வார ராசிபலன்கள் – 11.11.2019 – 17.11.2019

 வார ராசிபலன்கள் – 11.11.2019 – 17.11.2019
வார ராசிபலன்கள் – 11.11.2019 – 17.11.2019
மேஷம்
மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி மனோதைரியம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் மறைமுகமான பிரச்சனைகள் குறையும். எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த போட்டிகள் குறையும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். தொழில், வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்கள் செல்லவேண்டிய சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும்.
வழிபாடு :
வெள்ளிக்கிழமைதோறும் மகாலட்சுமியை வழிபாடு செய்துவர சுபகாரியங்கள் ஈடேறும்.
————————————–
ரிஷபம்
செய்யும் செயல்களால் சிறப்பான சூழல் உண்டாகும். புதிய மனை வாங்குவது பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். தேவையற்ற ஆடம்பரச் செலவுகளால் நெருக்கடியான சூழல் ஏற்படும். கல்வி தொடர்பான வெளியூர் பயணங்கள் புதுவிதமான அனுபவத்தை அளிக்கும். மனதில் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சமூக சேவைகளில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். நண்பர்களுடன் விருந்துகளில் பங்கேற்று மனம் மகிழ்வீர்கள். பணிபுரியும் இடங்களில் உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். பொருளாதார மேம்பாட்டிற்கான அலைச்சல்கள் உண்டாகும்.
வழிபாடு :
ஞாயிற்றுக்கிழமைதோறும் சிவபெருமானை வழிபாடு செய்வதால் ஆதரவான சூழல் உண்டாகும்.
————————————–
மிதுனம்
முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் மற்றும் ஆலோசனைகள் கிடைக்கும். தொழில் சார்ந்த பயணம் மற்றும் இடமாற்றம் உண்டாகும். குழந்தைகளின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். குடும்ப நபர்களின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கலை சார்ந்த திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் நிதானம் வேண்டும். தொழில் சார்ந்த முயற்சிகளில் எண்ணிய முன்னேற்றம் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களின் மீது கவனம் வேண்டும். மாணவர்களுக்கு புத்திக்கூர்மை அதிகரிக்கும்.
வழிபாடு :
புதன்கிழமைதோறும் பெருமாளை வழிபட்டு வர மனத்தெளிவு உண்டாகும்.
—————————————
கடகம்
சுயதொழில் சார்ந்த முயற்சிகளில் எண்ணிய முன்னேற்றம் உண்டாகும். தாய்மாமன்வழி உறவுகளால் ஆதரவான சூழல் உண்டாகும். விவசாயம் தொடர்பான காரியங்களில் லாபகரமான சூழல் ஏற்படும். புத்திரர்களின் மூலம் தொழில் சார்ந்த ஆதரவுகள் கிடைக்கும். சக பணியாளர்களின் மூலம் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். பூர்வீகம் தொடர்பான சுபச்செய்திகள் கிடைக்கும். பழைய பாக்கிகளை வசூலிக்கும்போது சிந்தித்து செயல்படவும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடுவது மற்றும் கருத்து சொல்வதை தவிர்ப்பது நன்மையை அளிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
வழிபாடு :
வியாழக்கிழமைதோறும் குருமார்களின் ஜீவசமாதிகள் சென்று வழிபட முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் அகலும்.
—————————————
சிம்மம்
தேவையற்ற சிந்தனைகளை தவிர்ப்பது நன்மையை அளிக்கும். மற்றவர்களிடம் உரையாடும்போது கோபம் கொண்ட பேச்சுக்களை தவிர்ப்பது நன்று. மனதிற்கு நெருக்கமானவர்களிடம் கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். ஆன்மிகம் தொடர்பான மகான்களின் தரிசனம் கிடைக்கும். பிள்ளைகளால் புகழ் மற்றும் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக்கொள்வீர்கள். உறவுகளிடத்தில் நிதானம் வேண்டும். எதிர்பார்த்த கடன் உதவிகள் சாதகமாகும். இணையதளம் தொடர்பான பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். பாசன வசதிகள் மேம்படும்.
வழிபாடு :
ஞாயிற்றுக்கிழமைதோறும் சிவபெருமானை வழிபட்டு வர எண்ணத்தெளிவு உண்டாகும்.
————————————–
கன்னி
நினைத்த செயல்களில் ஏற்பட்ட தடைகள் நீங்கி திருப்தியான சூழல் ஏற்படும். இரும்பு தொடர்பான தொழில் சார்ந்த முயற்சிகளில் எண்ணிய லாபம் உண்டாகும். வெளியூர் பயணங்களால் செல்வாக்கு அதிகரிக்கும். புதுவிதமான செயல்களில் விருப்பம் உண்டாகும். பணிபுரியும் இடங்களில் சாதகமான சூழல் உண்டாகும். வீண் பேச்சுக்களை தவிர்க்கவும். பணிபுரியும் இடங்களில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனத்துடன் இருக்கவும். அறிமுகமில்லாத புதிய நபர்களிடம் உரையாடும்போது கவனம் வேண்டும்.
