வரலாற்றில் இன்று ( 16.04.2024 )

 வரலாற்றில் இன்று ( 16.04.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

ஏப்ரல் 16 கிரிகோரியன் ஆண்டின் 106 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 107 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 259 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

73 – யூதக் கோட்டை மசாடா உரோமர்களின் பல மாத கால முற்றுகையின் பின்னர் உரோமர்களிடம் வீழ்ந்தது. பாரிய யூதக் கிளர்ச்சி முடிவுக்கு வந்தது.
1346 – செர்பியப் பேரரசு பால்கன் குடாவின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றியதுடன், இசுடெபான் துசான் பேரரசராக அறிவிக்கப்பட்டார்.
1444 – இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் இடையில் ஐந்து ஆண்டுகள் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டது.
1520 – ஐந்தாம் சார்லசின் ஆட்சிக்கு எதிராக எசுப்பானியாவில் கிளர்ச்சி ஆரம்பமானது.
1582 – எசுப்பானிய தேடல் வீரர் எர்னாண்டோ டி லேர்மா அர்கெந்தீனாவில் சால்ட்டா என்ற குடியேற்றத் திட்டத்தை கண்டுபிடித்தார்.
1799 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: டாபோர் மலை சமரில் பிரான்சின் முதலாம் நெப்போலியன் உதுமானியத் துருக்கியரை யோர்தான் ஆற்றுக்கு அப்பால் விரட்டினான்.
1818 – கனடாவுடனான எல்லை குறித்த உடன்பாட்டை அமெரிக்க மேலவை ஏற்றுக் கொண்டது.
1853 – இந்தியாவின் முதலாவது பயணிகள் தொடருந்து சேவையை கிரேட் இந்தியன் பெனின்சுலார் ரயில்வே மும்பையில் போரி பந்தருக்கும் தானேக்கும் இடையில் ஆரம்பித்தது.
1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அடிமை முறையை ஒழிக்கும் சட்டம் வாசிங்டன், டி. சி.யில் அமுலுக்கு வந்தது.
1876 – பல்கேரியாவில் உதுமானியப் பேரரசுக்கெதிராக புரட்சி வெடித்தது.
1885 – இலங்கையில் அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்ட முறை அறிமுகமானது.
1912 – அரியெட் குயிம்பி என்னும் பெண் ஆங்கிலக் கால்வாயை வானூர்தியில் கடந்த முதல் பெண்ணாக சாதனை படைத்தார்.
1917 – நாடு கடந்த நிலையில் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து வந்த விளாதிமிர் லெனின் உருசியா, பெத்ரோகிராத் திரும்பினார்.
1919 – போலந்து-சோவியத் போர்: போலந்து இராணுவம் வில்னியசு நகரை (இன்றைய லித்துவேனியாவில்) கைப்பற்ற வில்னா போர் நடவடிக்கையை ஆரம்பித்தது.
1919 – அம்ரித்சர் படுகொலையைக் கண்டித்து மகாத்மா காந்தி ஒரு நாள் உண்ணாநோன்பு இருந்தார்.
1925 – பல்கேரியா தலைநகர் சோஃபியாவில் சென் நெடெலியா ஆலயத்தில் கம்யூனிஸ்டுகள் தாக்கியதில் 150 பேர் கொல்லப்பட்டு 500 பேர் படுகாயமடைந்தனர்.
1941 – இரண்டாம் உலகப் போர்: படை நடவடிக்கை 25 ஆரம்பித்ததை அடுத்து, குரோவாசியாவின் ஆட்சியை நாட்சி ஆதரவு “உசுத்தாசே என்ற அமைப்பிடம் அச்சு நாடுகள் ஒப்படைத்தது.
1943 – ஆல்பர்ட் ஹாப்மன் தற்செயலாக லைசெர்ஜிக் ஆசிட் டைதைலமைடு மருந்தில் இல்பொருள்தோற்ற விளைவைக் கண்டுபிடித்தார்.
1944 – இரண்டாம் உலகப் போர்: கூட்டுப் படையினர் பெல்கிரேட் மீது தாக்குதலைத் தொடுத்தனர். 1,100 பேர் கொல்லப்பட்டனர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் செஞ்சேனை செருமனியப் படைகளுக்கெதிரான தமது கடைசிப் போரை பெர்லினைச் சுற்றி ஆரம்பித்தனர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: அகதிகளை ஏற்றிச் சென்ற கோயா என்ற செருமனியின் கப்பல் ஒன்று சோவியத் நீர்மூழ்கியால் தாக்கப்பட்டு மூழ்கியதில் 7,000 பேர் கொல்லப்பட்டனர்.
1947 – அமெரிக்காவின் டெக்சாஸ் துறைமுகத்தில் சரக்குக் கப்பல் ஒன்று வெடித்ததில் டெக்சாஸ் நகரம் தீப்பிடித்தது. 600 பேர் இதில் உயிரிழந்தனர்.
1947 – சோவியத்- ஐக்கிய அமெரிக்கா இடையேயான உறவுகளை பனிப்போர் என அமெரிக்க பொருளாதார ஆலோசகர் பெர்னார்ட் பாருக் என்பவர் முதன் முதலாக வர்ணித்தார்.
1961 – கியூபா தலைவர் பிடல் காஸ்ட்ரோ தான் ஒரு மார்க்சிய-லெனினியவாதி என்றும், கியூபா பொதுவுடைமை நாடு எனவும் அறிவித்தார்.
1966 – முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் ஆரம்பமானது.
1972 – நாசாவின் அப்போலோ 16 விண்ணுக்கு ஏவப்பட்டது.
1992 – மொசாம்பிக், மபூட்டோவில் கத்தீனா பி என்ற சரக்குக் கப்பல் மூழ்கியதில் 60,000 தொன் பாறை எண்ணெய் கடலில் கரைந்தது.
2007 – ஐக்கிய அமெரிக்காவின் வேர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் கொரிய மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழகப் பேராசிரியர் லோகநாதன் உட்பட 33 பேர் கொல்லப்பட்டு 29 பேர் காயமடைந்தனர்.
2013 – ஈரான், சீசுத்தான் பலுச்சித்தா மாகாணத்தில் 7.8-அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 35 பேர் உயிரிழந்தனர், 117 பேர் காயமடைந்தனர்.
2014 – தென் கொரிய பயணைகள் கப்பல் செவோல் ஜின்டோ தீவில் மூழ்கியதில் 304 பேர் உயிரிழந்தனர்.

