இன்றைய ராசி பலன்கள் ( 14 டிசம்பர் வியாழக்கிழமை 2023 )

 இன்றைய ராசி பலன்கள் ( 14 டிசம்பர் வியாழக்கிழமை 2023 )

தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் டிசம்பர் 14ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.

சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 28 ஆம் தேதி வியாழக்கிழமை 14.12.2023,சந்திர பகவான் இன்று தனுசு ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 04.35 வரை பிரதமை. பின்னர் துவிதியை. இன்று காலை 11.42 வரை மூலம். பின்னர் பூராடம். ரோகிணி மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷ ராசி அன்பர்களே!

மனதில் உற்சாகம் ஊற்றெடுக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைப்பது மகிழ்ச்சி தரும். தாயின் உடல் ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கைத்துணைவழி உறவினர் வருகையால் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். இன்று சிவபெருமானை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

ரிஷப ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. பிற்பகலுக்கு மேல் பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். சிலருக்கு வீட்டில் மராமத்துப் பணிகள் அதிகரிக் கும். தந்தையிடம் எதிர்பார்த்த பணஉதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் பணி யாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். தட்சிணாமூர்த்தியை வழிபட உடல் ஆரோக்கியம் மேம்படும்.

மிதுன ராசி அன்பர்களே!

மகிழ்ச்சியான நாள். துணிச்சலுடன் முடிவெடுப்பீர்கள். எடுத்த காரியத்தைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தைவழி உறவுகள் கேட்கும் உதவியைச் செய்து தருவீர்கள். முக்கியப் பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். உங்களைப் பற்றித் தவறாகப் பேசிய உறவினர்கள் மனம் வருந்தி மன்னிப்பு கேட்பார்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் மறையும். அம்பிகை வழிபாடு அளவற்ற மகிழ்ச்சி தரும்.

கடக ராசி அன்பர்களே!

காரியங்கள் அனுகூலமாக முடியும். பிள்ளைகள் வகையில் சில சங்க டங் கள் ஏற்பட்டாலும் அதனால் பெரிய பாதிப்பு எதுவுமிருக்காது. சகோதரர்களால் வீண் செலவுகள் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பும் சிலருக்கு ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட விற்பனையும் லாபமும் குறைவாகத்தான் இருக்கும். இன்று நீங்கள் துர்கையை வழிபடுவதன் மூலம் நன்மைகளை கூடுத லாகப் பெறலாம்.

சிம்ம ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்குவது சாதகமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு குறையும். மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். தாய்வழி உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத் தில் கவனம் தேவை. உங்கள் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைப்பதற்கில்லை. வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். ஆறுமுகப் பெருமானை வழிபட அல்லல்கள் நீங்கும்.

கன்னி ராசி அன்பர்களே!

பணவரவு திருப்தி தரும். பிள்ளைகளின் உடல்நலனில் கவனம் தேவை. வாழ்க்கைத்துணையால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். மனதில் அடிக்கடி குழப்பங்கள் ஏற் படும். சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்களுக்காக செலவு செய்ய நேரிடும். வியாபாரத்தில் பணியாளர்களால் வீண் செலவுகள் ஏற்படும். ஆனால், லாபம் எதிர்பார்த் தபடி இருப்பது மகிழ்ச்சி தரும். வேங்கடேச பெருமாளை வழிபடுவதன் மூலம் மனஅமைதி பெற லாம்.

துலா ராசி அன்பர்களே!

மனதில் குழப்பங்கள் நீங்கி உற்சாகம் ஏற்படும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தாய்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடிவதற்கு வாய்ப்பு ஏற்படும். வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும். குடும்பப் பெரியவர்களிடம் பேசும்போது பொறு மையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பங்கு தாரர்களிடம் எதிர்பார்த்த உதவி இழுபறியானாலும் கிடைத்துவிடும். லட்சுமி நரசிம்மரை வழிபட முயற்சிகள் சாதகமாக முடியும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

இன்று புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சகோதரர்களுக்காக செலவு செய்ய நேரிடும். மற்றவர்களுடன் வீண் விவாதத்தில் ஈடுபட வேண்டாம். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. உறவினர் மூலம் கிடைக்கும் செய்தி உங்களை உற்சாகப்படுத்துவதாக இருக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும். முருகப்பெருமானை வழிபடுவதன் மூலம் மனஅமைதி பெறலாம்.

தனுசு ராசி அன்பர்களே!

காலையில் வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும். பிற்பகலுக்கு மேல் மனதில் உற்சாகம் அதிகரிக்கும். விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் செயல்படுவீர்கள். தாய்வழி உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். கணவன் – மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். சிலருக்கு நீண்டநாள் நிலுவையில் இருந்த பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். லாபமும் அதிகரிக்கும். இன்று நீங்கள் ஆஞ்சநேயரை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.

மகர ராசி அன்பர்களே!

எதிர்பாராத பணவரவு இருந்தாலும் திடீர் செலவுகளும் ஏற்பட்டு திணற வைக்கும். காரியங்கள் முடிவதில் இருந்து வந்த இழுபறி நிலை மாறி, அனுகூலமாக முடியும். வெளியூர்ப் பயணம் தவிர்க்கவும். வாழ்க்கைத்துணையின் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிப்பதுடன் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். சக வியாபாரி களால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். பணியாளர்களுக்காக செலவு செய்ய நேரிடும். மகா விஷ்ணு வழிபாடு மகிழ்ச்சி தரும்.

கும்பராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். காரியங்கள் அனுகூலமாகும். உங்கள் பொறுப்புகளை வாழ்க்கைத்துணை பகிர்ந்துகொள்வது ஆறுதலாக இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நி யோன்யம் அதிகரிக்கும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அவருடன் மன வருத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமையாக நடந்துகொள்வது அவசியம். வியாபாரம் எதிர்பார்த்ததுபோலவே நடைபெறுவது மகிழ்ச்சி தரும். இன்று மகாலட்சுமியை வழிபடுவதன் மூலம் நன்மைகள் அதிகரிக்கும்.

மீனராசி அன்பர்களே!

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு சகோதரர்களால் எதிர்பாராத செலவுகளுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு நவீன டிசைனில் புதிய ஆடைகளை வாங்கும் யோகம் ஏற்படும். சிலருக்கு நண்பர்கள் வீட்டில் எளிய முறையில் நடைபெறும் சுபநிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டும் வாய்ப்பு ஏற்படும். தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். அவர் மூலம் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள். குலதெய்வத்தை வழிபட அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...