வரலாற்றில் இன்று ( 17.04.2024 )

 வரலாற்றில் இன்று ( 17.04.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

ஏப்ரல் 17  கிரிகோரியன் ஆண்டின் 107 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 108 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 258 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1080 – டென்மார்க் மன்னர் மூன்றாம் அரால்ட் இறந்தார். நான்காம் கானூட் புதிய மன்னராக முடி சூடினார்.
1492 – மசாலாப் பொருட்களை ஆசியாவில் கொள்வனவு செய்யும் உரிமையை கொலம்பசு எசுப்பானிய அரசிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.
1521 – லூதரனியம் தொடர்பான படிப்புகளுக்காக மார்ட்டின் லூதருக்கு எதிரான வழக்கு ஆரம்பமானது.
1797 – சர் ரால்ஃப் அபர்குரொம்பி புவெர்ட்டோ ரிக்கோவின் சான் வான் நகரைத் தாக்கினார். அமெரிக்கக் கண்டத்தில் எசுப்பானியப் பிரதேசங்கள் மீது நடந்த மிகப்பெரும் ஊடுருவலாக இது கணிக்கப்படுகிறது.
1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: வர்ஜீனியா ஐக்கிய அமெரிக்காவில் இருந்து விலகி, அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பில் 8-வது மாநிலமாக இணைந்தது.
1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைகள் வட கரொலைனாவின் பிளைமவுத் நகரத் தாக்குதலை ஆரம்பித்தன.
1895 – முதலாம் சீன சப்பானியப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தானது. தோற்கடிக்கப்பட்ட சிங் ஆட்சி கொரியா மீதான இறைமையைக் கைவிட்டது. சீனக் குடியரசின் பெங்கியெனின் தெற்குப் பகுதியை சப்பானிடம் கொடுத்தது.
1912 – உருசியப் படையினர் சைபீரியாவின் வடகிழக்கில் பணிநிறுத்தம் செய்த தங்கச் சுரங்கத் தொழிலாளர் மீது சுட்டதில் 150 பேர் கொல்லப்பட்டனர்.
1941 – இரண்டாம் உலகப் போர்: யுகோசுலாவியப் பேரரசு செருமனியிடம் சரணடைந்தது.
1945 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலியின் மொண்டீசு நகரம் நாட்சிகளிடம் இருந்து விடுவிக்கப்பட்டது.
1946 – கடைசி பிரான்சியப் படையினர் சிரியாவில் இருந்து வெளியேறினர்.
1949 – அயர்லாந்தின் 26 மாவட்டங்கள் பொதுநலவாய அமைப்பில் இருந்து விலகின.
1961 – அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏயினால் பயிற்சியளிக்கப்பட்ட கியூபா அகதிகள் குழு ஒன்று பிடெல் காஸ்ட்ரோவைப் பதவியில் இருந்து அகற்றும் நோக்குடன் பன்றிகள் விரிகுடாவில் தரையிறங்கியது.
1969 – செக்கோசிலவாக்கியாவின் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் அலெக்சாண்டர் டூப்செக் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1970 – அப்போலோ 13 விண்கப்பல் பழுதடைந்த நிலையில் தனது பயணத்தை இடைநிறுத்தி பூமிக்குத் திரும்பியது.
1971 – முஜிபுர் ரகுமான் தலைமையில் வங்காள தேச மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது.
1975 – கம்போடியாவில் கெமர் ரூச் படைகள் தலைநகர் நோம் பென்னைக் கைப்பற்றின. கம்போடிய அரசு சரணடைந்தது.
1978 – ஆப்கானித்தானின் இடதுசாரி அரசியல்வாதி மீர் அக்பர் கைபர் படுகொலை செய்யப்பட்டார்.
1986 – 335 ஆண்டுகள் போரை முடிவுக்குக் கொண்டு வரும் ஒப்பந்தம் நெதர்லாந்துக்கும் சில்லி தீவுகளுக்கும் இடையில் கைச்சாத்தானது.
2004 – இந்தியத் திரைப்பட நடிகை சௌந்தர்யா பெங்களூரில் விமான விபத்தில் இறந்தார்.
2006 – டெல் அவீவ் உணவகம் ஒன்றில் பல்லத்தீன தற்கொலைக் குண்டு ஒன்று வெடித்ததில் 11 பேர் கொல்லப்பட்டனர், 70 பேர் காயமடைந்தனர்.
2013 – அமெரிக்காவின் டெக்சசு மாநிலத்தில் உரத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் இடம்பெற்ற ஒரு வெடி விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.
2014 – நாசாவின் கெப்லர் விண்கலம் பிறிதொரு விண்மீனின் வாழ்தகமைப் பகுதியில் புவிக்கு ஒப்பான கோள் ஒன்று இருப்பதை உறுதிப்படுத்தியது.

