மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

புதுடெல்லி: மாணவர்​கள் வாழ்க்​கை​யில் சமநிலையை பேண​வும், அனைத்து வகை வளர்ச்​சி​யிலும் கவனம் செலுத்​த​வும் செயற்கை நுண்​ணறிவு உள்​ளிட்ட தொழில்​நுட்​பத்தை பொறுப்​புடன் பயன்​படுத்​த​வும் பிரதமர் நரேந்​திர மோடி அறி​வுறுத்​தி​னார்.

பொதுத் தேர்​வு​களை தன்​னம்​பிக்​கை​யுடன் எதிர்​கொள்​வது குறித்து ‘பரிக் ஷா பே சர்ச்​சா’ (பிபிசி) என்ற தலைப்​பில் மாணவர்களு​டன் ஆண்​டு​தோறும் பிரதமர் மோடி கலந்​துரை​யாடி வருகிறார். அந்த வகை​யில் குஜராத்​தில் உள்ள தேவ​மோக்​ரா, தமிழகத்​தில் கோவை, சத்​தீஸ்​கரில் ராய்ப்​பூர், அசாமில் குவாஹாட்டி மற்​றும் டெல்​லி​யில் வசிக்​கும் மாணவர்​களு​டன் பிரதமர் மோடி நேற்று தனது இல்​லத்​தில் கலந்​துரை​யாடி​னார்.

அப்​போது பிரதமர் நரேந்​திர மோடி பேசி​ய​தாவது: கல்​வியை ஒரு சுமை​யாகக் கருதக்​கூ​டாது. தேர்​வு​கள் ஒரு​போதும் இறுதி இலக்​காக இருக்​கக்​கூ​டாது. கல்வி என்​பது நமது வளர்ச்​சிக்​கான ஒரு ஊடகம் மட்​டுமே… மதிப்​பெண்​களில் கவனம் செலுத்​து​வதற்​குப் பதிலாக, ஒவ்​வொரு​வரும் வாழ்க்​கை​யில் என்ன சாதிக்க வேண்​டும் என்​ப​தில் கவனம் செலுத்த வேண்​டும்.

பெற்​றோர் மற்​றும் ஆசிரியர்​களிட​மிருந்து முரண்​பட்ட ஆலோ​சனை​கள் வரலாம். கல்வி கற்​ப​தில் ஒவ்​வொரு மாணவருக்​கும் தனித்​து​வ​மான பாணி உள்​ளது. அந்த வழக்​கத்​தையே பின்​பற்​றுங்​கள். அனுபவங்​கள் மூலம் உங்​களை படிப்​படி​யாக மேம்​படுத்​திக் கொள்​ளுங்​கள்.

படிப்​பு, தூக்​கம், உணவு, பொழுது​போக்கு ஆகிய​வற்​றுக்கு இடையே சமநிலையை பேண வேண்​டும். நீங்​கள் ஒரு பக்​கம் அதி​க​மாக சாய்ந்​தால், நீங்​கள் நிச்​சய​மாக வீழ்ச்​சி​யடைவீர்​கள். வாழ்க்​கை​யில் எல்​லா​வற்​றுக்​கும் சமநிலை தேவை.

அனைத்து வகை வளர்ச்​சி​யிலும் மாணவர்​கள் கவனம் செலுத்த வேண்​டும். விளை​யாட்​டுத் திறன் உங்​கள் ஆளுமை வளர்ச்​சிக்கு உதவிபுரி​யும். அதேவேளை​யில் சூதாட்​டம் தொடர்​பாக நீங்​கள் எச்​சரிக்​கை​யுடன் இருக்க வேண்​டும்.

பொதுத்​தேர்​வு​களுக்கு நீங்​கள் முன்​னுரிமை அளித்​தால் அது போட்​டித் தேர்​வு​களுக்கு வலு​வான அடித்​தளத்தை ஏற்​படுத்​தும். உங்​கள் பாடங்​களை நீங்​கள் முழு​வதும் புரிந்து கொண்​டால் போட்​டித் தேர்​வு​களுக்கு தனி முயற்சி தேவை​யில்​லை.

தேர்வு முறை​களுக்கு மட்​டும் தயா​ராவதை விட முழு​மை​யான கற்​றலுக்கு முன்​னுரிமை அளிக்க வேண்​டும். சகாக்​களுக்கு கற்​​பித்​தல் மூல​மும், புத்​தி​சாலித்​தன​மான வகுப்பு தோழர்​களிட​மிருந்து வழி​காட்​டு​தலைப் பெறு​வதன் மூல​மும் மாணவர்​கள் ஒத்​துழைப்​புடன் கல்வி கற்க வேண்​டும்.

தொழில்​நுட்​பத்தை பொழுது​போக்​குக்​கான ஒரு கரு​வி​யாக கரு​தாமல், உண்​மை​யான கற்​றலுக்​கான ஒரு கரு​வி​யாகப் பயன்​படுத்த வேண்​டும். செயற்கை நுண்​ணறிவு உள்​ளிட்ட தொழில்​நுட்​பத்தை பொறுப்​புடன் பயன்​படுத்த வேண்​டும். இவ்​வாறு பிரதமர் மோடி கூறி​னார்.

பிபிசி 2026 நிகழ்ச்​சிக்கு 2025, டிசம்​பர் 1 முதல் 2026 ஜனவரி 11 MyGovIndia இணை​யதளத்​தில் 4.5 கோடிக்​கும் அதி​க​மானோர் பதிவு செய்​தனர். மேலும், ஜனவரி 12 முதல் ஜனவரி 23 வரை 2.26 கோடிக்​கும் அதி​க​மானோர் பள்ளி அளவி​லான பல்​வேறு செயல்பாடு​களில் பங்​கேற்​றனர். இதன் மூலம் இந்த ஆண்டு மொத்த மாணவர்​ பங்​கேற்​பு 6.76 கோடி​யாக உயர்​ந்​தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!