சதுரகிரியில் புரட்டாசி பௌர்ணமி குவியும் பக்தர்கள்! | தனுஜா ஜெயராமன்

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்.

புரட்டாசி மாத பவுர்ணமி என்றால் சதுரகிரி கோயிலில் வெகு விஷேசமாக இருக்கும். இதனை முன்னிட்டு சதுரகிரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது இந்த கோயிலுக்கு மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி நாட்கள் மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதி என்பது வழங்கப்பட்டு வருகிறது

இந்நிலையில் புரட்டாசி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு கடந்த 27 ஆம் தேதி முதல் நாளை வரை 4 நாட்கள் பக்தர்கள் மலை ஏறி சாமி தரிசனம் செய்ய வனத்துறையினர் மற்றும் கோயில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

கோயிலுக்கு வரும் பக்தர்கள் மலைப்பாதைகளில் உள்ள நீரோடைகளில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. பக்தர்கள் இரவில் தங்க அனுமதி இல்லை.
மலைப்பகுதிக்கு எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட நாட்களில் பலத்த மழையோ அல்லது நீரோடைகளில் நீர்வரத்து அதிகமாக இருந்தால் மலையேறி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என வனத்துறை மற்றும் கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் கூட்டம் அதிகமாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!