இன்றைய ராசி பலன்கள் ( மே 21 புதன்கிழமை 2025 )

‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் மே 21-ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.

மேஷ ராசி அன்பர்களே!

இன்று எதிலும் பொறுமையுடனும் சிந்தித்தும் செயல்படவேண்டிய நாள். முக்கிய முடிவுகள் எடுப்பதைக் கண்டிப்பாகத் தவிர்த்துவிடவும். உறவினர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வாழ்க்கைத்துணையுடன் இணக்கமாக நடந்துகொள்வது அவ சியம். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் அனுசரித்துச் செல்லவும்.  வியாபாரத்தில் சில சங்கடங் களை எதிர்கொள்ள நேரிடும். விநாயகரை வழிபடுவதன் மூலம் அனுகூலப் பலன்களைப் பெறலாம்.

ரிஷப ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகள் சாதகமாகும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளில் வாழ்க்கைத்துணையின் ஆலோசனை அவசியம். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். சிலருக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரம் வழக்கம்போல் நடைபெறும். முருகப் பெருமானை வழிபட நன்மைகள் கூடும்.

மிதுன ராசி அன்பர்களே!

 மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். துணிச்சலாக முடிவெடுப்பீர்கள். எதிர்ப்புகளும் இடையூறுகளும் நீங்கும். சகோதரர்கள் மூலம் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. பிள்ளைகள் ஆலோசனை கேட்டு வருவார்கள். பிற்பகலுக்கு மேல் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட  உபத்திரவங்கள் நீங்கும்.  சிவபெருமானை வழிபட்டு இன்றைய நாளைத் தொடங்க நன்மைகள் அதிகரிக்கும்.

கடக ராசி அன்பர்களே!

 புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. தாய்வழி உறவினர்கள் மூலம் குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படும். சிலருக்கு அதிகரிக்கும் பணிச்சுமையின் காரணமாக உடல் அசதி ஏற்படக்கூடும். வியாபாரத்தில் பிற்பகலுக்கு மேல் விற்பனை விறுவிறுப் பாக நடப்பதுடன், லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். அம்பிகையை தியானிக்க மகிழ்ச்சி நிலவும்.

சிம்ம ராசி அன்பர்களே!

எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். முக்கியப் பிரமுகர் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் கனிவான அணுகுமுறை அவசியம். இன்று தட்சிணாமூர்த்தியை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.

கன்னி ராசி அன்பர்களே!

தேவையான பணம் இருப்பதால் செலவுகளைச் சமாளித்துவிடுவீர்கள். உறவினர்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனக் கசப்புகள் நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். தாய்மாமன் வழியில் சுபச்செலவு ஏற்படும். சகோதரர் களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைப்பது மகிழ்ச்சி தரும். இன்று நீங்கள் மகாலட்சுமியை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.

துலா ராசி அன்பர்களே!

பல வகைகளிலும் அனுகூலமான நாளாக இருக்கும்.  அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தந்தையிடம் எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும். பிள்ளைகள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. நண்பர்களுடன் வீண் விவாதம் செய்வதைத் தவிர்ப்பது அவசியம். வாழ்க்கைத்துணையின் முயற்சிக்கு ஒத்துழைப்பு தருவீர்கள். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். இன்று  லட்சுமி நரசிம்மரை  வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

மனதுக்கு மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நிகழும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. தாய்மாமன்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பெற்றோர்கள் இணக்கமாக இருப்பார்கள். மன உறுதியுடன் செயல்படுவீர்கள். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.  வியாபாரத்தில் பங்குதாரர்களால் சிற்சில சங்கடங்கள் ஏற்படக் கூடும். ஆறுமுகக் கடவுளை வழிபடுவதன் மூலம் நன்மைகள் கூடுதலாக நடைபெறும்.

தனுசு ராசி அன்பர்களே!

 எதிர்பார்த்த பணவரவு இருந்தாலும், திடீர் செலவுகளும் ஏற்படும். பிள்ளை களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். தந்தைவழி உறவினர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் சற்று எச்சரிக்கையாக நடந்துகொள்வது அவசியம். பிற்பகலுக்கு மேல் உடல் ஆரோக்கியத் தில் கவனம் செலுத்தவும். வியாபாரத்தில் பணியாளர்களால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். இன்று அம்பிகையை தியானித்து நாளைத் தொடங்குவதன் மூலம் சிரமங்கள் நீங்கும்.

மகரராசி அன்பர்களே!

மகிழ்ச்சியான நாள். குடும்பப் பொறுப்புகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். பிள்ளைகள் கேட்பதை வாங்கித் தந்து அவர்களை உற்சாகப்படுத்துவீர்கள்.  உங்கள் முயற்சிக்கு பெற் றோரின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. தந்தையுடன் பேசும்போது பொறுமை அவசியம். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரம் எப்போதும்போல் நடைபெறும். மகாவிஷ்ணுவை வழிபட, மகிழ்ச்சி கூடுதலாகும்.

கும்பராசி அன்பர்களே!

 தொடங்கும் காரியங்கள் சாதகமாக முடியும். சிலருக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு குறையும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எதுவும் இன்று எடுக்க வேண்டாம். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். அரசாங்க வகையில் இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரத்தில் வழக்கமான நிலையே  காணப்படுகிறது. ஆஞ்சநேயரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

மீனராசி அன்பர்களே!

குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோ சனை அவசியம். வாழ்க்கைத்துணையால் ஆதா யம் கிடைக்க வாய்ப்பு உண்டு. சிலருக்கு  திடீர் செலவுகளுக்கு வாய்ப்பு உள்ளது. சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். நண்பர்கள் அனுசரணை யாக இருப்பார்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளுடன் வீண் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமை அவசியம். விநாயகரை வழிபட புதிய முயற்சிகள் அனுகூலமாகும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!