இன்றைய ராசி பலன்கள் ( ஜூன் 16 ஞாயிற்றுக்கிழமை 2024 )

தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் ஜூன் 16-ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.

குரோதி வருடம் ஆனி மாதம் 02 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 16.06.2024 சந்திர பகவான் இன்று கன்னி ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 02.41 வரை நவமி. பின்னர் தசமி.இன்று காலை 11.29 வரை அஸ்தம். பின்னர் சித்திரை .அவிட்டம் சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷ ராசி அன்பர்களே!

தாய்வழி உறவில் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகளால் பெருமை உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக் கும். குடும்பப் பெரியவர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். வியாபாரத்தில் விற்பனை யும் லாபமும் கூடுதலாக இருக்கும். சக வியாபாரிகள் உதவி செய்வார்கள். இன்று சரபேஸ்வரரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

ரிஷப ராசி அன்பர்களே!

காரியங்கள் அனுகூலமாகும். சகோதரர்கள் கேட்கும் உதவியைச் செய் வீர்கள். மாலையில் உறவினர்கள் மூலம் கிடைக்கும் செய்தி மகிழ்ச்சி தரும். வீட்டுக்குத் தேவை யான பொருள்களை வாங்குவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். லாபம் எதிர்பார்த்தபடியே இருக்கும். சிவபெருமானை வழிபட விருப்பங்கள் நிறைவேறும்.

மிதுன ராசி அன்பர்களே!

திடீர் செலவுகள் ஏற்படும். தேவையான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் விவாதம் செய்வதைத் தவிர்க்க வும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருந்தாலும் பணியாளர்களால் செலவுகளும் ஏற்படும். அம்பிகையை வழிபட்டு இன்றைய நாளைத் தொடங்குவது நலம் சேர்க்கும்.

கடக ராசி அன்பர்களே!

மனதில் இனம் தெரியாத சோர்வு ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உடல்நலனில் கவனம் தேவை. ஆனாலும், உங்கள் தேவையை அறிந்து மற்றவர்கள் உதவி செய்வது ஆறுதலாக இருக்கும். உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும் பொறுமை மிக அவசியம். வியாபா ரத்தில் விற்பனையை அதிகரிக்க கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும். மகாவிஷ்ணுவை வழிபட, சிரமங்கள் பெரிதும் குறையும்.

சிம்ம ராசி அன்பர்களே!

காரியங்களில் அனுகூலம் உண்டாகும் நாள். தந்தை வழியில் ஆதாயம் கிடைப்பதுடன் செலவுகளும் ஏற்படும். வாழ்க்கைத்துணைவழியில் ஆதாயம் கிடைக்கும். சில ருக்கு வீட்டில் மராமத்துப் பணியின் காரணமாக உடல் அசதி உண்டாகும் . உறவினர்களுடன் ஏற்பட்ட மனவருத்தங்கள் நீங்கி சுமுகமான உறவு ஏற்படும். நண்பர்களால் உதவி உண்டு. வியாபாரத்தில் பாக்கித் தொகை வசூலாகும். சிவபெருமானை வழிபட்டு இன்றைய நாளை தொடங்க, எதிலும் வெற்றியே ஏற்படும்.

கன்னி ராசி அன்பர்களே!

முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு மிகவும் உகந்த நாள். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சிலருக்கு வீட்டுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்களை வாங்கும் வாய்ப்பு ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவும், திடீர் செலவுகளும் ஏற்படும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் விலகும். வியாபாரத்தில் வழக்க மான நிலையே காணப்படும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.

துலா ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண் டாகும். ஆனால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகளால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சிலருக்குக் குடும்பம் தொடர்பான வேலையை முன்னிட்டு சற்று அலைச்சல் ஏற்பட லாம். மூன்றாவது நபர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகமாக இருப்பது உற்சாகம் தரும். லட்சுமி நரசிம்மரை தியானிப்பதன் மூலம் தெளிவாகச் சிந்தித்து முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

மகிழ்ச்சியான நாள். ஆனால், தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும். சிலருக்கு வாழ்க்கைத்துணையுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிடவும். நண்பர் களுக்காக செலவு செய்யவேண்டி வரும். பிள்ளைகள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். வியாபாரத் தில் விற்பனை சற்று சுமாராகத்தான் இருக்கும். இன்று மகான் ராகவேந்திரரை வழிபடுவதன் மூலம் மன அமைதி உண்டாகும்.

தனுசு ராசி அன்பர்களே!

மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன், அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு இளைய சகோதரர்கள் மூலம் எதிர்பாராத ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உண்டு. வியாபா ரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவேண்டி இருக்கும். ஆஞ்சநேயரை வழிபட எண்ணங்கள் நிறைவேறும்.

மகர ராசி அன்பர்களே!

தாயின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளின் தேவைகளை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவீர்கள். சிலருக்கு திடீர் பணவரவுக்கும், திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. பேச்சினால் பிரச்னை வர வாய்ப்பு உள்ளதால் மற்றவர்களுடன் பேசும்போது வார்த்தைகளில் நிதானம் தேவை. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது. வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். மகாலட்சுமியை வழிபடுவதன் மூலம் பிரச்னைகளைத் தவிர்த்துவிடலாம்.

கும்பராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்குவது சாதகமாக முடியும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். செல்பேசி மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைப்ப தற்கு வாய்ப்பு உண்டு. எதிரிகள் வகையில் எச்சரிக்கையாக இருக்கவும். சிலருக்கு வீண் அபவாதம் ஏற்படக்கூடும். மாலையில் சோர்வு நீங்கி உற்சாகம் பெறுவீர்கள். வியாபாரத்தில் சக வியாபாரி களால் பிரச்னை ஏற்படக்கூடும். அம்பிகை வழிபாடு மனதுக்கு மகிழ்ச்சி தரும்.

மீனராசி அன்பர்களே!

இன்று எதிலும் சிந்தித்தும் பொறுமையுடனும் செயல்படவேண்டிய நாள். எதிர்பாராத செலவுகளால் சிலருக்குக் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். வாழ்க்கைத் துணையின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அலைச்சல் உண்டாகும். சகோதரர்களால் அனுகூலம் ஏற்படும். சகோதரர்களிடம் எதிர்பார்த்த பணம் கிடைப்பது தாமதமாகும். வியாபாரத் தில் வாடிக்கையாளர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது. பிரத்தியங்கிராதேவி வழிபாடு பிரச்னைகளைக் குறைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!