புதுமையான சிந்தனைகளை ஊக்குவிக்க மொழியை ஒரு தடையாக வைத்திராமல் செயல்பட உதுவும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் புயல் வீசி வருகிறது. இதன் காரணமாக கடந்த 21-ந் தேதி தொடங்கிய நாடாளுமன்ற தொடரில் இதுவரை குறிப்பிடத்தக்க அலுவல் எதுவும் நடைபெறவில்லை. இந்த நாடாளுமன்ற முடக்கம் நேற்றும் 4-வது நாளாக நீடித்தது.
கிராம பஞ்சாயத்துகள், ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், மாவட்ட, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் மற்றும் எம்.பி.க்களுடன் கலந்தாலோசிக்கப்பட்ட பிறகே 29.7.2020 அன்று தேசிய கல்விக்கொள்கை வெளியிடப்பட்டது. கல்வி பொதுப்பட்டியலில் இருப்பதால் தரமான கல்வியை அளிப்பதில் முறையே மத்திய, மாநில அரசுகளுக்கு சரிவிகித பொறுப்பு உள்ளது.
புதுமையான சிந்தனைகளை ஊக்குவிக்க மொழியை ஒரு தடையாக வைத்திராமல் செயல்பட இது உதுவும். பொதுப்பட்டியலில் கல்வி உள்ளது என்பதை உணர்ந்த வடிவமாக அந்தந்த மாநிலங்களுக்கான பாடநூல் திட்டங்கள், கற்றல் முறைகள், பண்பாட்டு விழுமியங்களை உள்ளடக்கியதாகவே தேசிய கல்விக்கொள்கை திகழும். கல்வியின் மீதான மாநில உரிமைகளை பறிப்பதற்கு தேசிய கல்விக்கொள்கை உருவாக்கப்படவில்லை.
மத்திய, மாநில அளவிலான முறையான கண்காணிப்பும் ஒருங்கிணைந்த செயல்பாடும் மட்டுமே இன்றியமையாதது. இக்கொள்கையை பற்றி விழிப்புணர்வை அளிக்கவும், மேலும் புதுமையான அம்சங்களைப் பற்றி ஆலோசிக்கவும் பயிற்சி வகுப்புகள், கருத்துப்பகிர்வை உறுதி செய்யும் ஆலோசனைக் கூட்டங்கள் பல்வேறு கட்டங்களாக மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் மற்றும் அதுசார்ந்த கல்வி அமைப்புகளுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் பதிலளித்து உள்ளார்.
