தனி முத்திரை பதிக்கும் ‘தக திமி தக ஜனு’ நடன நிகழ்ச்சி

நடிகை அதிதி பாலன்

உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக, பரதநாட்டியத்தின் மேல் அமைக்கப்பட்ட ஒரு கேம் ஷோ என்றால் அது ‘தக திமி தா’ நிகழ்ச்சிதான்.  தற்போது இந்த புதுமையான நிகழ்ச்சியை நடிகையும், நடன கலைஞருமான ‘அருவி’ புகழ் அதிதி பாலன் தொகுத்து வழங்குகிறார்.

500 எபிசோடுகளைத் தயாரித்து  5000க்கும் மேற்பட்ட நடன மணிகளை ஹைலைட் செய்து, சுமார்1000 ஜட்ஜ்களை ஒருங்கிணைத்த அழகான கிளாசிக்கல் ஷோ தக திமி தக ஜனு. ஜெயா டி.வி.யின் பரதத்திற்கான மிகப்பெரிய பங்களிப்பு என்று கூட சொல்லலாம். இப்போது அதைத் தொடர்ந்து அதே பாணியில் அமைக்கப்பட்ட புத்தம் புது ஷோ தான் “தக திமி தக ஜனு”.

நடுவர்கள்

ஜெயா டிவியின் ‘தக திமி தா ‘ பாரம்பரிய நடனமான பரதநாட்டியத்திற்கு சேனலின் சார்பாக வழங்கும் மிகப்பெரிய பங்களிப்பாகும். ஜெயா டிவி இளம் பரதநாட்டிய கலைஞர்களுக்கு ஒரு தளத்தை உருவாக்கியுள்ளது மற்றும் ‘தக திமி தா’ என்பது ஒரு வித்தியாசமான நிகழ்ச்சியாகும், இது 500-க்கும் மேற்பட்ட எபிசோடுகள் ஒளிபரப்பப்பட்டது. மேலும் தேசிய அளவில்  சிறந்த நடன நிகழ்ச்சிக்கு வழங்கப்படும் ‘ராபா’ விருதையும் வென்றுள்ளது.

இது 5000-க்கும் மேற்பட்ட இளம் திறமைகளை அடையாளம் காட்டியுள்ளது  கிட்டத்தட்ட 1000 நடன குருக்களையும் உருவாக்கிய வரலாறு இந்த நிகழ்ச்சிக்கு உண்டு.

சூப்பர் ஹிட் நிகழ்ச்சியாக விளங்கிய  தக திமி தாவை முன்னணி நடிகைகள்,  நடனக் கலைஞர்களாக திகழ்ந்த பானுப்ரியா, ஷோபனா, சுகன்யா, மோகினி, சுதா சந்திரன், அண்ணி மாளவிகா, விமலா ராமன், இந்திரஜா, அபர்ணா மற்றும் பலர் தொகுத்து வழங்கியுள்ளனர்.

தற்போது  ஜெயா டிவி புதிய வடிவத்தில் மற்றும்  புதிய சுற்றுகளுடன் பரதநாட்டிய கலைஞர்களுக்கான பிரத்யேக   நிகழ்ச்சியாக “தக திமி தக ஜனு” உடன் வருகிறது. இந்த புதிய நிகழ்ச்சி சீசன்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு சீசனும் ஆரம்பச் சுற்று, காலிறுதிச் சுற்று, அரையிறுதிச் சுற்று மற்றும் இறுதிச் சுற்று என மொத்தம் 26 எபிசோடுகளைக் கொண்டுள்ளது. சீசனின் முடிவில் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

ஒவ்வொரு நிலையிலும்  வெவ்வேறு விதமான சுற்றுகள் இருக்கும். ஆரம்ப சுற்று 14  எபிசோடுகளாக  படமாக்கப்பட்டுள்ளது. மொத்தம் 42 போட்டியாளர்கள்  ஆடிசன்  செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டுவார்கள். அவர்கள் அனைவரும் இந்த ஆரம்ப சுற்றில் பங்கேற்பார்கள். 

அவர்களிலிருந்து 14 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும்  4 வைல்டு கார்டு என்ட்ரிகளுக்கும் இடம் உண்டு. போட்டியாளர்கள் 3  சவாலான  சுற்றில் போட்டியிட வேண்டும்.

1.தில்லானா சுற்று:-

 இந்த முதல் சுற்று ஒரு சவாலானது மற்றும் நடனக் கலைஞரின் திறமை, திறன், தரம் மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றை சோதிக்ககூடியதாக இருக்கும். தில்லானா என்பது  சிக்கலான தாளங்களுடன் குறுக்கிடப்பட்ட வேகமான எண்.

2. இரண்டாவது சுற்று திரை இசை சுற்று:-

இந்த சுற்று நடனக் கலைஞர்களின் அபிநயம்  அல்லது பாவனைகளை  வெளிப்படுத்தும்  திறனை மதிப்பீடு செய்யும். போட்டியாளர்கள் திரைப்படங்களிலிருந்து   மெலோடி  பாடல்களை தேர்வு செய்து நடனமாட வேண்டும். ஏற்கனவே அந்த படங்களில் நடனமாடிய  பாடல்களை தேர்வு செய்யக்கூடாது. நடனமாடாத  பாடல்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

3. இறுதி சுற்று ஒரு சஸ்பென்ஸ் சுற்று இதற்கு சங்கமம்  என்று பெயர்.

ஒவ்வொரு போட்டியாளரும் ஒரு கிண்ணத்திலிருந்து ஒரு சீட்டை எடுக்க வேண்டும். அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறதோ அதற்குப்  போட்டியாளர்கள் நடனமாட வேண்டும்.

இது நாட்டுப்புறம் சார்ந்த அல்லது இசைக்கருவிகளின் அடிப்படையில்  இருக்கலாம். ஆரம்ப  சுற்றுகளான 14 எபிசோடுகளிலும், ஒவ்வொரு எபிசோடுக்கும் 2 நடுவர்கள் இருப்பர். அவர்கள் அனைவரும் கலைமாமணி, நாட்டியத்தில் முனைவர் பட்டம் பெற்ற மிகவும் பிரபலமான  நடன குருக்களாவர்.

இது புதுமையான நிகழ்ச்சியை நடிகையும், நடன கலைஞருமான ‘அருவி’ புகழ் அதிதி பாலன் தொகுத்து வழங்குகிறார்.

இந்த நிகழ்ச்சியின் கருத்து மற்றும் இயக்கம்:‘கலைமாமணி’ டாக்டர் ராதிகா ஷுராஜித். ஸ்கிரிப்ட் , ஒருங்கிணைப்பு மற்றும் உதவி இயக்கம்: ஸ்ரீ. சர்ச்சில் பாண்டியன்.

ஜெயா டிவியில் புதிய சுற்றுகளுடன் பரதநாட்டிய கலைஞர்களுக்காக ஒளிபரப்பாகும் பிரத்யேக நிகழ்ச்சி “தக திமி தக ஜனு” ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 9.30 மணிக்கு  ஒளிபரப்பாகிறது .

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...