இன்றைய ராசி பலன்கள் ( 08 ஜனவரி திங்கட்கிழமை 2024)

 இன்றைய ராசி பலன்கள் ( 08 ஜனவரி திங்கட்கிழமை 2024)

தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் ஜனவரி 08ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.

சோபகிருது வருடம் மார்கழி மாதம் 23 ஆம் தேதி திங்கட்கிழமை 08.01.2024, சந்திர பகவான் இன்று விருச்சிக ராசியில் பயணம் செய்கிறார். இன்று இரவு 09.57 வரை துவாதசி. பின்னர் திரயோதசி. இன்று இரவு 08.20 வரை அனுஷம். பின்னர் கேட்டை. அஸ்வினி பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷ ராசி அன்பர்களே!

இன்று எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். புதிய முயற்சிகளில் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடவும். தாயின் உடல் நலனில் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும். தெய்வப் பணிகளில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படும். உறவினர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். இன்றைய நாளை முருகப்பெருமானை வழிபட்டு தொடங்குவதன் மூலம் நன்மைகள் அதிகரிக்கும்.

ரிஷப ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வழக்கமான பணிகளிலும் மிகுந்த கவனத்துடன் ஈடுபடவும். மற்றவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம். சிலருக்கு எதிர் பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படும். சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படும். வெளியூர்ப் பயணம் தவிர்க்கவும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர் களால் பிரச்னை ஏற்படக்கூடும். விநாயகப் பெருமானை வழிபடுவதன் மூலம் சிரமங்களைக் குறைத்துக்கொள்ளலாம்.

மிதுன ராசி அன்பர்களே!

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லை கள் நீங்கும். முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். செலவுகள் அதிகரிக்கும் என்றாலும் மகிழ்ச்சி யான செலவாகவே இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். அரசாங்க வகையில் எதிர்பார்க் கும் காரியம் அனுகூலமாக முடியும். சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். துர்கையை வழிபடுவதன் மூலம் முயற்சிகளில் வெற்றி பெறலாம்.

கடக ராசி அன்பர்களே!

முயற்சிகளில் வெற்றி உண்டாகும். சிலருக்கு உறவினர்கள் வகையில் எதிர் பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. வாகனத்தில் செல்லும்போது சற்று கவனமாக இருக் கவும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். சிலருக்குக் குலதெய்வப் பிரார்த்தனையை நிறை வேற்றும் வாய்ப்பு ஏற்படும். பிள்ளைகளால் சங்கடங்கள் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். சிவபெருமானை வழிபடுவதால் காரியங்கள் சாதகமாக முடியும்.

சிம்ம ராசி அன்பர்களே!

மனதில் சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். குடும்ப விஷயமாக சற்று அலைச் சலும் சோர்வும் ஏற்படும். தாய்மாமன் வழியில் சுபச்செய்தி வரும். உறவினர்களால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் அதனால் பாதிப்பு எதுவுமிருக்காது. உடல் ஆரோக்கியத்தில் மட் டும் சிறிது கவனம் தேவை. வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். ஆஞ்சநேயரை வழிபடுவதன் மூலம் மன அமைதி உண்டாகும்.

கன்னி ராசி அன்பர்களே!

தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். தாயின் உடல் ஆரோக்கியம் மேம்படும். நீண்ட நாள்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபட்டு இன்றைய நாளைத் தொடங்கிட மகிழ்ச்சி அதிகரிக்கும்.

துலா ராசி அன்பர்களே!

காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதற்கு ஏற்ற நாள். சகோதர வகையில் மகிழ்ச்சியுடன் ஆதாயமும் உண்டாகும். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். தாயின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். தந்தை வழி யில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக் கும். அம்பிகை வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். உறவினர்கள் வகையில் புதிய ஆடை, ஆபரணங் களின் சேர்க்கை உண்டாகும். சகோதர வகையில் ஆதாயம் ஏற்படும். புதிய முயற்சிகளைத் தவிர்க் கவும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன் யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே இருக்கும். குலதெய்வத்தை பிரார்த்தித்துக்கொள்வதன் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கப் பெறலாம்.

தனுசு ராசி அன்பர்களே!

உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். தேவையான பணம் இருப்பினும் தேவையற்ற செலவுகளும் ஏற்படுவதால், கையிருப்பு கரைவதுடன் சிலருக்குக் கடன் வாங்கவும் நேரிடும். தாய்மாமன் வழியில் செலவுகள் ஏற்படும். தாயின் தேவையை நிறைவேற்ற சற்று அலைச்சல் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகளால் சஞ்சலம் ஏற்படக்கூடும். ஷீர்டி சாய்பாபாவை வழிபட்டு நாளைத் தொடங்கினால் காரியங்கள் அனுகூலமாகும்.

மகர ராசி அன்பர்களே!

எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படும். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். ஆனால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வெளியூர்ப் பயணம் தவிர்ப்பது நல்லது. தாய் வழி உறவினர்கள் வகையில் சுபச்செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் அதிகமாக இருக்கும். மகாலட்சுமி வழிபாடு அதிர்ஷ்ட வாய்ப்புகளை ஏற்படுத்தும்.

கும்பராசி அன்பர்களே!

அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் சற்று இழுபறிக்குப் பின்னர் முடிந்துவிடும். தந்தை வழியில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். சகோதர வகையில் எதிர்பாராத செலவு ஏற்படும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். வியாபாரத்தில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலம் நன்மைகள் அதிகரிக்கும்.

மீனராசி அன்பர்களே!

அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். புதிய முயற்சிக்கு வாழ்க்கைத் துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் ஏற்படக்கூடும். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். வியாபாரம் வழக்கம்போல நடைபெறும். முருகப்பெருமானை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...