வழிபாடு :
புதன்கிழமைதோறும் தன்வந்திரி பகவானை வழிபாடு செய்து வர ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.
————————————–
துலாம்
ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பது நன்மையை அளிக்கும். அலைச்சல்களால் உடல்சோர்வு உண்டாகும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் புதிய முயற்சிகளால் லாபம் அதிகரிக்கும். நண்பர்களுடன் இன்ப சுற்றுலாக்கள் செல்வதற்கான சூழல் உண்டாகும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். மற்றவர்களுக்கு தேவையான உதவிகள் செய்வதன் மூலம் நன்மதிப்பு உண்டாகும். தந்தைவழி சொத்துக்களின் மூலம் லாபம் உண்டாகும். வாக்குவன்மையால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள்.
வழிபாடு :
திங்கட்கிழமைதோறும் மலைமகளை வழிபட்டு வர முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.
————————————–
விருச்சிகம்
மனதில் எண்ணங்கள் ஈடேறும். நண்பர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உணவு சம்பந்தமான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். சுபச்செய்திகளால் சுபவிரயம் உண்டாகும். பிரபலங்களின் அறிமுகம் மாற்றமான சூழலை உருவாக்கும். மனதிற்கு நெருக்கமானவர்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். மனதில் பலவிதமான எண்ணங்களால் குழப்பமான சூழல் உண்டாகும்.
வழிபாடு :
சனிக்கிழமைதோறும் துர்க்கை அம்மனை வழிபட்டு வர மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும்.
————————————–
தனுசு
கணவன், மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். தொழில், உத்தியோகம் காரணமாக அடிக்கடி வெளியூருக்கு செல்லும் நிலை உண்டாகும். உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகளால் கலகலப்பான சூழல் உண்டாகும். சூடான பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும். வாகனங்களை விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி அமைப்பீர்கள். மூத்த உடன்பிறப்புகளிடம் தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்க்கவும். புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். சிறு தூர பயணங்களால் மாற்றமான சூழல் உண்டாகும். 
வழிபாடு :
புதன்கிழமைதோறும் பெருமாளை வணங்கி வர வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
—————————————
மகரம்
உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் முயற்சிக்கேற்ற முன்னேற்றம் உண்டாகும். திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் நெருக்கடியான சூழலை உருவாக்கும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைக் கற்றுக்கொள்வீர்கள். அனுபவ அறிவால் முன்னேற்றமான சூழல் ஏற்படும். உடன்பிறப்புகளால் ஆதாயமான சூழல் உண்டாகும். குடும்பத்துடன் இன்ப சுற்றுலாக்கள் செல்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். மனை தொடர்பான செயல்பாடுகளால் மேன்மையான சூழல் உண்டாகும்.
வழிபாடு :
சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயரை வழிபட்டு வர மனதில் தெளிவு பிறக்கும்.
————————————–
கும்பம்
தாய்வழி உறவுகளின் மத்தியில் மதிப்புகள் உயரும். உத்தியோகத்தில் முயற்சிக்கு ஏற்ப புதுவிதமான வாய்ப்புகள் உண்டாகும். திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். வாரிசுகளின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். நிலுவையில் இருந்த தனவரவுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வர்த்தகம் தொடர்பான பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். மனை தொடர்பான செயல்பாடுகளால் லாபம் அதிகரிக்கும். எதிர்பாலின மக்களின் மூலம் சாதகமான தொழில் வாய்ப்புகள் உண்டாகும். பணிபுரியும் இடங்களில் திருப்தியான சூழல் அமையும்.
வழிபாடு :
செவ்வாய்க்கிழமைதோறும் முருகரை வழிபட்டு வர முன்னேற்றம் ஏற்படும்.
————————————–
மீனம்
மனதில் ஆன்மிகம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். தொழிலில் எண்ணிய லாபம் உண்டாகும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு எண்ணிய இலக்கை அடைவீர்கள். உடன்பிறந்தவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மையை தரும். செய்யும் செயல்களால் உயர்வான சூழல் உண்டாகும். கல்வி கற்கும் மாணவர்களின் புத்திக்கூர்மை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணங்கள் செல்ல வேண்டிய சூழல் ஏற்படும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.
வழிபாடு :
வெள்ளிக்கிழமைதோறும் மகாலட்சுமியை வழிபாடு செய்து வர தடைகள் அகலும்.
———————————–

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...