இன்றைய ராசி பலன்கள் ( ஏப்ரல் 21 திங்கட்கிழமை 2025 )

‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் ஏப்ரல் 21-ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.

மேஷ ராசி அன்பர்களே!

அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். ஆனாலும், புதிய முயற்சி களில் ஈடுபடுவதைத் தவிர்த்துவிடுவது நல்லது. பிற்பகலுக்குமேல் வாழ்க்கைத்துணைவழி உறவி னர்களால் திடீர் செலவுகள் ஏற்படும். இளைய சகோதர வகையில் காரியங்கள் அனுகூலமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான  சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.. மகாலட்சுமி வழிபாடு நலம் சேர்க்கும்.

ரிஷப ராசி அன்பர்களே!

குடும்பம் தொடர்பான முடிவுகளை எடுப்பதில் பொறுமை மிக அவசியம். குடும்பத்தில் மற்றவர்களுடன் அனுசரனையாக நடந்துகொள்ளவும். கணவன் – மனைவிக்கி டையே சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். பங்குதாரர்கள் உங்கள் முயற்சி களுக்கு உதவியாக இருப்பார்கள். விநாயகர் வழிபாடு நலம் தரும்.

மிதுன ராசி அன்பர்களே!

எதிலும் ஒரு பிடிப்பில்லாத மனநிலை ஏற்படக்கூடும். வழிபாட்டின் மூலம் தெளிவு பெற முயற்சிக்கவும். உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கக்கூடும். வாழ்க்கைத்துணை முரண்டு பிடித்தாலும் கடுமை காட்டாமல் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தந்தையிடம் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும். வியாபாரத்தில் பணியாளர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். அம்பிகை வழிபாடு அல்லல் போக்கும்.

கடக ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சகோதர வகையில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். தந்தைவழி உறவினர்களால் சில பிரச்னைகள் குடும்பத்தில் ஏற்படக்கூடும். பிற்பகலுக்கு மேல் நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.  வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும். முருகப்பெருமானை வழிபடுவது நன்று.

சிம்ம ராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள் வார்கள். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில்  சக வியாபாரிகளால் சிறு சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. வாடிக்கையாளர்கள் மிகவும் அனுசரணையாக இருப்பார்கள். லாபமும் கூடுத லாகக் கிடைக்கும். முருகப்பெருமானை வழிபடுவது  நன்று.

கன்னி ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்குவது நல்லது. தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்படும். கணவன் மனைவிக்கி டையே அந்நியோன்யம் அதிகரிக்கும். எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். பழைய கடன்களைத் தந்து முடிக்கும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரம் வழக்கம்போல் நடைபெறும். பணியாளர்களால் செலவுகள் ஏற் படும். இன்று ஆஞ்சநேயரை வழிபடுவது  நன்று.

துலா ராசி அன்பர்களே!

வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். புதிய முயற்சிகள் தவிர்க்கவும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் உதவி கேட்டு வருவார்கள். தாய்மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக் கிடையே  அந்நியோன்யம் அதிகரிக்கும். பிற்பகலுக்குமேல் வீட்டில் உற்சாகமான சூழ்நிலை ஏற்படும்.  வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் குறைவாகவே இருக்கும். இன்று துர்கை வழிபாடு நன்மை தரும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் கடன் வாங்காமல் சமாளித்துவிட முடியும். பிள்ளைகள் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். நண்பர்கள் வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்றாலும் அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. வியாபாரத்தில் பணியாளர்கள் முரண்டு பிடித்தாலும் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. இன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்று.

தனுசு ராசி அன்பர்களே!

சகோதரர்களால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். பொறுமை அவசியம். நீண்டநாள்களாக பிள்ளைகள் கேட்டுக்கொண்டிருந்ததை வாங்கித் தந்து அவர்களை மகிழ்ச்சியடையச் செய்வீர்கள். கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத் துச் செல்லவும். வியபாரத்தில் பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கக்கூடும். இன்று நீங்கள் ஆஞ்சநேயரை வழிபடுவது நன்று.

மகரராசி அன்பர்களே!

எந்த விஷயத்திலும் பொறுமையுடன் சிந்தித்துச் செயல்படவேண்டிய நாள். குடும்பத்து உறவினர்களுடன் வீண்விவாதம் செய்யாமல் இருப்பதன் மூலம் மனஅமைதி கிடைக்கும். நண்பர்களுக்காக செலவு செய்ய நேரிடும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்ட பிணக்குகள் நீங்கும். சகோதரர்களால் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். நரசிம்மர் வழிபாடு நலம் சேர்க்கும்.

கும்பராசி அன்பர்களே!

உற்சாகமாகச் செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவை களை நிறைவேற்ற செலவு செய்ய நேரிடும் என்பதால், கையிருப்பு கரையும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிகளுக்கு ஆதரவாகவும் உதவிகரமாகவும் இருப்பார். பணிச்சுமை அதிகரித்தாலும் சோர்ந்துவிடாமல் செய்து முடிப்பீர்கள். வியாபாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும். சக வியாபாரி களால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். பைரவரை வழிபடுவது நன்று.

மீனராசி அன்பர்களே!

புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண் டாகும். வாழ்க்கைத்துணை உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வார். பிற்பகலுக்கு மேல் சகோதரர் களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்களால் குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கையாக இருக்கவும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிடவும் விற்ப னையும் லாபமும் கூடுதலாக இருக்கும். இன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்று.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!