‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் மார்ச் 16-ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.
குரோதி வருடம் பங்குனி மாதம் 2 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 16.03.2025 சந்திர பகவான் இன்று கன்னி ராசியில் பயணம் செய்கிறார். இன்று மாலை 04.35 வரை துவிதியை. பின்னர் திரிதியை.இன்று காலை 11.27 வரை அஸ்தம். பின்னர் சித்திரை.சதயம் பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
மேஷ ராசி அன்பர்களே!
புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. பிற்பகலுக்கு மேல் உறவினர்கள் வருகை சில சங்கடங்களை ஏற்படுத்தினாலும், பாதிப்பு எதுவும் இருக்காது. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பணிச்சுமை குறைவதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். வியாபாரம் வழக்கம் போலவே இருக்கும். ஓம் நமசிவாய என்னும் மந்திரத்தைச் சொல்லி வேலைகளைத் தொடங்குவத மூலம் தடைகள் மறையும்.
ரிஷப ராசி அன்பர்களே!
அரசு தொடர்பான காரியங்களில் வெற்றி கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் ஏற்படும். தாயின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்ச்சி அடைவீர்கள். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். சக ஊழியர்கள் அனுசரணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பர். திருப்பதி வேங்கடாசலபதியை வணங்கி வழிபாடு செய்ய நற்பலன்கள் அதிகரிக்கும்.
மிதுன ராசி அன்பர்களே!
உற்சாகமான நாள். புதிய முயற்சிகளை காலையிலேயே தொடங்கி விடுவது நல்லது. சிலருக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக அமையும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் அகலும். வீரபத்திரரை மனதில் நினைத்து வழிபட எதிரிகளின் தொல்லைகள் முற்றிலும் தீரும்.
கடக ராசி அன்பர்களே!
குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்படும். வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. மாலையில் குடும்பத்துடன் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதன் காரணமாக மனம் சற்று சோர்ந்து காணப்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் இணக்கமாக நடந்துகொள்வது அவசியம். பிரச்னைகள் முழுவதும் தீர முருகப் பெருமானை வழிபாடு செய்யுங்கள்.
சிம்ம ராசி அன்பர்களே!
காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வாழ்க்கைத்துணைவழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். ஆனால், உடல்நலனில் சற்று கவனம் தேவைப்படும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். தாயின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள். அதிகாரிகளின் ஆதரவால் சலுகைகள் கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். மற்றவர்களின் பொறாமைப் பார்வையால் கெடுதல் நிகழாமலிருக்க விநாயகப்பெருமானை வணங்கி இந்த நாளைத் தொடங்குங்கள்.
கன்னி ராசி அன்பர்களே!
மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். முடிவுகளைத் தெளிவாகச் சிந்தித்து எடுப்பீர்கள். இளைய சகோதரர்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள். சிலருக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் சக ஊழியர்கள் உங்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள். சிலர் கேட்கும் உதவியைச் செய்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். மேலும் நல்லதெல்லாம் நடப்பதற்கு மகான்களை வணங்கி இந்த நாளைத் தொடங்குங்கள்.
துலா ராசி அன்பர்களே!
நாள் முழுவதும் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. ஆனால், புதிய முயற்சிகளைக் கண்டிப்பாகத் தவிர்த்துவிடவும். சிலருக்கு வெளியூர்களில் இருக்கும் கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும். மாலையில் விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். மற்றவர்களின் சொந்த விஷயங்களில் தலையிடவேண்டாம். வியாபாரத்தில் பணியாளர்களால் செலவுகள் ஏற்படும். சுவாமி ஐயப்பனை வணங்கிவிட்டு வேலைகளைத் தொடங்க அனைத்து நலன்களும் உண்டாகும்.
விருச்சிக ராசி அன்பர்களே!
இன்று காரியங்கள் முடிவதில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டாலும் அவை நன்மையாக முடியும். மனதில் அடிக்கடி சோர்வு ஏற்பட்டு விலகும். தாய்வழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக் கூடும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படும். அலுவலகப் பணியின் காரணமாக அலைச்சலும் சற்று அசதியும் உண்டாகும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். தொல்லைகள் நீங்கி நன்மைகள் உண்டாக அம்பிகை மனதால் வழிபட்டு செயல்களைத் தொடங்குவது நல்லது.
தனுசு ராசி அன்பர்களே!
அதிர்ஷ்டகரமான நாள். பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு விலகி அந்நியோன்யம் அதிகரிக்கும். தாயின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைப்பது மகிழ்ச்சி தருவதாக இருக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். திருமால் வழிபாடு செய்வது நன்மையை உண்டாக்கும்.
மகரராசி அன்பர்களே!
உற்சாகமான நாளாக இருக்கும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். ஆனால், சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். சிலருக்கு எதிர்பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு ஏற்படும். தந்தையுடன் இருந்து வந்த கருத்துவேறுபாடு நீங்கி, தந்தையின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் பணிகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். வியாபாரம் வழக்கம்போலவே காணப்படும். ஶ்ரீ தட்சிணாமூர்த்தியை மனதில் நினைத்து வணங்கி வழிபட தொல்லைகள் அகலும்.
கும்பராசி அன்பர்களே!
மற்றவர்களுடன் பேசும் போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். தேவையற்ற பேச்சுகளைத் தவிர்க்கவும். உறவினர்கள் கடுமையாகப் பேசினாலும் பொறுமை அவசியம். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களை நம்பி பணிகளை ஒப்படைக்கவேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் பிரச்னை ஏற்பட்டாலும் பொறுமை அவசியம். விற்பனையும் சுமாராகத்தான் இருக்கும். விநாயகப் பெருமானின் ஸ்லோகம் ஒன்றைச் சொல்லிக்கொண்டேயிருப்பதன் மூலம் பிரச்னைகள் எளிதில் தீரும்.
மீனராசி அன்பர்களே!
புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது. இன்று எந்த விஷயத்திலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். மற்றவர்களுடன் விவாதம் செய்ய நேரிட்டால் விலகிச் செல்வது நல்லது. உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. அதிகாரிகள் கடுமையாகப் பேசினாலும் பொறுமை காப்பது நல்லது. வியாபாரத்தில் சக வியாபாரிகளால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். பொறுமை அவசியம். நரசிம்மர் வழிபாடு செய்ய வேண்டிய நாள்.