பிறப்புகள்

1660 – ஹேன்ஸ் ஸ்லோன், ஐரிய-ஆங்கிலேய மருத்துவர் (இ. 1753)
1813 – சுவாதித் திருநாள் ராம வர்மா, திருவிதாங்கூர் சமத்தான மன்னர் (இ. 1846)
1848 – கந்துகூரி வீரேசலிங்கம், இந்திய எழுத்தாளர், செயற்பாட்டாளர் (இ. 1919)
1851 – பொன்னம்பலம் இராமநாதன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1930)
1867 – ரைட் சகோதரர்கள், அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் (இ. 1912)
1886 – பி.ஸ்ரீ., தமிழகப் பேச்சாளர், எழுத்தாளர், பதிப்பாசிரியர், வரலாற்று ஆசிரியர் (இ. 1981)
1889 – சார்லி சாப்ளின், ஆங்கிலேய நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 1977)
1896 – ராமச்சந்திர தீட்சிதர், தமிழக இந்தியவியலாளர், திராவிடவியலாளர் (இ. 1953)
1906 – கனஞ்சம் பட்டி சிதம்பர அருணாச்சல ஞானகிரி, தமிழக பன்மொழி ஆய்வாளர்
1922 – அநுத்தமா, தமிழக எழுத்தாளர் (இ. 2010)
1927 – திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்
1935 – சுபத்திரன், ஈழத்து முற்போக்கு இலக்கியக் கவிஞர் (இ. 1979)
1940 – இராயப்பு யோசேப்பு, இலங்கை கத்தோலிக்க ஆயர் (இ. 2021)
1951 – ம. சூ. நாராயணா, இந்திய நடிகர், இயக்குனர் (இ. 2015)
1953 – நிழல்கள் ரவி, தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
1957 – பெரியசாமி சந்திரசேகரன், இலங்கை மலையக அரசியல்வாதி, தொழிற்சங்கவாதி
1961 – ஜார்பம் காம்லின், அருணாச்சலப் பிரதேசத்தின் 7வது முதலமைச்சர் (இ. 2014)
1963 – சலீம் மாலிக், பாக்கித்தானியத் துடுப்பாளர்
1969 – சௌம்யா, தமிழக கருநாடக இசைப் பாடகி
1971 – செலெனா, அமெரிக்கப் பாடகி, நடிகை (இ. 1995)
1978 – லாரா தத்தா, இந்திய நடிகை
1986 – பவுல் டி ரெஸ்டா, இசுக்கொட்டிய வாகன ஓட்ட வீரர்

இறப்புகள்

1783 – கிறித்தியன் மேயர், செக் வானியலாளர் (பி. 1719)
1828 – பிரான்சிஸ்கோ கோயா, எசுப்பானிய-பிரான்சிய ஓவியர் (பி. 1746)
1879 – பெர்னதெத் சுபீரு, பிரான்சியப் புனிதர் (பி. 1844)
1888 – சிக்முந்த் வுரூபிளேவ்ஸ்கி, போலந்து இயற்பியலாளர், வேதியியலாளர் (பி. 1845)
1958 – உரோசலிண்டு பிராங்குளின், ஆங்கிலேய உயிரியற்பியலாளர் (பி. 1920)
1970 – ரிச்சர்ட் நியூட்ரா, ஆத்திரிய-அமெரிக்கக் கட்டிடக்கலைஞர் (பி. 1892)
1972 – யசுனாரி கவபட்டா, நோபல் பரிசு பெற்ற சப்பானிய எழுத்தாளர் (பி. 1899)
2007 – கோ. வா. உலோகநாதன், இந்திய-அமெரிக்கப் பொறியியலாளர், கல்வியாளர் (பி. 1954)
2007 – சந்திரபோஸ் சுதாகரன், இலங்கை ஊடகவியலாளர்
2010 – கோயம்புத்தூர் கிருஷ்ணாராவ் பிரகலாத், இந்திய-அமெரிக்க மேலாண்மை வல்லுநர் (பி. 1941)
2013 – சார்லஸ் புரூசன், ஜிப்ரால்ட்டர் அரசியல்வாதி (பி. 1938)
2013 – எல். கே. பி. லகுமையா, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், காந்தியவாதி (பி. 1913)

சிறப்பு நாள்

பெரும் இன அழிப்பு நினைவு நாள் (அங்கேரி)
உலகக் குரல் நாள்

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...