கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் புதிதாக 1 லட்சம் வீடுகள் கட்ட ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசின் 2025-26-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை, சட்டசபையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த 14-ம் தேதி தாக்கல் செய்தார். அதில் 2025-26-ம் ஆண்டில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 1 லட்சம் புதிய வீடுகள் ரூ.3,500 கோடியில் கட்டும் பணிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், பட்ஜெட் அறிவிப்பின்படி கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 2025-26ம் ஆண்டில் 1 லட்சம் புதிய வீடுகள் கட்ட ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.