வரலாற்றில் இன்று ( 05.04.2024 )

 வரலாற்றில் இன்று ( 05.04.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

ஏப்ரல் 5 கிரிகோரியன் ஆண்டின் 95 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 96 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 270 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

823 – திருத்தந்தை முதலாம் பாசுக்கால் இத்தாலியின் மன்னராக முதலாம் லொத்தாயிருக்கு முடிசூட்டி வைத்தார்.
1081 – முதலாம் அலெக்சியோசு கொம்னேனொசு பைசாந்தியப் பேரரசராக கான்ஸ்டண்டினோபில் நகரில் முடிசூடினார்.
1614 – வர்ஜீனியாவில் அமெரிக்கப் பழங்குடிப் பெண் போக்கஹொண்டாசு ஆங்கிலேய குடியேற்றவாதியான ஜோன் ரோல்ஃப் என்பவனைத் திருமணம் புரிந்தாள்.
1654 – ஆங்கில-டச்சுப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு வெஸ்ட்மின்ஸ்டர் உடன்பாடு எட்டப்பட்டது.
1710 – ஐக்கிய இராச்சியத்தில் காப்புரிமை சட்டம் அமுலுக்கு வந்தது.
1722 – டச்சு மாலுமி ஜேக்கப் ரோகவீன் ஈஸ்டர் தீவைக் கண்டுபிடித்தார்.
1792 – அமெரிக்க அரசுத்தலைவர் ஜோர்ஜ் வாஷிங்டன் முதற் தடவையாக வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தினார்.
1795 – பிரான்சுக்கும், புருசியாவுக்கும் இடையே அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.
1804 – முதற்தடவையாக விண்வீழ்கல் ஒன்று வீழ்ந்தது ஸ்கொட்லாந்தில் பதிவானது.
1818 – ஜோஸ் டெ சான் மார்ட்டின், பெர்னார்டோ ஓ’இகின்சு தலைமையில் சிலியின் விடுதலை இயக்கம் வெற்றி கண்டது. 2,000 எசுப்பானியர்களும், 1000 சிலியர்களும் உயிரிழந்தனர்.
1867 – இலங்கையில் முதலாவது சுற்றுலாப் பயண தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.[1]
1879 – பொலிவியா, மற்றும் பெரு மீது சிலி போரை அறிவித்தது. பசிபிக் போர் ஆரம்பமானது.
1897 – கிரேக்கத்துக்கும் உதுமானியப் பேரரசுக்கும் இடையில் போர் ஆரம்பமானது.
1900 – கிரீட்டில் தொல்லியலாளர்கள் சித்திர எழுத்துகளுடன் கூடிய பெருந்தொகையான களிமண் பலகைகளைக் கண்டுபிடித்தனர்.
1930 – மகாத்மா காந்தி அரபிக் கடலின் குஜராத் கடற்கரையோரப் பகுதியான தண்டியில் உப்புச் சட்டத்தை மீறி உப்பைக் கையிலே அள்ளி எடுத்து வந்து தனது 241 மைல் நடைப் பயணத்தை முடித்தார்.
1932 – பின்லாந்தில் மதுவிலக்கு கொள்கை முடிவுக்கு வந்தது.
1932 – நியூபவுன்லாந்தில் பத்தாயிரத்துக்கும் அதிகமான கலவரக்காரர்கள் கொலோனியல் கட்டிடத்தைக் கைப்பற்றினர்.
1936 – மிசிசிப்பியில் சுழற்காற்று தாக்கியதில் 233 பேர் உயிரிழந்தனர்.
1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பானியப் போர்க்கப்பல்கள் உயிர்ப்பு ஞாயிறு அன்று இலங்கையைத் தாக்கின. தென்மேற்குப் பகுதியில் கோர்ன்வால், டோர்செட்சயர் என்னும் இரண்டு பிரித்தானியக் கப்பல்கள் மூழ்கின.
1943 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள் பெல்ஜியத்தின் மீது தவறுதலாக குண்டுகளை வீசியதில் 209 சிறுவர்கள் உட்பட 900 பேர் கொல்லப்பட்டனர்.
