இன்றைய ராசி பலன்கள் ( மே 14 செவ்வாய்க்கிழமை 2024 )

தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் மே 14-ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.

குரோதி வருடம் வைகாசி மாதம் 1 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 14.05.2024 சந்திர பகவான் இன்று கடக ராசியில் பயணம் செய்கிறார். இன்று காலை 06.21வரை சஷ்டி. பின்னர் சப்தமி. இன்று மாலை 04.15 வரை பூசம். பின்னர் ஆயில்யம். அனுஷம் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷ ராசி அன்பர்களே!

மனதில் அவ்வப்போது சஞ்சலங்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளவேண்டாம். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் ஏற்படும். அக்கம்பக்கத் தில் இருப்பவர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமை அவசியம். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் குறைவாகவே கிடைக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்று.

ரிஷப ராசி அன்பர்களே!

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதர வகையில் சிறு சிறு சங்கடங்கள், வீண் செலவுகளும் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும். வியாபாரம் எப்போதும்போல் நடைபெறும். மாலையில் பணியாளர்களால் பிரச்னை ஏற்படும். விநாயகர் வழிபாடு நலம் சேர்க்கும்.

மிதுன ராசி அன்பர்களே!

நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். உடல் ஆரோக்கியம் மேம்படும்..சிலருக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்க வாய்ப்பு உண்டு. உறவினர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். வியா பாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். சிவபெருமான் வழிபாடு சிறப்பான பலன்களைத் தரும்.

கடக ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். சிலருக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படக்கூடும். பிற்பகலுக்குமேல் எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடியே இருக்கும். திருமால் வழிபாடு நலம் சேர்க்கும்.

சிம்ம ராசி அன்பர்களே!

எதிர்பார்க்கும் காரியங்கள் சாதகமாக முடியும். ஆனால், உடல் ஆரோக்கி யத்தில் கவனம் தேவை. உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் பொறு மையைக் கடைப்பிடிக்கவும். தாயின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருந்தாலும், சக வியாபாரிகளால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். இன்று நரசிம்மரை வழிபட நன்மைகள் கூடுதலாகும்.

கன்னி ராசி அன்பர்களே!

பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். தொலைதூரத்திலிருந்து நீண்டநாள்களாக எதிர்பார்த்த நல்ல தகவல் இன்று வந்து சேரும். கண வன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். லாபமும் அதிகரிக்கும். மகாலட்சுமி வழிபாடு மகிழ்ச்சி தரும்.

துலா ராசி அன்பர்களே!

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கியமான முடிவு ஒன்றை துணிச்ச லுடன் எடுப்பீர்கள். வீட்டில் கலகலப்பான சூழ்நிலை காணப்படும். சகோதர வகையில் எதிர் பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பிள்ளைகள் கேட்டதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர் கள். மற்றவர்களுடன் வீண்விவாதம் தவிர்க்கவும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே இருக்கும். சக வியாபாரிகளிடம் கவனமாக இருக்கவும். பைரவரை வழிபடுவது நன்று.

விருச்சிக ராசி அன்பர்களே!

தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். காரியங்கள் முடி வதில் சிறு தாமதம் ஏற்படக்கூடும். மாலையில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். சில ருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த தகவல் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போல நடைபெறும். பணி யாளர்களால் பிரச்னை ஏற்படும். ஆஞ்சநேயர் வழிபாடு நன்று.

தனுசு ராசி அன்பர்களே!

வழக்கமான பணிகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். பிற் பகலுக்கு மேல் உறவினர்கள் மூலம் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படும். கணவன் – மனை விக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும். உறவினர்களுக்காக செலவு செய்ய நேரிடும். ஆனால், பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத் தான் இருக்கும். முருகப்பெருமான் வழிபாடு நன்று.

மகர ராசி அன்பர்களே!

மனதில் தைரியம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். இளைய சகோதரர்கள் உங்கள் ஆலோசனையைக் கேட்டு வருவார்கள். தந்தைவழி உறவினர்களால் ஆதா யம் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும். லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்று.

கும்பராசி அன்பர்களே!

எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. சகோதரர்கள் பண உதவி செய்வார்கள். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். எதிரிகளால் பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், கவனமாக இருக்கவும். வியாபாரம் வழக்கம்போலவே காணப்படும். பணியாளர்களால் தேவையற்ற பிரச்னை ஏற்படும் சிவபெருமான் வழிபாடு சிரமங்களைக் குறைக்கும்.

மீனராசி அன்பர்களே!

இன்று பொறுமையும் சகிப்புத்தன்மையும் அதிகம் தேவைப்படும். தாயின் அன்பும் ஆதரவும் மனதுக்கு உற்சாகம் தரும். உறவினர்கள் வகையில் வீண் மனஸ்தாபம் ஏற்படும். புதிய முயற்சியைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் தேவை யான பணம் கிடைத்துவிடுவதால் சமாளித்து விடுவீர்கள். வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும். விநாயகர் வழிபாடு நலம் சேர்க்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!