரவான சூழல் ஏற்படும். பேச்சில் நிதானம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் வருமானம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் கோபத்தினை விடுத்து நிதானத்துடன் செயல்படவும். பெண்கள் நிதானத்துடன் செயல்படுவதன் மூலம் எண்ணிய காரியங்கள் சாதகமாக முடியும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற பெரியோர்களின் ஆலோசனைகள் உதவியாக இருக்கும்.
வழிபாடு :
புதன்கிழமைதோறும் பெருமாள் கோவிலுக்கு சென்று வர தடைகள் அகலும்.
—————————————————————-
தனுசு :
உத்தியோகத்தில் முயற்சிக்கேற்ப உயர்வு உண்டாகும். குடும்பத்தில் சுபச்செய்திகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். அழகிய பேச்சுக்களால் எண்ணிய செயல்களை செய்து முடிப்பீர்கள். பொன் நகைகளை வாங்கி மகிழ்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர் பணி வாய்ப்புகளால் வருமானம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் வாடிக்கையாளர்களால் நன்மை உண்டாகும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகளில் தெளிவு கிடைக்கும். உடல் உழைப்பு அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு மக்களிடத்தில் மரியாதை உண்டாகும். ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபாடு உண்டாகும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். பிள்ளைகளிடம் கனிவுடன் பழகவும்.
வழிபாடு :
ஜீவ சமாதிகளை வியாழக்கிழமைதோறும் சென்று வழிபாடு செய்து வர எண்ணத்தெளிவு கிடைக்கும்.
—————————————————————-
மகரம் :
உடல் தோற்றப்பொலிவு மற்றும் வசீகரம் அதிகரிக்கும். மனதில் நினைத்த செயல்களில் வெற்றி கிடைக்கும். தனவரவு அதிகரிக்கும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடுவதை தவிர்க்கவும். பழைய கடன்கள் வசூலாகும். வியாபாரம் தொடர்பான முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். தேவையற்ற செலவுகளால் சேமிப்புகள் குறையும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். கோவில் தொடர்பான திருப்பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த செயல்களை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் தாய்வழி உறவினர்களின் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே அவ்வப்போது சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழல் ஏற்படும்.
வழிபாடு :
திங்கட்கிழமைதோறும் பார்வதி அம்மனை வழிபாடு செய்து வரவும்.
—————————————————————-
கும்பம் :
வியாபாரம் சார்ந்த தொழில் முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். குடும்ப பொருளாதாரம் உயரும். எதிர்பாராத தனவரவுகளால் சேமிப்பு அதிகரிக்கும். மனதில் உள்ள ஆசைகள் நிறைவேறும். தொழில் சார்ந்த முயற்சிகளில் எண்ணிய வெற்றி கிடைக்கும். இன்ப சுற்றுலாக்கள் சென்று வருவீர்கள். பெண்களுக்கு செயல்பாடுகளில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு கிடைக்கும். சங்கம் தொடர்பான பணிகளால் ஆதாயம் உண்டாகும். இணையம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு உயர்வு உண்டாகும். புதிய தொழில் சார்ந்த எண்ணங்களை செயல்வடிவமாக மாற்றுவீர்கள். உணவு விஷயங்களில் கவனம் வேண்டும்.
வழிபாடு :
வெள்ளிக்கிழமைதோறும் மகாலட்சுமியை வழிபாடு செய்து வர எண்ணங்கள் மேம்படும்.
—————————————————————-
மீனம் :
உறவினர்களால் நன்மைகள் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகன பராமரிப்பு செலவுகள் அவ்வப்போது ஏற்பட்டு மறையும். எதிர்ப்புகளை வெற்றி கொண்டு எண்ணிய இலக்கை அடைவீர்கள். குடும்ப பெரியோர்களின் ஆதரவுகள் மற்றும் மனதில் தெளிவு கிடைக்கும். உத்தியோகத்தில் மேன்மை உண்டாகும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் சுமூகமான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கைத்துணையின் ஆதரவுகள் கிடைக்கும். அனுபவப்பூர்வமான சில முக்கிய முடிவுகளை எடுப்பது எதிர்காலம் சார்ந்த செயல்பாடுகளில் முன்னேற்றதை அளிக்கும். சகோதரர்களின் வழியில் ஆதரவும், மகிழ்ச்சியான செய்திகளும் கிடைக்கும்.
வழிபாடு :
குலதெய்வ வழிபாடு நன்மையைத் தரும்.
—————————————————————-
             – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...