இன்றைய ராசி பலன்கள் ( 06 ஜனவரி சனிக்கிழமை 2024)

 இன்றைய ராசி பலன்கள் ( 06 ஜனவரி சனிக்கிழமை 2024)

தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் ஜனவரி 06ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.

சோபகிருது வருடம் மார்கழி மாதம் 21 ஆம் தேதி சனிக்கிழமை 06.01.2024, சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார். இன்று இரவு 09.55 வரை தசமி. பின்னர் ஏகாதசி. இன்று இரவு 07.05 வரை சுவாதி. பின்னர் விசாகம். உத்திரட்டாதி ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷ ராசி அன்பர்களே!

அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். தாய்வழியில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்லவும். உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. தாய்மாமன் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகளால் மனதில் சஞ்சலம் ஏற்படும். இன்று வேங்கடேச பெருமாளை வழிபடுவது நன்று.

ரிஷப ராசி அன்பர்களே!

பணவரவு உண்டு. என்றாலும் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவி கிடைப்பது தாமதமாகும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாக இருந்தாலும் வீண் செலவுகளும் ஏற்படும். விநாயகர் வழிபாடு நலம் சேர்க்கும்.

மிதுன ராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். அவர்கள் போக்கிலேயே சென்று விட்டுப்பிடிப் பது நல்லது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். இன்று அம்பி கையை வழிபடுவது நன்று.

கடக ராசி அன்பர்களே!

மகிழ்ச்சி தரும் நாள். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தம் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.தந்தைவழி உறவினர்களால் வீண்  செலவுகள் ஏற்படும். முக்கிய முடிவு ஒன்றை துணிச்சலுடன் எடுப்பீர்கள். குடும்பத்தில் உறவினர்களால் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாப மும் கூடுதலாக இருக்கும். சரபேஸ்வரர் வழிபாடு நன்று.

சிம்ம ராசி அன்பர்களே!

புதிய முயற்சி சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தாயின் உடல் நலனில் கவனம் தேவை. வாழ்க்கைத்துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததைவிட கூடுதலாக இருக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்று.

கன்னி ராசி அன்பர்களே!

உற்சாகத்துடன் செயல்படும் நாள். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார் கள். சிலருக்கு பிள்ளைகள் மூலம் சில சங்கடங்கள் ஏற்படும். மற்றவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.  செலவுகள் ஏற்பட்டாலும் சமாளிப்பதில் சிரமம் எதுவும் இருக்காது. தந்தை யின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். இன்று ஆஞ்சநேயரை வழிபடுவது நன்று.

துலா ராசி அன்பர்களே!

எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய நாள். புதிய முயற்சி களைத் தவிர்ப்பது நல்லது. மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலருக்கு மற்றவர்களுடன் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பேசும்போது பொறுமை அவசியம். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனஸ்தாபம் நீங்கும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். சிவபெருமானை வழிபட சிரமங்கள் குறையும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வாழ்க்கைத்துணை யுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பப் பொறுப்புகளின் காரணமாக அலைச்சல் ஏற்படும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வியாபாரத்தில் ஏற்படும் சில பிரச்னைகளால் மனதில் சஞ்சலம் உண்டாகும். இன்று துர்கையை வழிபடுவது நன்று.

தனுசு ராசி அன்பர்களே!

மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். புதிய நண்பர்களின் அறிமுகமும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கக்கூடும். வாழ்க்கைத்துணைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். ஆனாலும், புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிடுவது நன்று. வியாபாரத்தில் விற்பனை விறுவிறுப் பாக நடக்கும். முருகப்பெருமானை வழிபட நன்மைகள் கூடும்.

மகர ராசி அன்பர்களே!

பல வகைகளிலும் அனுகூலமான நாள். சகோதரர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். தந்தைவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அரசாங்கக் காரியம் அனுகூலமாக முடியும். செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிட முடியும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போல் இருந்தாலும், பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படும். விநாயகர் வழிபாடு நன்று.

கும்பராசி அன்பர்களே!

நீண்டநாள்களாக எதிர்பார்த்து ஏமாந்த பணம் இன்று கைக்கு வந்து மகிழ்ச்சி தரும். சிலருக்கு தந்தையுடன் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அவருடன் அனுசரணையாக நடந்துகொள்ள முயற்சி செய்யவும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். அம்பிகையை வழிபடுவது நன்று.

மீனராசி அன்பர்களே!

சிந்தித்துச் செயல்படவேண்டிய நாள். அடிக்கடி மனதில் சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். தாயின் தேவையை நிறைவேற்ற சிறிது அலையவேண்டியிருக்கும். உடல்நலனில் கவனம் தேவை. வீட்டில் பொறுப்புகள் அதிகரிக்கும் என்பதால் சற்று சோர்வு உண்டாகும். அலுவலகரீதி யாகவும் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். பொறுமை அவசியம். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு நலம் சேர்க்கும்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...