இன்றைய ராசி பலன்கள் ( 17 ஏப்ரல் புதன்கிழமை 2024 )

தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் ஏப்ரல் 17ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.

குரோதி வருடம் சித்திரை மாதம் 4 ஆம் தேதி புதன்கிழமை 17.04.2024 சந்திர பகவான் இன்று கடக ராசியில் பயணம் செய்கிறார். இன்று மாலை 06.59 வரை நவமி. பின்னர் தசமி. இன்று காலை 08.51 வரை பூசம். பின்னர் ஆயில்யம். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷ ராசி அன்பர்களே!

உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். காரியங்கள் முடிவதில் சிறு தாமதம் ஏற்படக்கூடும். மாலையில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த தகவல் கிடைப்பது மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பணியாளர்கள் முரண்டு பிடிப்பார்கள். ஆஞ்சநேயர் வழிபாடு நன்று.

ரிஷப ராசி அன்பர்களே!

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தாய்வழி உ றவினர்கள் மூலம் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உறவினர்களால் குடும்பத்தில் சிறு சிறு சங்கடங்கள், வீண் செலவுகளும் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மாலையில் எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும். வியாபாரத்தைப் பொறுத்தவரை சுமுகமான சூழ்நிலையே காணப்படுகிறது. விநாயகர் வழிபாடு நலம் சேர்க்கும்.

மிதுன ராசி அன்பர்களே!

மனதில் தெய்வபக்தி அதிகரிக்கும். காரியங்கள் அனுகூலமாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும்..மற்றவர்களுடன் பேசும்போது மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ள தால் பொறுமை அவசியம். தந்தைவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்க வாய்ப்பு உண்டு. மாலை யில் உறவினர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் சற்று எச்சரிக்கை தேவைப்படுகிறது. அம்பிகை வழிபாடு நலம் சேர்க்கும்.

கடக ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். சிலருக்கு வீட்டில் தெய்வப் பிரார்த் தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படக்கூடும். பிற்பகலுக்கு மேல் எதிர்பார்த்த நல்ல தக வல் கிடைகக்கூடும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். சக வியாபாரிகள் மூலம் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். திருமால் வழிபாடு நலம் சேர்க்கும்.

சிம்ம ராசி அன்பர்களே!

எதிர்பார்க்கும் காரியங்கள் சாதகமாக முடியும். ஆனால், உடல் ஆரோக்கி யத்தில் கவனம் தேவை. உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் பொறு மையைக் கடைப்பிடிக்கவும். தாயின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பிற்பகலுக்குமேல் வீண் செலவுகளால் மனதில் சஞ்சலம் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே நடைபெறும். இன்று நரசிம்மரை வழிபடுவது சிறப்பு.

கன்னி ராசி அன்பர்களே!

பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சில ருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு பள்ளி, கல்லூரிக் கால நண்பர் களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர் பார்த்தபடியே இருக்கும். மகாலட்சுமி வழிபாடு மகிழ்ச்சி தரும்.

துலா ராசி அன்பர்களே!

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கியமான முடிவு ஒன்றை துணிச்சலுடன் எடுப்பீர்கள். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பிள்ளைகள் கேட்டதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர்கள். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். லட்சுமி நரசிம்மரை வழிபடுவது நன்று.

விருச்சிக ராசி அன்பர்களே!

வழக்கமான பணிகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். பிற் பகலுக்கு மேல் உறவினர்கள் வழியில் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படும். கணவன் – மனை விக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும். சகோதரர்களுக்காக செலவு செய்ய நேரிடும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் விற்பனை சற்று மந்தமாகத்தான் இருக்கும். முருகப்பெருமான் வழிபாடு நன்று.

தனுசு ராசி அன்பர்களே!

மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்படும். புதிய முயற்சிகளை மேற் கொள்ளவேண்டாம். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் ஏற்படும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பெரியவர்களுடன் அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் கடுமை காட்டினாலும் பொறுமை அவசியம். தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்று.

மகர ராசி அன்பர்களே!

மனதில் தைரியம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். தந்தை வழி உறவினர்களால் காரிய அனுகூலம் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். வாழ்க்கைத் துணை மூலம் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் பணியாளர்களால் வீண் செலவுகள் ஏற்படும். தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்று.

கும்பராசி அன்பர்களே!

பிறருக்குக் கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சகோத ரர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் இழுபறியானா லும் முடிந்துவிடும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் சாதகமாகும். பிற்பகலுக்குமேல் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது. வியாபாரத் தில் லாபம் சற்று கூடுதலாகக் கிடைக்கும். சிவபெருமான் வழிபாடு நன்மை தரும்.

மீனராசி அன்பர்களே!

பொறுமையும் சகிப்புத்தன்மையும் அதிகம் தேவைப்படும். ஆனால், தாயின் அன்பும் ஆதரவும் மனதுக்கு உற்சாகம் தரும். உறவினர்கள் வகையில் வீண் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. புதிய முயற்சியைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு எதிர்பாராத செலவு கள் ஏற்பட்டாலும் தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிட முடியும். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும். விநாயகர் வழிபாடு நலம் சேர்க்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!