1944 – இரண்டாம் உலகப் போர்: கிளெய்சோரா என்ற கிரேக்க நகரில் 270 உள்ளூர் மக்கள் செருமனியரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1945 – பனிப்போர்: யுகோசுலாவியாவினுள் சோவியத் படைகள் தற்காலிகமாக நுழைவதற்கு அந்நாட்டு அரசுத்தலைவர் யோசப் டீட்டோ சோவியத் ஒன்றியத்துடன் உடன்பாடு செய்து கொண்டார்.
1946 – 11 மாதங்கள் ஆக்கிரமிப்பின் பின்னர் சோவியத் படைகள் டென்மார்க் தீவான போர்ன்ஹோல்மை விட்டு விலகின.
1949 – அமெரிக்காவின் இலினோய் மாநிலத்தில் மருத்துவமனை ஒன்றில் தீப்பிடித்ததில் 77 பேர் உயிரிழந்தனர்.
1951 – இலங்கை,கட்டுநாயக்காவில் 34 பேருடன் சென்ற பிரித்தானிய வான்படை ஏசுட்டிங்சு வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளானது. உயிரிழப்புகள் இல்லை.[2]
1956 – கியூபப் புரட்சி: பிடெல் காஸ்ட்ரோ கியூபாவின் அரசுத்தலைவர் புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவுடன் போரை அறிவித்தார்.
1956 – இலங்கைப் பொதுத்தேர்தலில் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க தலைமையிலான மகாஜன எக்சத் பெரமுன அறுதிப் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றது.
1957 – இந்தியாவின் கேரளா மாநிலத்தில் பொதுவுடமைவாதிகள் ஆட்சியைக் கைப்பற்றினர். ஈ. எம். எஸ். நம்பூதிரிபாத் முதலமைச்சரானார்.
1964 – பூட்டான் பிரதமர் ஜிக்மி டோர்ஜி இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1969 – வியட்நாம் போர்: அமெரிக்க நகரங்களில் போருக்கு எதிராகப் பெரும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.
1971 – இலங்கையில் சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசிற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினர் நாட்டின் தென் பகுதிகளில் ஆயுதக் கிளர்ச்சியை ஆரம்பித்தனர்.
1976 – சீனாவில் தியனன்மென் சதுக்கத்தில் மாபெரும் ஆர்ப்பாட்ட நிகழ்வு இடம்பெற்றது.
1981 – தமிழீழப் போராளிகள் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் ஆகியோர் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்.
1991 – அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தில் அத்திலாந்திக் ஏர்லைன்சு வானூர்தி ஒன்று வீழ்ந்ததில் விண்வெளி வீரர் சொன்னி கார்ட்டர் உட்பட அதில் பயணம் செய்த அனைத்து 23 பேரும் உயிரிழந்தனர்.
1992 – பெருவின் அரசுத்தலைவர் ஆல்பர்ட் புஜிமோரி நாடாளுமன்றத்தை இராணுவ உதவியுடன் கலைத்தார்.
1998 – அகாசி கைக்ஜோ, உலகின் மிகப் பெரிய தொங்கு பாலம், சப்பானில் 3.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் அமைக்கப்பட்டது.
2009 – வட கொரியா சர்ச்சைக்குரிய தனது குவாங்மியோங்சொன்-2 என்ற ஏவுகணையை யப்பான் மீதாக ஏவியது.
2010 – மேற்கு வர்ஜீனியாவில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற வெடிப்பில் சிக்கி 29 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

