கூட்டணியை இறுதி செய்ய பா.ஜ.க. தீவிரம்

தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறோம் என டிடிவி தினகரன் அதிரடியாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் நடந்து வரும் தி.மு.க. தலைமையிலான ஆட்சியின் பதவிக்காலம் மே மாதம் 10-ந்தேதியுடன் முடிவடைய உள்ளது. அதனால், அதற்குள் சட்டசபை தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். சட்டசபை தேர்தலுக்கு…

இன்றுடன்  49-வது சென்னை புத்தக கண்காட்சி நிறைவு

இந்த ஆண்டு நுழைவு கட்டணம் இல்லாமல் அனைவருக்கும் இலவச அனுமதி வழங்கப்பட்டது வரவேற்பை பெற்றுள்து. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 49-வது சென்னை புத்தக கண்காட்சியை கடந்த 8-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் 1,000 அரங்குகள் அமைக்கப்பட்டு,…

மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை

தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று அதிரடியாக அறிவித்திருந்தார். தமிழக சட்டசபைக்கு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஆளுங்கட்சியான திமுக ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளவும், எதிர்க்கட்சியான அதிமுக ஆட்சியை பிடிக்கவும் கங்கணம் கட்டிக்கொண்டு…

2 நாட்கள் சென்னையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் வரும் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர திருத்தத்தின் கீழ் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் வரும் 30-ந்தேதி…

மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு கடந்த சில நாட்களாக வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. தற்போது பாசனப்பகுதிகளில்…

இன்று த.வெ.க. தேர்தல் அறிக்கை குழு ஆலோசனை

சென்னையில் உள்ள தவெக தலைமை நிலைய செயலகத்தில், இன்று காலை இந்த ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன. அந்த வகையில் தி.மு.க., அ.தி.மு.க.வைத்தொடர்ந்து த.வெ.க.…

சத்துணவு ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்

அரசுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் கடந்த 3-ந் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் சத்துணவு ஊழியர்கள் இடம் பெறவில்லை. இந்தநிலையில், சத்துணவு ஊழியர்களுக்கு…

நிதின் நபின் பா.ஜ.க.வின் புதிய தேசிய தலைவராக இன்று பதவி ஏற்கிறார்

பா.ஜ.க. தேசிய தலைவர் பதவிக்கு போட்டியிடும் நிதின் நபினுக்கு ஆதரவாக 37 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. பா.ஜ.க.வின் முதல் தேசிய தலைவராக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இருந்தார். அவரைத் தொடர்ந்து எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, வெங்கையா நாயுடு, நிதின் கட்காரி,…

இன்று தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் தொடக்கம்

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தமிழ்நாடு சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இன்று நடக்கும் முதல் கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்துகிறார்.…

விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்: கிளாம்பாக்கத்தில் போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கடந்த 15-ந்தேதி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அதனை தொடர்ந்து மாட்டு பொங்கல் வார விடுமுறை என்று தொடர்ந்து 5 தினங்கள் விடுமுறை காரணமாக வெளியூர்களில் இருந்து சொந்த ஊருக்கு வந்த…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!