பிறப்புகள்

44 – எவரிஸ்துஸ் (திருத்தந்தை) (இ. 107)
1598 – ஜியோவானி ரிக்கியொலி, இத்தாலிய மதகுரு, வானியலாளர் (இ. 1671)
1756 – தீரன் சின்னமலை, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1805)
1899 – வின்சென்ட் விகில்சுவொர்த், பிரித்தானிய உயிரியலாளர் (இ. 1994)
1910 – அடிகளாசிரியர், தமிழகத் தமிழறிஞர் (இ. 2012)
1912 – தகழி சிவசங்கரப் பிள்ளை, மலையாள எழுத்தாளர் (இ. 1999)
1915 – சிறிமாவோ பண்டாரநாயக்கா, இலங்கையின் 6வது பிரதமர் (இ. 2000)
1916 – ஆ. தியாகராசா, இலங்கை அரசியல்வாதி, கல்வியாளர் (இ. 1981)
1917 – வ. சுப. மாணிக்கம், தமிழகத் தமிழறிஞர், கவிஞர் (இ. 1989)
1959 – சான் பீன், ஆங்கிலேய நடிகர்
1966 – விக்ரம், தமிழ்த் திரைப்பட நடிகர்
1972 – முத்தையா முரளிதரன், இலங்கைத் துடுப்பாளர்
1979 – சித்தார்த், தென்னிந்தியத் திரைப்பட நடிகர், பாடகர்
1981 – சாந்தி சௌந்திரராஜன், தமிழக தடகள விளையாட்டு வீராங்கனை
1981 – மயூரன் சுகுமாரன், இந்தோனேசியாவில் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ஆத்திரேலியத் தமிழர் (இ. 2015)

இறப்புகள்

1680 – கத்தேரி தேக்கக்விதா, அமெரிக்கப் புனிதர் (பி. 1656)
1790 – பெஞ்சமின் பிராங்கிளின், அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர், அரசியல்வாதி (பி. 1706)
1859 – தாந்தியா தோபே, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1814)
1942 – சான் பத்தீட்டு பெரென், நோபல் பரிசு பெற்ற பிரான்சிய-அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1870)
1946 – வலங்கைமான் சங்கரநாராயண சீனிவாச சாஸ்திரி, இந்திய அரசியல்வாதி, நிர்வாகி, கல்வியாளர் (பி. 1869)
1975 – சர்வபள்ளி இராதாகிருஷ்ணன், இந்தியாவின் 2வது குடியரசுத் தலைவர் (பி. 1888)
1989 – மு. ச. காரியப்பர், இலங்கை அரசியல்வாதி (பி. 1899)
1992 – புலியூர்க் கேசிகன், தமிழக எழுத்தாளர், உரையாசிரியர், பதிப்பாசிரியர் (பி. 1923)
1994 – ரோஜர் ஸ்பெர்ரி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர் (பி. 1913)
2004 – சௌந்தர்யா, தென்னிந்திய நடிகை (பி. 1971)
2013 – டி. கே. ராமமூர்த்தி, தென்னிந்திய திரைப்பட இசையமைப்பாளர் (பி. 1922)
2013 – வி. எஸ். ரமாதேவி, கருநாடக மாநிலத்தின் 13வது ஆளுநர் (பி. 1934)
2014 – கபிரியேல் கார்சியா மார்க்கேஸ், நோபல் பரிசு பெற்ற கொலம்பிய எழுத்தாளர் (பி. 1927)
2014 – கர்பால் சிங், மலேசிய அரசியல்வாதி (பி. 1940)
2015 – கி. லோகநாதன், மலேசியத் தமிழறிஞர், உளவியலாளர் (பி. 1940)

சிறப்பு நாள்

உலக ஈமோபீலியா நாள்
பெண்கள் நாள் (காபோன்)
விடுதலை நாள் (சிரியா, பிரான்சிடம் இருந்து 1946)

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...