கலாக்ஷேத்ரா பாலியல் குற்றச்சாட்டு || பாடகர் எஸ்.எம்.கிருஷ்ணா கேள்வி

கர்நாடக இசைக்கலைஞரும் எழுத்தாளருமான டி.எம்.கிருஷ்ணா “கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் அவதூறுகள் நடந்தது பற்றிய புகார்களுக்கு கலாக்ஷேத்ராவின் பதில் ஏமாற்றமளிக்கிறது” என்று கிருஷ்ணா கூறியுள்ளார்.

சென்னையில் உள்ள கலாக்ஷேத்ராவின் முன்னாள் தலைவியும் நடிகையுமான லீலா சாம்ஷன் வலைதளத்தில் போட்ட பதிவில் “கல்லூரியின் தற்போதைய தலைவர் மாணவர்களுக்குப் பாலியல் தொல்லை அளிப்பதாக”க் கூறியிருந்தார். அதில் குறிப்பிட்ட ஒரு பாணவியின் பெயரையும் குறிப்பிட்டு அந்த மாணவி கருவுற்று கருக்கலைப்பு செய்யப்பட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். அதோடு பெற்றோர்கள் அங்கு மாணவர்களைப் படிக்க அனுப்பாதீர்கள் என்றும் பதிவிட்டிருந்தார்.

லீலா சாமஷசன் பதிவைப் பார்த்து தானாக முன்வந்து கையிலெடுத்தது தேசிய மகளிர் ஆணையம். சென்னை கமிஷனரிடம் இதை விசாரணை செய்து நோட்டீஸ் அனுப்பச் சொல்லியிருந்தது. அந்த வகையில் சென்னை போலிஸார் விசாரணையை ஆரம்பித்தனர். ஆனால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்த மாணவியே திருவான்மியூர் காவல் நிலையத்துக்கு வந்து பரபரப்பு புகார் தெரிவித்திருந்தார். அதில் தனது பெயரையும் கலாக்ஷேத்ராவின் பெயரையும் கெடுக்கவே இந்தப் பொய்யான புகார் கூறப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார். அதோடு லீலா சாம்ஷன் மீது நடிவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இதை அடுத்து கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக க் கூறப்படும் விவகாரத்தில், தமிழக டி.ஜி.பி.க்கு அனுப்பிய நோட்டீஸை தேசிய மகளிர் ஆணையம் திரும்பப் பெற்றுள்ளது.

காரணம், பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட மாணவி, தான் எந்தவிதமான பாலியல் தொந்தரவுக்கும் ஆளாகவில்லை என்றார். அதனடிப்படையில், பாலியல் தொந்தரவு தொடர்பாக விசாரணை நடத்த தமிழக டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டிருந்த தேசிய மகளிர் ஆணையம், தனது நோட்டீஸை வாபஸ் பெற்றுள்ளது.

இந்த நிலையில் எஸ்.எம். கிருஷ்ணா, கலாக்ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவர் எஸ். ராமதுரைக்கு எழுதிய கடிதத்தில், “உணர்திறன் இல்லாமை, ஆக்ரோஷமான தொனி மற்றும் புறக்கணிப்பு ஆகியவை நிறுவனத்திற்குத் தகுதியற்றவை” என்று கூறினார். சில இடங்களில், எழுப்பப்படும் புகார்கள், அந்த நிறுவனம் மீதான தாக்குதலாக மாறியதையும் அவர் குறிப்பிட்டார்.

சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட அறிக்கையில், கலாக்ஷேத்ராவில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக சமூக ஊடகங்களில் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள் பற்றிய விரிவான விசாரணையில் அவை ஆதாரமற்றவை மற்றும் அடிப்படையற்றவை என்று தெரியவந்ததாக திரு.ராமதுரை கூறியிருந்தார்.

எஸ்.எம்.கிருஷ்ணா கடிதத்தில், அதன் நகல் ஊடகங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது, திரு. கிருஷ்ணா சிறிய நகரங்களில் இருந்து வரும் பல மாணவர்கள் இல்லை என்று கூறினார்.

எந்த நிலையிலும் அவர்களுக்கு மேலே உள்ளவர்களுக்கு சவால் விடலாம். “பாலியல் துஷ்பிரயோகம் என்று குற்றம் சாட்டப்பவர்கள், இளம் மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் மீது கரிசனையும் கருணையும் காட்டாத வரை எந்த விசாரணையும் பயனுள்ளதாக இருக்காது என்பது உங்களுக்குத் தெரியும். அந்த இடம் மிகவும் படிநிலையாக இருக்கும்போது, ​​யாரும் சுதந்திரமாகவும் அச்சமின்றியும் பேச மாட்டார்கள்.” என்று சொன்னார்.

அவர் இந்த நிறுவனத்திலும், கலை கற்க வரும் நூற்றுக்கணக்கான மாணவர்களின் நலனிலும் அக்கறை கொண்டு இந்த பிரச்சினையை எழுப்பினார்.

“இந்த மிகத் தீவிரமான புகார்களைத் தீர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்,” என்றார் எஸ்.எம். ‘கிருஷ்ணா.

தற்போது மீண்டும் கலாக்ஷேத்ராவின் பெயர் அடிபடத் தொடங்கியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!