பிறப்புகள்

1568 – எட்டாம் அர்பன் (திருத்தந்தை) (இ. 1644)
1588 – தாமசு ஆபிசு, ஆங்கிலேய மெய்யியலாளர் (இ. 1679)
1827 – ஜோசப் லிஸ்டர், ஆங்கிலேய மருத்துவர் (இ. 1912)
1879 – ஆர்தர் பெரிடேல் கீத்து, இசுக்காட்லாந்து இந்தியவியலாளர் (இ. 1944)
1900 – ஸ்பென்சர் ட்ரேசி, அமெரிக்க நடிகர் (இ. 1967)
1901 – சு. சி. பிள்ளை, இந்தியக் கணிதவியலாளர் (இ. 1950)
1908 – ஜெகசீவன்ராம், இந்தியாவின் 4வது துணைப் பிரதமர் (இ. 1986)
1916 – கிரிகோரி பெக், அமெரிக்க நடிகர், அரசியல் செயற்பாட்டாளர் (இ. 2003)
1919 – லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ், இலங்கைத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 2018)
1920 – ஆர்தர் ஹெய்லி, ஆங்கிலேய-கனடியப் போர் வீரர், எழுத்தாளர் (இ. 2004)
1923 – எம். சாரதா மேனன், இந்திய மனநல மருத்துவர்
1933 – க. கைலாசபதி, இலங்கை தமிழறிஞர், கல்வியாளர், ஊடகவியலாளர் (இ. 1982)
1935 – டொனால்டு இலிண்டன்-பெல், ஆங்கிலேய வானியலாளர்
1937 – ஜோசப் லெலிவெல்ட், அமெரிக்க ஊடகவியலாளர், எழுத்தாளர்
1947 – குளோரியா மகபகல்-அர்ரொயோ, பிலிப்பீன்சின் 14வது அரசுத்தலைவர்
1958 – லசந்த விக்கிரமதுங்க, இலங்கை ஊடகவியலாளர் (இ. 2009)
1989 – லில்லி ஜேம்ஸ், ஆங்கிலேய நடிகை

இறப்புகள்

1916 – மக்சிம் கோவலவ்சுகி, உருசிய சமூகவியலாளர் (பி. 1851)
1956 – மணிலால் காந்தி, இந்திய ஊடகவியலாளர், காந்தியவாதி (பி. 1892)
1957 – ராம. அழகப்பச் செட்டியார், இந்திய தொழிலதிபர் (பி. 1909)
1962 – ஆனந்த சமரக்கோன், சிங்கள இசைக் கலைஞர், பாடலாசிரியர் (பி. 1911)
1964 – டக்ளசு மக்கார்த்தர், அமெரிக்கப் படைத்துறைத் தளபதி (பி. 1880)
1967 – ஹெர்மன் முல்லர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர் (பி. 1890)
1975 – சங் கை செக், சீனக் குடியரசின் 1வது அரசுத்தலைவர் (பி. 1887)
1976 – அங்கையன் கைலாசநாதன், ஈழத்து எழுத்தாளர், கவிஞர் (பி. 1946)
1976 – ஹோவார்ட் ஹியூஸ், அமெரிக்க பொறியியலாளர், இயக்குநர் (பி. 1905)
1977 – ஏ. பி. நாகராசன், தமிழகத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், கதையாசிரியர், வசனகர்த்தா (பி. 1928)
1992 – சாம் வோல்ற்றன், அமெரிக்கத் தொழிலதிபர் (பி. 1918)
1993 – திவ்யா பாரதி, இந்திய நடிகை (பி. 1974)
1994 – கர்ட் கோபேன், அமெரிக்கப் பாடகர் (பி. 1967)
1997 – அக்லிலு லெம்மா, எத்தியோப்பிய உயிரியலாளர்
2008 – சார்ள்டன் ஹெஸ்டன், அமெரிக்கநடிகர், இயக்குநர், செயற்பாட்டாளர் (பி. 1923)

சிறப்பு நாள்

குழந்தைகள் நாள் (பாலத்தீனம்)

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...