இன்றைய ராசி பலன்கள் ( மார்ச் 22 சனிக்கிழமை 2025 )

‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் மார்ச் 22-ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.

குரோதி வருடம் பங்குனி மாதம் 7 ஆம் தேதி சனிக்கிழமை 22.03.2025 சந்திர பகவான் இன்று தனுசு ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 01.07 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி.இன்று இரவு 11.58 வரை மூலம். பின்னர் பூராடம்.கிருத்திகை ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷ ராசி அன்பர்களே!

இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வழக்கமான காரியங்களி லும் கூடுதல் கவனம் தேவை. கணவன் – மனைவிக்கிடையே வீண் வாக்குவாதம் ஏற்படக்கூடும். ஒருவரையொருவர் அனுச ரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகள் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் அதிகரிக்கும் பணிச்சுமையின் காரணமாக சோர்வு ஏற்படும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படும். சிவபெருமானை வழிபட சிரமங்கள் குறையும்.

ரிஷப ராசி அன்பர்களே!

கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்ச்சி அடைவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண் டாகும். அரசாங்கக் காரியங்கள் சாதகமாக முடியும்.  அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். சக ஊழியர்கள் இணக்கமாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். இன்று தட்சிணாமூர்த்தியை வழிபடுவதால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மிதுன ராசி அன்பர்களே!

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லை கள் நீங்கும். முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகள் கேட் டதை வாங்கித் தருவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியம் அனுகூலமாக முடியும். சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படும். அலுவலகத்தில் சக ஊழியர்களிடையே உங்கள் கௌரவம் உயரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுத லாக இருக்கும். துர்கையை வழிபடுவதன் மூலம் முயற்சிகளில் வெற்றி பெறலாம்.

கடக ராசி அன்பர்களே!

முயற்சிகளில் வெற்றி உண்டாகும். சிலருக்கு உறவினர்கள் வகையில் எதிர் பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. வாகனத்தில் செல்லும்போது சற்று கவனமாக இருக் கவும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். சிலருக்குக்  குலதெய்வப் பிரார்த்தனையை நிறை வேற்றும் வாய்ப்பு ஏற்படும். பிள்ளைகளால் சங்கடங்கள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் வழக்க மான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். சிவபெரு மானை வழிபடுவதால் பயணங்கள் சாதகமாக முடியும்.

சிம்ம ராசி அன்பர்களே!

மனதில் சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். குடும்ப விஷயமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். தாய்மாமன் வழியில் சுபச்செய்தி வரும். உறவினர்கள் வருகை யால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவுமிருக்காது. உடல் ஆரோக்கியத் தில் மட்டும் சிறிது கவனம் தேவை. அலுவலகத்தில் மற்றவர்களின் வேலையையும் நீங்கள் சேர்த்துப் பார்க்கவேண்டி வரும். வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். ஆஞ்சநேயரை வழிபடுவதன் மூலம் மன அமைதி உண்டாகும்.

கன்னி ராசி அன்பர்களே!

தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். தாயின் உடல் ஆரோக்கியம் மேம்படும். நீண்ட நாள்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் அதிகாரி களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபட்டு இன்றைய நாளைத் தொடங்கினால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

துலா ராசி அன்பர்களே!

இன்று எதிலும் வெற்றியே கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதற்கு ஏற்ற நாள். சகோதர வகையில் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். தாயின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். அம்பிகை வழிபாடு அளவற்ற நன்மைகளைத் தருவதாக இருக்கும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். உறவினர்கள் வகையில் புதிய ஆடை, ஆபரணங் களின் சேர்க்கை உண்டாகும். சகோதர வகையில் ஆதாயம் ஏற்படும். ஆனால், புதிய முயற்சிகள் எதுவும் வேண் டாம். பயணத்தின்போது கவனம் தேவை. கணவன் – மனைவிக்கிடையே அந்நி யோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே இருக்கும். குலதெய்வத்தை மானசீகமாக வழிபடுவதன் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

தனுசு ராசி அன்பர்களே!

உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். தேவையான பணம் இருந்தாலும் தேவையற்ற செலவுகளும் ஏற்படுவதால், கையிருப்பு கரைவதுடன் சிலருக்குக் கடன் வாங்க நேரிடும். தாய்மாமன்  வழியில் செலவுகள் ஏற்படும். தாயின் தேவையை நிறைவேற்ற சற்று அலைச்சல் ஏற்படும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதன் காரணமாக மனதில் சோர்வு ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகளால் சஞ்சலம் ஏற்படக்கூடும். ஷீர்டி சாய்பாபாவை வழிபட்டு நாளைத் தொடங்கினால் பல வகைகளிலும் அனுகூலம் உண்டாகும்.

மகரராசி அன்பர்களே!

எதிர்பாராத பணவரவு உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். ஆனால், உடல் நலனில் கவனம் தேவை. வெளியூர்ப் பயணம் தவிர்ப்பது நல்லது. தாய்வழி உறவினர்கள் வகையில் சுபச்செலவுகள் ஏற்படும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் அதிகமாக இருக்கும். மகாலட்சுமி வழிபாடு அதிர்ஷ்ட வாய்ப்புகளை ஏற்படுத்தும்.

கும்பராசி அன்பர்களே!

அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் சற்று இழுபறிக்குப் பின்னர் முடிந்துவிடும். தந்தை வழியில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். சகோதர வகையில் எதிர்பாராத செலவு ஏற்படும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். வேங்கடேச பெருமாளை வழிபடுவதன் மூலம் நன்மைகள் அதிகரிக்கும்.

மீனராசி அன்பர்களே!

பல வகைகளிலும் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். புதிய முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். வாழ்க்கைத்துணைவழி உறவினர் களால் ஆதாயம் ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகம் உண்டாகும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் சக ஊழியர்களின் உதவியுடன் முடித்துவிடுவீர்கள். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். முருகப்பெருமானை வழிபட்டு நாளைத் தொடங்கு வதன் மூலம் நற்பலன்கள் அதிகரிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!